25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Mar 25, 2026

ரூ.900 கோடி நிறுவனத்தை உருவாக்கிய 23 வயது பெண், அஞ்சலி சர்தானா.

புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனம் ஒன்று. தொடங்கப்பட்ட ஒரே ஆண்டுக்குள் ரூ.900 கோடி மதிப்பை எட்டியுள்ளது.இதைத் தொடங்கியவர், அஞ்சலி சர்தானா என்ற 23 வயது இளம்பெண்.இவரது ப்ரோண்டோ நிறுவனம், கர்நாடக மாநிலம் பெங்களூருவை தளமாகக்கொண்டது.பயிற்சிபெற்றவீட்டுப்பணியாளர்களையும், பயனர்ளர்களையும்இணைக்கும்இந்நிறுவனம், புதிதாக 230 கோடி நிதி திரட்டியுள்ளது., தொடங்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் ரூ.922 கோடி மதிப்பை எட்டி யுள்ளது.இந்த நிறுவன செயலியின் மூலம், வீட்டைத் துடைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், சமையலறை மற்றும் குளியலறை சுத்தம் செய்தல், துணி துவைத்தல் மற்றும் பிற வீட்டு வேலைகளுக்கு பணியாளர்களை முன்பதிவு செய்யலாம்.தற்போது இந்த செயலி, டெல்லி தலைநகரப் பகுதி, சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத்,உள்ளிட்ட பெருநகரங்களில் பயன்பாட்டில் உள்ளது. அஞ்சலி சர்தானா, கடந்த 2024-ம் ஆண்டில்அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் இளநிலை உயிரியல் பட்டம் பெற்றார்."ஒன்பது மாதங்களுக்கு முன்னர், டெல்லி அருகே குருகிராமில் உள்ள எங்கள் மையத்தில் செயல்பட்டோம். எங்களிடம் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவை கிடைப்பதை உறுதி செய்ய உழைத்துக் கொண்டிருந்தோம். சில நாட்கள் நாங்கள் தரையிலும் படுத்து உறங்கி யிருக்கிறோம்.அப்போது நாளொன்றுக்கு சுமார் 170 முன்பதிவுகள் வரும். இப்போது ஒரு நாளைக்கு 18 ஆயிரத்துக்கும் அதிகமான முன்பதிவுகளை பெறுகிறோம்.எங்களிடம், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ப்பணிப் புள்ள, மகிழ்ச்சியான பணியாளர்கள் உள்ளனர். கடந்த 3 மாதத்தில் மட்டும் நாங்கள் 300 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளோம்" என்று அசாதாரணசாதனை படைத்த பெருமையுடன் கூறுகிறார்,அஞ்சலி சர்தானா.

Mar 25, 2026

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

கடந்த சில மாதங்களாகவேAI தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக காணப்படுகிறது. விஞ்ஞான தொழில்நுட்பத்தின் புதிய பரிணாம வளர்ச்சியாகAI பார்க்கப்படுகிறது.. இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டுவதற்குAI தொழில்நுட்பத்தை பலரும் பயன்படுத்துகிறார்கள். இதை வைத்து இறந்தவர்களை கூட அவர்கள் பேசுவது போல காட்ட முடியும் என்பதால் பல துறைகளிலும் இதை பயன்படுத்துகிறார்கள்..ஒருபக்கம் சாப்ட்வேர் துறையில்Coding எழுதுவதற்கும் கூடAIRobot களை வல்லுனர்கள்பயன்படுத்துகிறார்கள். இனி வரும் காலத்தில்AIதவிர்த்து விட்டு மனிதன் வாழவே முடியாது என்கிற நிலை உருவாகும் என சொல்லலாம். அதோடுAI வந்துவிட்டதால் மனிதர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும் எனவும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது..இந்நிலையில்தான், அதானி குழுமம் AI துறையில் முதலீடு செய்ய முன் வந்திருக்கிறது. இந்தியாவில் Hypersacale AI Centre-களை அமைக்க சுமார் 9 லட்சம் கோடி மதிப்பிலான மெகா முதலீட்டு திட்டத்தை அதானி குழுமம் அறிவித்திருக்கிறது. டெல்லி AI Impact மாநாட்டை ஒட்டி அதானி குழுமம்இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.மேலும், 2035ம் ஆண்டுகளுக்குள் இதை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்திருக்கிறது.. இது தவிர சுமார் 13 லட்சம் கோடி மதிப்பில் கம்ப்யூட்டர் சர்வர்கள் உற்பத்தி மற்றும் கிளவுட் சேவைகளில் முதலீடு செய்யவுள்ளதாகவும் அதானி குழுமம் அறிவித்திருக்கிறது.

Mar 25, 2026

போர் பதட்டத்தில் தனது உயிரை பணயம் வைத்து ,169 இந்தியர்களை பத்திரமாக அழைத்து வந்த, 23 வயதான விமானி தீபிகா அதானா.

போர் பதட்டத்தில் தனது உயிரை பணயம் வைத்து ,169 இந்தியர்களை பத்திரமாக அழைத்து வந்த, 23 வயதான விமானி தீபிகா அதானா.iஅம்மா நான் போய் வருகிறேன் திரும்பி வருவேன் என்று தெரியவில்லை,, என்று கூறி போர் பதட்டத்தில்,,! தனது உயிரை பணயம் வைத்து 169 இந்தியர்களை பத்திரமாக அழைத்து வந்த,! 23 வயதான விமானி தீபிகா அதானா,,

Mar 25, 2026

இனி 45 நாட்களுக்கு பிறகுதான் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்

ஒரு (வீட்டு) சிலிண்டர் வாங்கிய பின் அடுத்த சிலிண்டரைப் பதிவு செய்யும் கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு பின்னரே புக்கிங் செய்ய முடியும்." (முன்பு இது 21 நாட்களாக இருந்தது.கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு பின்னரே புக்கிங் செய்ய முடியும் (முன்பு இது 25 நாட்களாக இருந்தது) இந்த மாற்றம் எரிவாயு தட்டுப்பாட்டால் அல்ல. அச்சத்தால் மக்கள்: தேவைக்கு மேல் புக்கிங் (Panic Booking) செய்வதை தடுப்பதற்காகவே" என்று மக்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

Mar 24, 2026

Ghiblify மோகத்தால் கதறிய சாட்ஜிபிடி CEO!

சமீபத்தில் சாட்ஜிபிடி அறிமுகம் செய்தGhiblify ட்ரெண்ட் ஆகியுள்ள நிலையில் இதனால் தற்போது சாட்ஜிபிடியே சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி ஏஐ உலக அளவில் பலரால் பயன்படுத்தப்படும் ஏஐ மென்பொருளாக உள்ளது. பலரும் கோப்புகள் தயாரிப்பு, ஆவணங்கள் சரிபார்த்தல், கோடிங் என பல பயன்பாடுகளுக்கு சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் சாட்ஜிபிடிGhiblify என்ற புதிய போட்டோ பில்டர் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. ஜப்பானின் புகழ்பெற்ற அனிமே பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிப்ளியின் அனிமே திரைப்படங்கள் மிகவும் புகழ்பெற்றவை. பயனாளர்கள் தங்கள் போட்டோக்களை சாட்ஜிபிடியில் பதிவேற்றி Ghiblify செய்து கேட்டால், அது அந்த அனிமே பாணியிலேயே போட்டோக்களை மாற்றி தருகிறது.இது உலகளாவிய ட்ரெண்டிங் ஆனதால் தற்போது ஏராளமான இணையவாசிகள் சாட்ஜிபிடிக்குள் புகுந்து தங்கள் புகைப்படங்களை கிப்ளிஃபை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் சாட்ஜிபிடியின் மெயின் சர்வரே ஆட்டம் கண்டுள்ளது. ஏராளமான பயனாளர்கள் இந்த ஃபில்டரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால் சாட்ஜிபிடியின் செயல் வேகம் குறைந்துள்ளதுடன், பலருக்கு போட்டோக்கள் சரியாக ஜெனரேட் ஆவதும் இல்லை. இதை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சாட்ஜிபிடியின் நிறுவனர் சாம் ஆல்ட்மேன், போட்டோக்களை ஏராளமானோர் கிப்ளிஃபை செய்து வருவதால் சாட்ஜிபிடி சர்வர்கள் ஓவர்லோட் ஆவதாகவும், ஜிபியு உருகுவதாகவும் கூறி கிப்ளிஃபை செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள் என பயனாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Mar 24, 2026

"மோடி புதிய சாதனை”

புதிய சாதனையை படைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.இந்திய அரசாங்கத்தில் நீண்ட காலம் பதவி வகித்த நபர் என்ற சாதனையை படைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.குஜராத் முதலமைச்சராகவும், பாரத பிரதமராகவும் விடுமுறையே எடுக்காமல் 8,931 நாட்கள் அரசாங்க பதவி வகித்து சாதனை.

Mar 23, 2026

குழந்தைகளை மண்ணில் விளையாட விடுங்கள்.

மண் என்பது இயற்கையின் மிகவும் முக்கியமான கொடை. இந்த மண் இல்லாமல்உலகம் எப்படிப் போக முடியும்? மண்ணுடன் குழந்தைகளின் உறவு மிகவும்அதிர்வானதாகும். மண்ணை பார்த்த்தில் ஆரவாரம் செய்து விளையாடும் குழந்தைகள்பலரும் இருக்கின்றனர். இன்று பெரும்பாலானோர் குழந்தைகளாக இருக்கும்போது,மண்ணில் உருண்டு விளையாடி மகிழ்ச்சியடைந்த அனுபவத்தை நினைத்துபெருமிதம் கொள்கிறோம். எத்தனை விலையுயர்ந்தவிளையாட்டுப்பொருட்கள்இருந்தாலும், இயற்கையின் இலவச விளையாட்டுப் பொருளாக மண் அதிகமகிழ்ச்சியை தரும்.குழந்தைகள் மண்ணில் விளையாடுவதன் மூலம் பல நன்மைகள் பெறுகின்றனர்.கடற்கரையில் அல்லது மணலில் விளையாடும் போது, அவர்கள்மனம்சந்தோஷமாகஇருக்கின்றது.மண்ணில்வீடுகட்டுவது, கோபுரம்அமைத்தல், குச்சிமறைத்துகண்டுபிடித்தல், எலிவளை அமைத்தல் போன்ற விளையாட்டுகள் குழந்தைகளின்உடல் தசைகளை வலுப்படுத்துகின்றன. அதோடு, மண்ணில் விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் மனதைஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். அவர்கள் ஒற்றுமையைஉணர்ந்தும்,விதிமுறைகளைபின்பற்றும்பழக்கங்களைவளர்க்கின்றனர்.இதுஅவர்களதுபடைப்பாற்றலைவும், கற்பனை திறனையும் அதிகரிக்க உதவுகிறது.இப்போது நவீன விளையாட்டுப் பொருட்கள் அதிகமாக வந்தாலும், மண்ணால்செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் தான் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானஅனுபவங்களை கொடுக்கும். எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்குமண்ணில் விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும்.

Mar 23, 2026

90 வயது ரஷ்ய பெண் மருத்துவர் ஆலா லோவோஸ்க்கினா.

இதுவரை10 ஆயிரம்அறுவைசிகிச்சைகளுக்குமேல்ஓர்உயிரிழப்பும்இன்றிசெய்துமுடித்துள்ள90 வயதுரஷ்யபெண்மருத்துவர்ஆலாலோவோஸ்க்கினா.

Mar 21, 2026

மொத்த வாழ்நாள் சேமிப்பான rs.34 கோடியைநன்கொடையாகஅளித்த 100 வயது டாக்டர் லட்சுமி பாய் .

பெண்களின் புற்றுநோயைகுணப்படுத்த100 வயதுடாக்டர்லட்சுமிபாய்தனதுமொத்தவாழ்நாள்சேமிப்பானrs.34 கோடியைநன்கொடையாகஅளித்தபோது, யாரும்அவரைப்பாராட்டியதில்லை.கோடிஸ்வரர்கள் தங்களிடம் இருக்கும் மிகுதியான பணத்தை தானம் செய்வது பெரிதல்ல. 100 வயதைத் தொட்ட ,டாக்டர் லட்சுமிபாய் , தன்னிடம் உள்ள மொத்த பணத்தையும் ,நன்கொடையாக அளித்திருப்பது மிகவும் மரியாதையுடன் பாராட்டத் தக்கது. அதுவும் இதை பலர் அறியாமல் கொடுத்திருப்பது மதிப்பிற்குரியது. டாக்டர் லட்சுமி பாய் கடைசி  காலத்தில் நிம்மதியாக, சுகமாக வாழ, நாங்கள் அனைவரும் கடவுளை பிரார்த்திக்கிறோம். 

Mar 21, 2026

பெண்கள் வாழ்க்கையில் உடை அணிவதில் தவிர்க்க வேண்டியவை..

1. இடத்துக்கு பொருந்தாத உடை அணிவது 2-மிக அதிகமாக உடல் வெளிப்படும் உடைகள் 3-மிகவும் tight அல்லது அசெளகரியமான drees 4-நடக்கவும் வேலை செய்யவும் கஷ்டமான உடைகள் 6- பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கும் outfit 6-சுயமரியாதை குறையும் வகை உடைகள் 7-மற்றவர்களை கவர்வதற்காக மட்டும் dress அணிவது 8- வேலை/படிப்புக்கு பொருந்தாத dressing 9-வயதுக்கும் சூழலுக்கும் ஒத்துப்போகாத உடைகள் 10."நான் comfortable இல்லை"னு தோனும் .dress.

1 2 ... 55 56 57 58 59 60 61 ... 130 131

AD's



More News