25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முதுமையை வெல்லும் உறுதி மொழி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதுமையை வெல்லும் உறுதி மொழி.

தினமும் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டு. அவதிகளைச் சுலபமாக வெல்ல முடியும்.எனக்கு வயதாகிக் கொண்டு வருவதை உணர்கிறேன். சீக்கிரமே முதுமையை எட்டி விடுவேன். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் குணம் எனக்கு வந்துவிடக் கூடாது. குறிப்பாக, எல்லா விஷயங்களைப் பற்றியும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஏதாவது கருத்து சொல்லியே ஆக வேண்டும்,என்ற உணர்வு எனக்கு எழக்கூடாது.

எல்லோரது தவறுகளையும் திருத்துவதுதான் என் வேலை' என்ற நினைப்பு எனக்கு வரக்கூடாது. எனது அனுபவமும் அறிவும் பொக்கிஷம். அறிவுரை என்ற பெயரில் எல்லோரிடமும் அதை வாரி இறைத்துவிட மாட்டேன்.நீள நீளமான வாக்கியங்கள் தவிர்த்து. ஒற்றை வார்த்தையில் எதையும் சொல்லும் பக்குவம் வர வேண்டும்.

என் கஷ்டங்களையும் வலிகளையும் பற்றி எல்லோரிடமும் புலம்பாமல், அடுத்தவர் கஷ்டங்களையும் காதுகொடுத்துக் கேட்கும் பொறுமை பெற வேண்டும்.எல்லாமே ஞாபகத்தில் இருக்க வேண்டும் என்றில்லை. மகிழ்ச்சியான நினைவுகள் மட்டும் வேண்டும். துயரமான தருணங்களை என் ஞாபக மறதி நோய் எடுத்துக் கொள்ளட்டும்.

நானும் தவறுகள் செய்யக்கூடிய எளிய மனிதப்பிறவிதான் என்றநினைப்பு எனக்கு எப்போதும் இருக்கட்டும். குடும்பத்தில் வாக்குவாதங்களை அது தவிர்த்துவிடும்.எல்லோருக்கும் கருணை காட்டும் மனம் வேண்டும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் எண்ணம் வேண்டும். அடுத்தவரின் சிறந்த குணங்களைக் கண்டறிந்து பாராட்டும் தாராள உள்ளம் வேண்டும். யாரையும் அதிகாரம் செய்யும் முரட்டு குணம் மட்டும் வேண்டாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News