25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


பொன்னியின் செல்வன் 2ம் பாகம்  நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ( APR 28TH)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ( APR 28TH)

பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2 படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் கைப்பற்றியுள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் லைகா நிறுவனமே நேரடியாக வெளியிடுகிறது.   

இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய பொன்னியின் செல்வன் 2 அட்வான்ஸ் புக்கிங்கில் எதிர்பார்த்ததை விடவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக முதல் வாரத்திற்கான டிக்கெட் புக்கிங் மூலம் மட்டும் இதுவரை 17 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது. முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதுண்டு. அதன்படி, நள்ளிரவு 1 மணி, அல்லது அதிகாலை 3, 4, 5 மணிக்கெல்லாம் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும். ஆனால், பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு சிறப்புக் காட்சி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் திரையிடப்படுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்

.பொங்கலுக்கு வெளியான துணிவு படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்கச் சென்ற அஜித் ரசிகர் விபத்தில் உயிரிழந்தார். இதேபோல் அடிக்கடி அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகவே பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை என சொல்லப்படுகிறது , டிக்கெட் கட்டணங்கள் அதிகமாக வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வசூலிக்கும் என சினிமா விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் 2 திரையிடப்படவுள்ளது. இதனையடுத்து முதல் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News