25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Oct 31, 2025

வெண் தொண்டை மீன்கொத்தி  பறவை.

வெண் தொண்டை மீன்கொத்தி, தனித்துவ அழகுள்ள பறவையினங்களில் ஒன்று .வயல்வெளி, காட்டுப்பகுதி என எங்கும் வசிக்கும். இவை பளபளக்கும் நீல இறகுகள் உடையது. பழுப்பு நிற மார்பு, வெண் தொண்டை மற்றும் செந்நிற அலகு சிறப்பான தோற்றம் தரும். நீல இறகு, தெளிந்த வானத்தையும், மார்பில் பழுப்பு நிறம் மண்ணை பிரதிபலிக்கிறது. இவை இயற்கையுடன் இணைப்பை வெளிப்படுத்தும்.மீன்களோடு பூச்சி, பல்லி, தவளை, சிறு பாம்புகளை உண்ணும். மரக்கிளையில் அமர்ந்து, கூர்மை பார்வையுடன் கண்காணித்து, திடீரென நீரில் மூழ்கி மீனை பிடிக்கும். இதன் வேட்டைத் திறன் வியப்பு ஏற்படுத்தும். தனித்துவக் குரலில் பாடும். ஆண்டு முழுதும் இனப்பெருக்கம் செய்யும். மரம், மண் பொந்தில் கூடு கட்டி, ஏழு முட்டைகள் வரை இடும். இந்த பறவையினம் தெற்காசியா முதல் மத்திய கிழக்கு வரை பரவியுள்ளது. இந்தியாவில் பல்லுயிர் பெருக்க மகத்துவத்தை உணர வைக்கும் உயிரனங்களில் ஒன்றாக உள்ளது.

Oct 31, 2025

சீனாவில் கொசுவை கொல்ல உருவாக்கப்பட்ட’ பாட்டான் மேட்சிக்ஸ் ‘ என்ற கருவி .

சீனாவில் உருவாக்கப்பட்ட' பாட்டான் மேட்சிக்ஸ்' என்ற கருவி,கொசுவை குறிவைத்துக்  கொல்வதற்காகவே உரு வாக்கப்பட்டது. இந்தக் கருவி, லிடார் (MR) உணரிகள் மூலம். பறக்கும் கொசுவின் அளவு, துரம், மற்றும் திசை ஆகியவற்றை மூன்று மில்லி விநாடி களுக்குள் கண்டறியும். பிறகு ஒரு சிறப்பு லேசர் கற்றையை செலுத்தி, ஒரே நொடியில் 30 கொசுக்கள் வரை அழித்துவிடும்.இதில் இருக்கும் லேசர், மிகத் துல்லியமாக கொசுக்களை கட்டுப்படுத்துவதில் ஒரு புரட்சியை ஏற்படுத்த உள்ளது.மனிதர்களுக்கு ஆபத் தில்லாதது என்ற தரச் சான்று பெற்ற இந்தக் கருவி, நீர்ப்புகாதபடி, வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை வீட்டிற்குள் மட்டுமல்ல. வெளியேயும் நிறுவமுடியும். இதன் அடிப்படை மாடல், 3 மீட்டர் துாரம் வரையிலும், ப்ரோ மாடல் 6 மீட்டர் தூரம் வரையிலும் கொசுக்களை தாக்கும். இதன் விலை ரூ. 40,102 முதல் ரூ. 53,898 ரூபாய் வரை இருக்கும்.மனிதர்கள் அல்லது செல்லப்பிராணிகளுக்கு அருகில் லேசர் பாய்வதைத் தடுக்க ஒரு ரேடார்  பாதுகாப்பு அமைப்பு இதில் பொருத்தப்பட்டுள்ளது.ஆனாலும், இந்த லேசரின் சக்தி மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்கள் குறித்து சில விமர்சனங் கள் இருக்கவே செய்கின்றன. இந்தக் கருவி பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டால்,  கொசுக்களுக்கு எதிராக ஒரு புதிய ஆயுதம் நமக்குக் கிடைக்கும்.

Oct 31, 2025

ஆஸ்ட்ரோலோபிதீகஸ் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய மனித இனத்தைச் சேர்ந்த தொல்லெச்சம்.

புதிய மனித இனத்தைச் சேர்ந்த தொல்லெச்சத்தை எத்தியோப்பியாவில் ஆய்வாளர்கள் கண் டறிந்துள்ளனர். 26.5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான 10 பற்கள் இங்கு கிடைத்துள்ளன. இந்தப் புதிய இனத்திற்கு ஆஸ்ட்ரோலோபிதீகஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Oct 30, 2025

எல்லாவற்றிலும் ,எங்கும் ரசித்து வாழ கற்றுக்கொள் .

 காட்டு மூங்கில் துளைகளில் காற்று எழுப்பும் அழகு ஓசையைக் கேட்பதற்கு, ஓடும் ஆற்றின் சலசலப்புச் சத்தம் கேட்க ரசனை வேண்டும்.அன்றாட வாழ்வில், சாப்பிடுவது, காபி குடிப்பது, காதல் மிக்க தாம்பத்யம், குழந்தைகளுடன் விளையாட்டு என எல்லாவற்றிலும் வேகம் அல்லது அவசரம் இல்லாமல் ரசித்து வாழ்தலே இன்பம். குறிப்பிட்ட விஷயத்தின் மீது சுவை கொள்ளுதல் ரசனை எனப்படும். ரசனை கொண்ட ஒருவரே ரசிகன் அல்லது ரசிகை எனப்படுவார். ரசம் என்பதற்கு 'சாறு' சொல் சுவை, கலை உணர்வு எனப் பொருள்குற்றால அருவியில் ஆனந்தமாக குளிப்பது.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை நிதானமாக ரசிப்பது.தஞ்சை கோபுர அழகை ரசிப்பது.நெல்லையப்பர் கோயிலின் துாண்களின் வரும் பலவித சப்தங்கள்.தென்காசி கோயில் வாசலில் நம்மை உள்ளே போக வைக்கும் வெளியே தள்ளும் தென்றல் காற்றை உணர்தல்.மதுரை மீனாட்சியம்மனின் மாணிக்க மூக்குத்தியின் அழகு.சிருங்கேரி சாரதாம்பாளின் ஆபரணங்களின் அழகு.காஞ்சி காமாட்சியின் மடித்து உட்கார்ந்த நிலை அழகு. காருகுறிச்சி நாதஸ்வரம், லால்குடி வயலின், பாலமுரளி கச்சேரி. கட்டபொம்மனாக நடித்த சிவாஜியின் வீர வசனம். என எங்கும் ரசனைக்கு இடமுண்டு. அதற்கான நேரம், இடம், ரசிக்கக் கூடிய மனம் வேண்டும். அதுதான் கடவுள் தரும் கொடை. பாரதியார் அதையே 'ரசத்தில் தேர்ச்சி கொள்' என்கிறார்.பாரதியாருக்கு சுற்றிலும் எத்தனை விதமான முட்டுக்கட்டைகள்?போதிய வருமானம் இன்மை, குடும்பப் பிரச்னை, அரசின் கண்காணிப்பு, ஊரெங்கும் பித்தன் என்ற ஏளனம் எந்தளவிற்கு ரசனை இருந்தால் அவர், 'ரசத்திலே தேர்ச்சி கொள்' என எழுதிஇருப்பார். 

Oct 29, 2025

'க்ஸ்வி லாஸ்' எனப்படும் கோணல் காடு.

ஐரோப்பிய நாடான போலந்து, நோவே ஜர்னோவா கிராமத்தில்,'க்ஸ்வி லாஸ்' எனப்படும்,கோணல் காடு அமைந்துள்ளது. இங்கு,400 பைன் மரங்கள். தரைப்பகுதியில் வடக்கு நோக்கி வளைந்து, பின் நிமிர்ந்து வளர்ந்திருக்கும், காட்சி வியப்பில் ஆழ்த்துகிறது.இந்த மரங்கள்9அடி வரை வளைந்து பின் நெடிதாக நிற்கின்றன. வழக்கமான பைன் மரங்கள் அடர்ந்த காடும் உள்ளது.இந்த மரங்கள் பெரும் புயலால் வளைந்ததாக கூறப்பட்டது. புவி ஈர்ப்பு விசையால் வளைந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.ஆனால் விஞ்ஞானிகள் இதை மறுக்கின்றனர். ஏனெனில் புவி ஈர்ப்பு விசை கீழ்நோக்கியே இழுக்கும்.இந்த பகுதி விவசாயிகள், படகு கட்டுவதற்காக,1930ல் மரங்களை செயற்கையாக வளைத்து இந்த பகுதியில் வளர்க்க முயன்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இதுபரவலாக ஏற்கப்பட்டுள்ளது.இரண்டாம் உலகப் போரில், ஐரோப்பிய நாடான ஜெர்மனி,1939ல் போலந்தைக் கைப்பற்றிய போது, விவசாயிகளின் செயல்பாடு தடைபட்டு, திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.இதுபோன்று மரங்களை வளைத்து வளர்ப்பது சாத்தியமா என்பதற்கு அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள,"ஜில்ராய் கார்டன்' முன் உதாரணமாக உள்ளது. அங்கு, இது போல் வளைந்து, வளர்ந்துள்ள மரங்கள் உள்ளன.போலந்தில் உள்ள கோணல் காடு, அதன் தனித்துவத்தால் உலகப் புகழ் பெற்றுள்ளது. அதைபோலந்து அரசு பாதுகாக்கப்பட்ட இயற்கை சின்னமாக பராமரித்து வருகிறது.

Oct 29, 2025

தாவரங்களில் உள்ள புரதம் ,மாமிசப் புரதம், இரண்டு வித புரதங்களையும் நம் உடல் ஒன்று போலவே ஏற்கிறது.

தாவரங்களில் உள்ள புரதம் மாமிசப் புரதத்தை விட தரம் குறைந்தது என்று நம்பப் பட்டது. ஆனால் சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இலினொய்ஸ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இரண்டு வித புரதங்களையும் நம் உடல் ஒன்று போலவே ஏற்கிறது என்று தெரியவந்துள்ளது.

Oct 28, 2025

சென்னை வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி சுலபம்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம் .மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். 

Oct 27, 2025

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள தர்மஜ் என்.ஆர்.ஐ., கிராமம்.

.நாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், என்.ஆர்.ஐ., என அழைக்கப்படுகின்றனர். குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் தர்மஜ் கிராமம் உள்ளது. 2011 சென்செஸ் படி மக்கள்தொகை10,429. இக்கிராமத்தை சேர்ந்த1700 குடும்பத்தினர் பிரிட்டனிலும்,800 குடும்பத்தினர் அமெரிக்காவிலும், பலர் கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிலும் வாழ்கின்றனர். இதனால் இது என்.ஆர்.ஐ., கிராமம்' என அழைக்கப்படுகிறது. இவர்கள் இணைந்து தங்கள் கிராமத்தில், சாலை, குடிநீர் உள்ளிட்ட நகரத்துக்கு இணையாக வசதிகளை உருவாக்கியுள்ளனர். இங்கு 13 அரசு, தனியார் வங்கிகள் உள்ளன.

Oct 25, 2025

. மும்பையின் குடிசைப் பகுதிகளிலிருந்து வணிக வெற்றியின் உச்சங்கள் வரை, சாஜனின் கதை .இப்போது ரூ. 20,83,00,00,00,000 நிகர மதிப்புடையவர்.

ரிஸ்வான் சாஜனின்.16 வயதில் தந்தையை இழந்த அவர், தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக புத்தகங்கள் விற்பது, பட்டாசு வெடிப்பது மற்றும் பால் விநியோகம் செய்வது போன்ற பல வேலைகளை மேற்கொண்டார்.1993 ஆம் ஆண்டில், அவர் டானூப் குழுமத்தை நிறுவினார், இது ஒரு சிறிய கட்டுமானப் பொருட்கள் வணிகத்திலிருந்து மத்திய கிழக்கு முழுவதும் வீட்டு அலங்காரம், ரியல் எஸ்டேட் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பன்முகப்படுத்தப்பட்ட சாம்ராஜ்யமாக வளர்ந்தது.மும்பையில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே,16 வயதில் தந்தையை இழந்த பிறகு, நிதி நெருக்கடியை எதிர்கொண்டார். தனது குடும்பத்தை ஆதரிக்கத் தீர்மானித்த அவர், புத்தகங்கள், பட்டாசுகள் விற்றார், பால் கூட விற்று, தனது எதிர்கால வெற்றிக்கு அடித்தளமிட்டார்.ஒரு நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்த சாஜன், கடின உழைப்பின் மதிப்பை ஆரம்பத்திலேயே கற்றுக்கொண்டார். தனது கல்வியை முடிக்கும் போது பல வேலைகளைச் சமநிலைப்படுத்தியதன் மூலம், அவர் தனது தொழில்முனைவோர் பயணத்தை வளர்த்துக் கொண்டார்.1993 ஆம் ஆண்டு, கட்டுமானப் பொருட்களில் ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கிய சாஜன், டானூப் குழுமத்தை நிறுவினார். அவரது தொலைநோக்குப் பார்வையும் இடைவிடாத முயற்சியும் ,இந்த எளிமையான வணிகத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப்பெரிய கட்டுமானப் பொருள் நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது.2019 ஆம் ஆண்டு வாக்கில், டானூப் குழுமம் ஆண்டுக்கு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயைப் பதிவு செய்து, சந்தையில் அதன் ஆதிக்கத்தைக் குறித்தது. ஒரு சிறிய தொடக்க நிறுவனமாகத் தொடங்கிய இது, சாஜனின் தலைமையின் கீழ் ஒரு முக்கிய நிறுவனமாக மாறியது.கட்டுமானப் பொருட்களுடன் மட்டும் சஜன் நின்றுவிடவில்லை. அவரது வழிகாட்டுதலின் கீழ், டானூப் குழுமம் வீட்டு அலங்காரம், ரியல் எஸ்டேட் மற்றும் பிற துறைகளில் பன்முகப்படுத்தப்பட்டது. இன்று, ஓமன், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இந்த நிறுவனம் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.ரிஸ்வான் சாஜனின் விடாமுயற்சி பலனளித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதார அமைச்சகத்தின்படி,2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.20,830 கோடி) நிகர மதிப்புடன், அவர் துபாயின் பணக்கார இந்தியர்களில் ஒருவராக உள்ளார். மும்பையின் குடிசைப் பகுதிகளிலிருந்து வணிக வெற்றியின் உச்சங்கள் வரை, சாஜனின் கதை ஆர்வமுள்ள தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது. அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை எந்த தடையையும் கடக்க முடியும் என்பதை அவர் நிரூபிக்கிறார். ரிஸ்வான் சாஜன் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் அதற்கு அப்பாலும் மற்றவர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். அவரது வாழ்க்கை, அசாதாரண வெற்றிக்குத் தாழ்மையான தொடக்கங்கள் தடையல்ல என்பதை நினைவூட்டுகிறது.

Oct 25, 2025

2029 ஆம் ஆண்டுக்கு முன்பு, சிந்து நதியின் நீர் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீரை அடையும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

2029 ஆம் ஆண்டுக்குள் இந்தியா அனைத்து நீரையும் திருப்பிவிடும் ,வட இந்தியாவின் தாகத்தைத் தணிக்கும் மிகப்பெரிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது .2029 ஆம் ஆண்டுக்கு முன்பு, சிந்து நதியின் நீர் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீரை அடையும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கோடிக்கணக்கானமக்களுக்கு தண்ணீர் வழங்கும் 14 கி.மீ நீள சுரங்கப்பாதை மற்றும் 113 கி.மீகால்வாய் கட்டப்படும்.மிகப்பெரியவிஷயம்என்னவென்றால், இந்தநீர்இனிபாகிஸ்தானை நோக்கிப் பாயாது.ஒவ்வொரு துளியும் இந்தியாவின்' நிலம் மற்றும் விவசாயிகளின் தாகத்தைத் தணிக்கப் பயன்படுத்தப்படும். 

1 2 ... 52 53 54 55 56 57 58 ... 103 104

AD's



More News