தேவையான பொருட்கள் தக்காளி – 3பச்சை மிளகாய் – 3சின்ன வெங்காயம் – 10பூண்டு – 8 பல் மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்சாம்பார் பொடி – 2 ஸ்பூன்வடித்த சாதம் – ஒரு கப்கறிவேப்பிலை – ஒரு கொத்துமல்லித்தழை – 2 கொத்துஉப்பு – தேவையான அளவுதாளிக்க தேவையான பொருட்கள்எண்ணெய் – ஒரு ஸ்பூன்கடுகு – கால் ஸ்பூன்உளுந்து – கால் ஸ்பூன்செய்முறை-சின்னவெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகிய அனைத்தையும் உரலில் சேர்த்து இடித்துக்கொள்ள வேண்டும். மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் பல்ஸ் மோடில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்துவிட்டு, அதில் தக்காளியை கைகளால் இதனுடன் சேர்த்து பிசைந்துகொள்ளவேண்டும்.அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவேண்டும்.பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுந்து தாளிக்க வேண்டும். பின்னர் கைகளால் பிசைந்து வைத்துள்ள இந்த கலவையை அடுப்பில் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவேண்டும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் சாதத்தில் சுவை இருக்காது. தண்ணீரும் தெளித்துதான் விடவேண்டும். ஊற்றக்கூடாது.எண்ணெய்பிரிந்து வரும் பதத்தில்,அதில் வடித்த சாதத்தைசேர்த்து கிளறவேண்டும்., சுவையானதக்காளி சாதம் நிமிடத்தில் தயாராகிவிடும்.வாழைக்காய் வறுவல், CHIPS சைட்டிஷ் வைத்து சாப்பிடலாம்.சாம்பார்பொடிக்கு பதில், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.பச்சைமிளகாய்உங்கள்காரஅளவுக்குஏற்பசேர்த்துக்கொள்ளலாம்.தாளிக்கும்போதுதேவைப்பட்டால்முழுவரமிளகாயையும்சேர்த்துக்கொள்ளலாம்.
தேவையானவை: அவல் - ஒரு கப் , பொட்டுக்கடலை - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பால் - 3 கப், துருவிய வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை: அவல், பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும். அடி கனமான கடாயில் பால் ஊற்றி நன்றாக காய்ச்சவும். பிறகு தீயைக் குறைத்து, பொடித்த அவல் - பொட்டுக்கடலை சேர்த்துக் கிளறி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இறக்கும் சமயத்தில் துருவிய வெல்லம் சேர்த்துக் கலந்து இறக்கவும். வயதானவர் முதல் குழந்தைகள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்தக் கஞ்சியைத் தரலாம்.குறிப்பு: சிவப்பு அவல் கூட பயன்படுத்தலாம். அவலில் மண் இருக்கும் என்பதால் நன்கு சுத்தம் செய்து உபயோகிக்கவும்.
தேவையானவை: நன்றாகக் கழுவி, துருவிய காலிஃப்ளவர்-ஒரு கப், காலிஃப்ளவர் தண்டு - அரை கப் (பொடியாக நறுக்கியது), பால் ஒரு கப் , மிளகுத்தூள் - சிறிதளவு, கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று,பூண்டு - 5 பல், நெய் அல்லது வெண்ணெய் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப. - செய்முறை: காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும். 2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும். விருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள்தூவிக்கொள்ளலாம்.
தேவையானவை: வெண்டைக்காய் - 5 (பொடியாக நறுக்கவும்), தக்காளி,பெரிய வெங்காயம் - தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, காராபூந்தி - சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு நீர் - 2 கப் (பருப்பை வேகவைத்து வடித்த நீர்), சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் சிறிதளவு உப்பு தேவைக்கேற்ப. செய்முறை: வெண்டைக்காயைநறுக்கி, வெறும் கடாயில் வதக்கவும் (காயில் உள்ள வழவழப்பு நீங்கும்). வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கி, வெண்டைக்காயை சேர்க்கவும். இதனுடன் பருப்பு நீர், மஞ்சள்தூள் சேர்த்து, கொதி வந்ததும் உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். பரிமாறும் போது மல்லித்தழை தூவவும். மேலும் சுவைகூட்ட, சூப்பை கப்பில் ஊற்றும்போது மேலே காராபூந்தி தூவலாம்.
தேவையானவை: முருங்கைக்காய்- 2 (சதைப் பற்றுள்ளது), மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - ஒன்று, பாசிப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: முருங்கைக்காய், உருளைக்கிழங்கை, நறுக்கி, நீர் விட்டு,குக்கரில் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைக்கவும். முருங்கையின் சதையை சுரண்டி எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்துக்கொள்ளவும். பாசிப்பருப்பில் ஒன்றரை கப் நீர் ஊற்றி, குக்கரில் வேகவிட்டு மசித்து, தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். பருப்பு நீரில் மசித்த உருளைக்கிழங்கு, முருங்கை சதைப்பகுதியை போட்டு கரைக்கவும். இந்தக் கரைசலை வதங்கிய வெங்காயத்தில் ஊற்றி, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். உப்பு, தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.குறிப்பு: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், வெண்ணெய், நெய்க்குப் பதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். சூப் செய்யும்போது, எப்போதும் மிதமான தீயிலேயே செய்யவும். நடுநடுவே கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
தேவையானவை: துளசி இலை அரை கப், வெற்றிலை 4, கற்பூரவல்லி இலை - 2, புதினா இலை - கால் கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டுப் பல் - 2, சர்க்கரை - அரை டீஸ்பூன், உப்பு -தேவைக்கேற்ப.செய்முறை: கடாயில் நெய் விட்டு பூண்டு, நறுக்கிய வெங்காயத்தைவதக்கவும். எல்லா இலைகளையும் சுத்தமாகக் கழுவி இதனுடன் சேர்த்து வதக்கவும். இதில் நீர் விட்டு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு, அடுப்பை நிறுத்தி, இலைகளை தனியே எடுத்து மையாக அரைத்து, வேகவைத்த நீரில் மீண்டும் சேர்த்து, ஒரே ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். பரிமாறும்போது சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
தேவையானவை: பீன்ஸ் 50 கிராம், கேரட் - ஒன்று, முட்டைகோஸ் 100 கிராம், - வெங்காயத்தாள் - ஒன்று, அஜினமோட்டோ - அரை டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக் கேற்ப.செய்முறை: அனைத்து காய்கறிகளையும் மெலிதாக ஒரே அளவாக நீட்டமாக (தீக்குச்சி போன்ற துண்டுகளாக) நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து.அஜினமோட்டோ, உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். காய்கறி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சோயா சாஸ் சேர்த்து குறைந்த தீயில் வேகவிடவும். கொதிவரும்போது, சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து சூப்பில் சேர்க்கவும். இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.
தேவையானவை: மாம்பழக்கூழ் ஒரு கப், சர்க்கரை ஒன்றரை கப், நெய் - கால் கப். பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி, பாதாம் (தேவைப் பட்டால்) - சிறிதளவு.செய்முறை: அடி கனமான கடாயை சூடாக்கி, மாம்பழக்கூழ். சர்க்கரையைப் போட்டுக் கலந்து கிளறவும். நன்றாக இறுகி வரும்போது மாவுகளை கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி, நெய்யை அடிக்கடி விட்டுக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் இறக்கி முந்திரி, பாதாமை வறுத்துப் போடவும்.
தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பால், சர்க்கரை தலா அரை கப், கோவா, நெய் - தலா கால் கப், பாதாம், முந்திரி துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை தேங்காய் துருவலை பால் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில் தேங்காய் பால் விழுதைக் கொட்டி மிதமான தீயில் கிளறவும், சர்க்கரை சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். கெட்டியாகும் பதத்தில் நெய் சேர்த்துக் கிளறி பாதாம், முந்திரி துண்டுகளை நெய்யில் வறுத்து தூவவும்.
தேவையானவை: மைதா, நெய் - தலா இரண்டு கப், சர்க்கரை - 4 கப். ஜாதிக்காய் பொடி - கால் டீஸ்பூன், முந்திரிப்பருப்பு, பிஸ்தா தலா ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.செய்முறை: சர்க்கரையை அடிகனமான கடாயில் கொட்டி, மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும்வரை காய்ச்சவும். மைதாவை தண்ணீரில் கரைத்து சர்க்கரை பாகில் விட்டு. கட்டி தட்டாமல் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும், முந்திரி, பிஸ்தாவை நெய்யில் வறுத்து, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய் பொடியை போட்டு இறக்கவும். இதை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.