வெந்தயக் கீரை புலாவ்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கப்
வெந்தயக் கீரை - 1 கட்டு (சுத்தம் செய்தது)
பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மசாலா பொருட்கள்: பிரிஞ்சி இலை 1, பட்டை 1, கிராம்பு 2, ஏலக்காய் 1
நெய் அல்லது எண்ணெய் - 2 மேஜை கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பாசுமதி அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
குக்கரில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
மசாலா பொருட்கள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து மசிய வதக்கிய பின் வெந்தயக் கீரை சேர்க்கவும்.
கீரை சுருங்கியதும் ஊறவைத்த அரிசி மற்றும் தேவையான அளவு
தண்ணீர் (1கப்புக்கு 1.5 கப்) ஊற்றவும்.
உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால் மணமான
வெந்தயக் கீரை புலாவ் தயார்.
0
Leave a Reply