AI மற்றும் தரவு மையங்களுக்கான அதிகரிக்கும் செலவுகளால், IT துறையில் புதிய வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாக Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் ஊழியர்களுக்கான செலவுகளை AI மற்றும் தரவு மைய முதலீடுகளுக்கு மாற்றுவதும், சர்வர் மற்றும் மெமரி விலைகள் உயர்வதும் இதற்கு முக்கிய காரணங்கள் என அவர் கூறினார். மேலும், AI மூலம் மென்பொருள் உற்பத்தி அதிகரித்தாலும், ஏற்கனவே மென்பொருட்கள் நிறைந்த சந்தையில் கூடுதல் தேவையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
AI நிறுவனங்களின் அதிகப்படியான மூலதனச் செலவுகள் எதிர்பார்க்கும் அளவு லாபத்தைத் தருமா என்பதிலும் வேம்பு சந்தேகம் தெரிவித்தார். தொழில்நுட்ப வளர்ச்சி பொருட்களின் விலையைக் குறைத்தாலும், மக்களிடம் அவற்றை வாங்கத் தேவையான வருமானம் இருப்பதை உறுதி செய்வது பொருளாதாரத்திற்கு பெரிய சவாலாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
0
Leave a Reply