25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


2021-23 ஆம் ஆண்டிற்கான ‘கலைமாமணி’ விருதுகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2021-23 ஆம் ஆண்டிற்கான ‘கலைமாமணி’ விருதுகள்.

 2021,2022 மற்றும்2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளைப் பெற90 கலைஞர்கள் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இலக்கியம், இசை, நடனம், நாடகம், சினிமா மற்றும் பாரம்பரிய கலைகள் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன

இலக்கியத்திற்கான பாரதியார் விருதைப் பெற இலக்கியவாதி என். முருகேச பாண்டியனும், இசைக்கான எம்.எஸ். சுப்புலட்சுமி விருதுக்கு‘பத்ம பூஷண்’ கே.ஜே. யேசுதாஸும், நடனத்திற்கான பாலசரஸ்வதி விருதுக்கு பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

. தமிழ்நாடு அரசின்‘கலைமாமணி’ விருதுகள் 2021,2022 மற்றும்2023 ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெற நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, விக்ரம் பிரபு, ஜெயா வி.சி. குகநாதன், கே. மணிகண்டன் மற்றும் எம். ஜார்ஜ் மரியன் ஆகியோர் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளின் கீழ் பட்டியலை மாநில அரசு புதன்கிழமை (செப்டம்பர் 24, 2025) வெளியிட்டது.

திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, கலை இயக்குனர் ஜே.கே. என்கிற எம். ஜெயக்குமார், ஸ்டண்ட் மாஸ்டர்‘சூப்பர்’ சுப்பராயன், பாடலாசிரியர் விவேகா, இசை இயக்குனர் அனிருத், பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குனர்‘சாண்டி’ என்கிற ஏ. சந்தோஷ் குமார் ஆகியோரும் இந்த ஆண்டுகளுக்கான‘கலைமாமணி’ விருதைப் பெற உள்ளனர்..

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலிருந்து சங்கங்கள் பிரிவின் கீழ் சென்னையில் உள்ள தமிழ் இசை சங்கம்(ராஜா அண்ணாமலை மன்றம்) விருதுக்கும், நாடகக் குழு பிரிவின் கீழ்‘கலைமாமணி’ எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடகக் குழு விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அக்டோபரில் சென்னையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். அங்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News