நாட்டின் முதல் 'அயன்மேன் 5i50 டிரையத்லான்’ போட்டி
'5i50’ டிரையத்லான்' போட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 'அயன்மேன்' அமைப்பு இணைந்து, கிழக்கு கடற்கரை சாலை, முட்டுகாடு பகுதியில் ,சர்வதேச அளவில் ஒலிம்பிக் தூரமான 51.50 கி.மீ அடிப்படையாகக் கொண்டு இப்போட்டி வடிவமைக்கப்பட்டது. 1.5 கி.மீ கடல் நீச்சல், 40கி.மீசைக்கிள்பயணம், 10 கி.மீ ஓட்டம் ஆகிய மூன்றும் இதில் அடங்கும். கடினமான அயன்மேன் 70.3' மற்றும் முழு தூர அயன்மேன் போட்டிகளில் பங்கேற்போருக்கு சிறந்த அனுபவமாக அமையும்.
இந்தியா இப்போட்டியை, ஆசியாவில் மூன்றாவது நாடாகவும், உலகளவில் ஆறாவது நாடகாவும் நடத்துகிறது. போட் டியில், 17 வெளிநாட்டு வீரர்கள், 83 பெண்கள் என, 529 பேர் உற்சாகமாக பங்கேற்றனர்.
40 கி.மீ., சைக்கிள் போட்டி, கோவளம் கடற்கரை முதல் நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் வழியாக, எம்.ஜி.எம்., ரிசார்ட் வரையும்,10 கி.மீ., ஒட்டம், எம்.ஜி.எம்., ரிசார்ட்டில் துவங்கி, கிழக்கு கடற்கரையில் மாயாஜால் வரையிலும், 6- 16 வயதுடைய சிறுவர்களுக்கான 'அயன்கிட்ஸ்' பந்தயமும் நடந்தது.
போட்டியை துணை முதல்வர் துவங்கி வைத்து "உலக தரமுடையபோலந்துக்கு கோப்பைவிளையாட்டைநடத்தும் திறன் மீண்டும் தமிழகம் நிரூபிக்கப்பட்டள்ளது. போட்டியை, சென்னையில் நடப்பது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமையாகும்" என்றார்.
0
Leave a Reply