Indian Oil நிறுவனத்தின் 'Fuel@Call' ஆப் மூலம் ஆன்லைனில் பெட்ரோல் / டீசல் ஆர்டர் செய்யலாம்.நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்து விடுவார்கள்!பயணம் நிற்காது. Fuel Call App மூலம் இடத்திற்கே பெட்ரோல் டெலிவரி கிடைக்கும்.
விருதுநகர் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி உள்ளிட்ட 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை. 7845252525 ) வாட்ஸாப்ப்எண்ணிற்கு தேவையான சான்றிதழ் விவரம் மற்றும் ஆதாரங்களை அனுப்பினால், சான்றிதழ் நேரடியாக வாட்ஸ்அப்பிலேயே கிடைக்கும்.
ஆதார் அட்டை - 12 இலக்கம். பான் கார்டு - 10 எழுத்து. பாஸ்போர்ட் எண் - 8 எழுத்து. வாக்காளர் ID (EPIC) - 10 எழுத்து. IFSC குறியீடு - 11 எழுத்து. MICR குறியீடு - 9 இலக்கம். கிஸ்தின் - 15 இலக்கம். டெபிட் கார்டு எண்- 16 இலக்கம். கிரெடிட் கார்டு எண்- 16 இலக்கம். ATM கார்டு CW- 3 இலக்கம். TIN - 11 இலக்கம். MSME பதிவு எண் - 19 எழுத்து. EPF கணக்கு எண்- 22 எழுத்து. PPO எண் - 12 இலக்கம். LPG கஸ்டமர் ID - 17 இலக்கம். வாகனப் பதிவு எண் - 10 எழுத்து. TAN - 10 எழுத்து .
விருதுநகர் மாவட்ட மக்களுக்கு சென்னைக்கு நேரடி தினசரி ரயில் வசதி இல்லாததால், வாரத்தில் 3 முறை மட்டுமே இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ்சென்னை,எழும்பூர்,செங்கோட்டை ரயிலை தினசரி இயக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக தென்காசி, விருதுநகர், சிவகங்கை, திருச்சி தொகுதி,எம்.பி.க்கள் குரல் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என எதிர்பார்ப்பு உள்ளது.
செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும்.
அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-s துலேயே மறந்து வைத்துஇறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்தபேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்குஅழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள்.என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிப்பார்.
"கடைசி 8 மணி நேரத்தில் டிக்கெட் ரத்து செய்தால் கட்டணம் திருப்பி வழங்கப்படாது. 24 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் 50% பணம் திருப்பி வழங்கப்படும் 72 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் 25% பணம் பிடிக்கப்படும் 72 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்தால் முழு கட்டணம் வழங்கப்படும் புதிய நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும்" -இந்தியன் ரயில்வே
16363/16364 எர்ணாகுளம் - வேளாங்கண்ணிவாராந்திர விரைவு ரயில் எர்ணாகுளத்தில் |ஒவ்வொரு புதன் கிழமையும், வேளாங்கண்ணியில் இருந்து,ஒவ்வொரு வியாழன் கிழமையும் மார்ச் 18 முதல் எர்ணாகுளத்தில் இருந்து இயக்கம்.நிறுத்தங்கள்: கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கண்ணூர், மாவேலிக்கரை, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தாங்கோட்டா, கொல்லம் குண்டாரா, கொட்டாரக்கரா அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் சங்கரன்கோவில்,இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, , திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்.
கச்சா எண்ணெய் என்பது பூமியின் குறிப்பிட்ட ஆழத்தில் உள்ள பாறைகளில் இயற்கையாக கிடைக்கும் திரவ எரிபொருள் ஆகும். இதில் இருந்துதான் பெட் ரோல், டீசல் போன்றவை பிரித்து எடுக்கப்படுகின்றன. அதாவது, சுத்திகரிப்பு நிலையங்களில் 400 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பிரித்து எடுக்கும் நடைமுறையை செய்கிறார்கள். அதன் மூலம் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை கிடைக்கின்றன . பெட்ரோல்ல ட்ரோல், டீசல், எரிவாயுவை தரும் கச்சா எண்ணெய் இல்லை என்றால் உலகின் இயக்கம் நின்று விடும் என்ற அளவுக்கு அதன் தாக்கம் உள்ளதுஇதில் இருந்துரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக், பாலிமர், நைலான், சோப்பு என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோலிய துணை பொருட்கள் தயாராகின்றன. வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதன பொருட்களின் தயாரிப்பில் கூட பெட்ரோலிய பொருட்கள் கலந்துள்ளன. உலகின் பல்வேறு தொழில்கள் கச்சா எண்ணெயை நம்பி இருக்கின்றன .வெனிசுலா, ரஷியா போன்ற நாடுகளில் கச்சா எண்ணெய் வளம் அதிகம் உள்ளது. இதே போல் மத்தியகிழக்கு வளைகுடா நாடுகளிலும் கச்சா எண்ணெய் வளம் அதிகமாக உள்ளது. ஈரான்நாட்டில் முதல் வணிக எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பக்ரைன்உள்பட குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் போன்றவற்றில் பெருமளவு எண்ணெய் உற்பத்தி தொடங்கியது. இந்த நாடுகள் இன்றைக்கு உலகின் மிகப்பெரிய எண் ணெய் ஏற்றுமதி நாடுகளாக உள்ளன.
சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவிடக் கூடாது. சொந்த விவரங்களை யாரிடமும் பகிர கூடாது. தெரியாத நபர்களிடம் முகவரி எல்லாம் சொல்லக்கூடாது.. எந்த பிரச்சனையாக இருந்தாலும் வீட்ல சொல்லாமல் இருக்க கூடாது. யாரையும் நம்பி தனியே போக கூடாது.