இந்தியாவின் உன்னதி ஹூடா, கிரண் ஜார்ஜ் ஒடிசா பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின் டன் தொடர் ஒடிசாமாநிலம் கட்டாக்கில், பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் உன்னதி ஹூடா 18, இஷாராணி 21, மோதினர்.. 31 நிமிடம் நீடித்த போட்டியில் உன்னதி 21–17, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 25, இந்தோனேஷியாவின் முகமது யூசுப் 19, ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் மோதினர். ஒரு மணி நேரம், 5 நிமிடம் நீடித்த போட்டியில் முதல் செட் 21-14 , , 2வது செட்டை 13-21 , 3வது செட்டில் எழுச்சி கண்ட கிரண், 21-16 ,எனக் கைப்பற்றி சாம்பியன் ஆனார்.
0
Leave a Reply