25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சூழலை காக்க களமிறக்கப்படும் மீன்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சூழலை காக்க களமிறக்கப்படும் மீன்கள்.

மெத்தில் மெர்குரி ( Methyl mercury ) மிக  மோசமான நச்சுப்பொருள்.நிலக்கரியை எரிக்கும் போது இது  வெளிப்படும். அதே போல் தொழிற்சாலை கழிவுகளிலும் இருக்கும். ‎அவற்றை சுத்திகரிக்காமல் நீர்நிலைகளில் கொட்டு வதால் அங்கு வாழும் மீன்களின்  உடல்களில் நுழைகிறது. இந்த மீன்களை மனிதர்கள் உட்கொண்டால், அவர்களு டைய உடலிலும் இந்த நச்சு சேர்ந்து விடும்.

இது நரம்பு மண்டலத்துக் கும் ஆபத்தானது. எனவே இந்தக் கழிவை அகற்றுவதற் கான சிறந்த வழியை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். தற்போது ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த மக்வாரிபல்கலை ( Macquarie university ) ஆய்வாளர்கள் ஜீப்ரா மீன்க னையும் சில பூச்சிகளையும் கொண்டு, இந்தக் கழிவுகளை நீக்கலாம் என்று கண்டறிந் துள்ளனர். அதாவது, முதலில்மீன்கள், பூச்சிகளின் டிஎன் ஏவில் ஈ.கோலை (E. coli) பாக்டீரியாவின் மரபணுக்க ளைச் செலுத்துவர் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட  மரபணுக்களைஉடைய மீன்கள், நீர்நிலை களில் உள்ள மெத்தில் மெர் குரியை உட்கொண்டு அதைச் சாதாரண பாதரச வாயுவாக மாற்றிவிடும்.

இந்த வாயு மெத்தில் மெர் குரியை விடக் குறைவான ஆபத்தையே ஏற்படுத்தும். இந்தப் பாதரசம் மீன்களின் உடலில் தாங்காது என்பதால், மீன்களுக்கும் பெரிய அள வில் பாதிப்பில்லை. இந்த மீன்களை உரிய நீர் நிலை களில் நேரடியாகப் பயன் பாட்டிற்குக் கொண்டு வருவ தற்கு முன்பாக. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.அவற்றில் வெற்றி பெற் றால் மட்டுமே இவற்றை நாம் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News