25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


புயல் வீசும் முன்பே தடுக்க முடியுமா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புயல் வீசும் முன்பே தடுக்க முடியுமா?

புயலின் தாக்குத லுக்கு தயாராக இருப்பதற்குப் பதிலாக அவை வேக மெடுப்பதற்கு முன்பே நிறுத்த முடிந்தால்  எப்படியிருக்கும். ஆஸ்திரேலிய தேசிய பல்கலை பருவநிலை விஞ்ஞானிகள்ஒருதுணிச்சலானஉத்தியைமுன்வைக்கின்றனர்.அதாவது, கடல் புயல்கள் நிலத்தை அடையும் முன்பே அவற்றை பலவீனப்  படுத்துவது மட்டுமல்ல, தடுக்கவும் செய்யலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

 புயல் உருவாக அவசியமான, சூரிய ஒளியைத் தடுக்கும். நுண் துகள்களை வளிமண்டலத்தில் துாவுவதுதான் உத்தி.

இந்தத் துகள்கள், ''ஸ்ட்ராடோஸ்பிய ரிக் ஏரோசல்' என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை தூவினால், சூறாவளிகள் உருவாக வாய்ப்புள்ள பகுதிகளில், வளி மண்டலத்தின் மேல் அடுக்கு, சற்றே குளிர்ச்சியடையும்.

இந்த முறை, கடலின் மேற்பரப் பின் வெப்பநிலையை சற்றே குறைத்து, சூறா வளியின் ஆரம்பகால வளர்ச்சியை சீர்குலைக் கலாம் என்று, கணினி ஒத்திகைகள் (சிமுலே ஷன்) காட்டுகின்றன. இது நெருப்பிற்குஆக்சிஜனை மறுப்பது போன்றது.

இந்த யோசனை, இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இருப்பி னும், இது 'காலநிலை பொறியியல்' (climate engineering) அல்லது புவி பொறியியல் (geoengineering) எனப் படும் வளர்ந்து வரும் துறையின் ஒரு பகுதி யாகும். திட்டமிட்ட, மனிதத் தலையீடு கள் மூலம், தீவிர காலநிலை நிகழ்வு களில், மாறுதல்களை ஏற்படுத்தும் உத்திகள் இவை.

வெப்பமயமாதல் காரணமாக சூறாவளி கள் மிகவும் அழிவுகர மானதாகவும் அடிக்கடி நிகழக்கூடியதாகவும் மாறி வருகின்றன. இதனால், புயல்கள் அதிக உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் நாசமாக்கும் வாய்ப் புகளும் அதிகரித்துள் ளன. அதற்கு முன் பாதுகாப்பு உத்திகளை ஆராய்வது அவசியம் என்கின்றனர் ஆராய்ச்சி யாளர்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News