பிள்ளைகளிடம் சொல்ல வேண்டியவை / சொல்லக் கூடாதவை.
| பிள்ளைகளிடம் சொல்லக் கூடாதவை
படிக்கலன்னா உருப்படாம போயிடுவ.
உழைக்கலன்னா பிச்சைதான் எடுக்கணும்.
பணம் இல்லாட்டி ஒரு நாள் உன்னை யாரும் மதிக்க மாட்டாங்க.
நீ எல்லாம் எச்சில் இலை எடுக்க, தட்டு கழுவ தான் லாயக்கு.
பெயில் ஆகிட்டா, மாடு மேய்க்க அனுப்பப் போறேன்.
.காசு, பணம் இல்லன்னா யாரும் மதிக்க மாட்டாங்க.
நாங்க செத்ததுக்கப்புறம் ,நீ பிச்சைதான் எடுக்கப் போற.
வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊர் அடக்கும்.
பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?
உன்னோட திமிருக்கு நீ அழிஞ்சுதான் போகப்போற,
பிள்ளைகளிடம் சொல்ல வேண்டியவை
படிச்சா வாழ்க்கையில் நல்லா முன்னுக்கு வரலாம்.
உழைத்தால் நிறைய சம்பாதிக்க முடியும்.
பணம் சம்பாதித்தால் மதிப்புடன் வாழலாம்.
படிச்சு முன்னுக்கு வந்து நாலு பேருக்கு வேலை தரலாம்.
நீ இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவ, எல்லா தேர்விலும் தேர்ச்சி பெறுவ,உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.
எல்லா உறவுகனையும் ஒரே மாதிரி மதிப்பா நடக்கணும்.
அப்பா, அம்மா - நான் சம்பாதிச்சுட்டேன்' னு நீ சொல்லணும்.
படித்து ஊர் மெச்சும் அளவுக்கு வாழனும்.
.உழைப்பு, பணத்தின் மதிப்பை புரிய வைக்கும்.
உன்னோட திறமைக்கு நீ ரொப்பு சீக்கிரமாகவே முன்னுக்கு வந்துடுவ.
0
Leave a Reply