25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இந்திய முன்னாள் தடகள (ஓட்டம்) வீராங்கனை பி.டி. உஷா கணவர் காலமானார். பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய முன்னாள் தடகள (ஓட்டம்) வீராங்கனை பி.டி. உஷா கணவர் காலமானார். பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்தார்.

கேரளாவை சேர்ந்த 'இந்திய தடகள ராணி' என்று அழைக்கப்படும்,இந்திய முன்னாள் தடகள (ஓட்டம்) வீராங் கனை ,பி.டி. உஷாவின் கணவர் ஸ்ரீனிவாசன் 67, நேற்றுகோழிக்கோடுவில் காலை, உள்ள தனது வீட்டில் ஸ்ரீனிவாசன் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போதும் அவரை காப்பாற்ற முடிய வில்லை. 

 பி.டி. உஷா ஆசிய விளையாட்டு (4 தங்கம், 7 வெள்ளி), ஆசிய சாம்பியன்ஷிப் (14 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம்) போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். கடந்த 2022, ஜூலையில் ராஜ்யசபா எம்.பி.,யான இவர், 2022, டிசம்பரில் இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ.,) தலைவராக தேர்வானார்.

பி.டி. உஷாவின் கணவர் ஸ்ரீனிவாசன் 67, முன் னாள் மத்திய அரசு பணியாளர். இளம் வயதில்,   தேசிய கபடி அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஓய்வுக்கு பின், பி.டி. உஷாவின் தடகள பயிற்சி பள்ளியின் இணை நிறுவனர், பொருளாளராக இருந்தார்.

பிரதமர் மோடி, பி.டி. உஷாவை தொடர்பு கொண்டு ,ஸ்ரீனிவாசனின் மறைவு செய்திக்கு ,தனது இரங்கலை தெரிவித்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News