25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அரசின் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசின் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு

இராஜபாளையம் நகரில் அரசின் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு குறித்த அறிவிப்பை கொடுத்தும், கண்காணிப்பின்றி குறையாத பழக்கத்தினால் நீர் வரத்து தடங்களில் அடைப்பு ஏற்படுவதுடன் நீரின் தரம் மற்றும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.

ஆரம்பத்தில் இது குறித்து வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தவிர்க்குமாறும், உபயோகம் கண்டறிந்தால் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்டத்தில் இவற்றையும் மீறிமார்க்கெட்,பூக்கடை,இறைச்சிகடைகள்,ஓட்டல்கள்,ரோட்டோரகையேந்திபவன்கள் என அனைத்து நிலைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது .பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மழை நீர் வரத்து கால்வாய்கள், கண்மாய்கள், சாக்கடைகளில் கொட்டப்படுகின்றன.

இவை மழைகாலங்களில் ரோட்டோர வடிகாலை விட்டு சாக்கடைநீர் நடை பாதைகளில் தேங்கி நிற்பதும், கொசு உற்பத்திக்கும் ஏதுவாக மாறி வருகிறது. கடைகளில் விவசாயிகளுக்கு ஆதாரமான கண்மாய்களில் மலையளவு குவிந்து கேட்பாரற்ற நிலைக்கு விவசாயிகளை தள்ளி விடுகிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டினை அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்து தடை செய்வதுடன் தொடர் அபராத நடவடிக்கைகளை பின் பற்றுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News