25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.17 இலட்சம் மதிப்பிலான பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.17 இலட்சம் மதிப்பிலான பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் (01.09.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ்  ரூ.17 இலட்சம் மதிப்பிலான பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார்.தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை பேரிடர் அவசர காலங்களில் உடனடி மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.அதன்படி, மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பேரிடர் கால பாதுகாப்பு உபகரணங்களான தலைக்கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள், தீயணைப்பான்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளின் போது, மீட்பு பணிகளின் பயன்பாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படும் ட்ரோன்களும் (எண்ணம்-2) மற்றும் அலைபேசி சமிக்சை அல்லாத பகுதிகளில் பயன்படுத்தத் தக்க வாக்கி டாக்கிகளும் (எண்ணம்-6 ஜோடிகள்) என மொத்தம் ரூ.17 இலட்சம் மதிப்பில் 17 வகையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கொள்முதல் செய்யப்பட்டுள்ள பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒப்படைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் திரு.சந்திரகுமார், தனி வட்டாட்சியர்(பேரிடர் மேலாண்மை) திரு.லோகநாதன், உதவி தீயணைப்புத்துறை அலுவலர், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News