25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

Apr 11, 2025

அப்பள கூட்டு (papad curry)

தேவையானவை: உருளைகிழங்கு – 2,அப்பளம் - 8,கடலைப்பருப்பு -1/2கப்,கடுகு-1/4 ஸ்பூன்,சீரகம் - 1/4 ஸ்பூன்,மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்,மிளகாய் தூள் -1ஸ்பூன்,தனியாதூள்- 1/2 ஸ்பூன்,உப்பு-1ஸ்பூன்,வெங்காயம் -1,தக்காளி -1,பூண்டு - 3 பல்,கருவேப்பிலை – சிறிது,எண்ணெய் - 3 ஸ்பூன்செய்முறை : ஒரு குக்கரில் கடலை பருப்பு உருளைகிழங்கு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 கப் தண்ணீர் உற்றி இரண்டு விசில் விடவும். கடாயில் எண்ணெய் வைத்து அப்பளத்தை பொரித்து வைக்கவும்.பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும், வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ,தனியா தூள் ,உப்பு சேர்த்து கிளறவும் பின் அதில் வேகவைத்த கடலைபருப்பு வேகவைத்த தண்ணீருடன் வெந்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிடவும்.பொரித்து வைத்த அப்பளம் உடைத்து அத்துடன் சேர்த்து கிளறி பரிமாறவும்.

Apr 11, 2025

சுண்டைக்காய் கூட்டு .

தேவையானவை: சுண்டைக்காய் -2 கப்,பயத்தம் பருப்பு 1/2 கப்,சாம்பார் பொடி 1 டீஸ்பூன்மஞ்சள்தூள்ஒருசிட்டிகை,தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,பச்சை மிளகாய்-1,சீரகம் 1டீஸ்பூன்,உப்பு - 1/2 டீஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்,கறிவேப்பிலை- சிறிது சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)செய்முறை: சுண்டைக்காயின் காம்பைக் கிள்ளி விட்டு, இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும். பயத்தம் பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேக வைத்தெடுக்கவும்.ஒரு பாத்திரத்தில், சுண்டைக்காயைப் போட்டு, அதில் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அத்துடன் காய் மூழ்கும் அளவிற்கு தேவையான நீரைச் சேர்த்து வேக விடவும். காய் வெந்ததும் அத்துடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் கொதிக்க விடவும்.தேங்காய்த்துருவல், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மைய அரைத்து, கொதிக்கும் கூட்டில் சேர்த்துக் கிளறி விடவும்.கடைசியாக கடுகு ,வெங்காயம் ,கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.

Apr 11, 2025

அகத்திக்கீரை கூட்டு .

தேவையானவை :அகத்திக்கீரை - 1 கட்டு, பாசிப்பருப்பு - 50 கிராம் துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய்-3 கடுகு-1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு , தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும் பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் கீரையை போட்டு நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை கழுவிப் போட்டு நன்கு பிரட்டி விட வேண்டும் . பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும் கீரையானது நன்கு வெந்த பின் அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் அகத்திக்கீரை கூட்டு ரெடி!!

Apr 11, 2025

கோஸ் கூட்டு.

தேவையானவை:கோஸ் - 1 கப்,கடலை பருப்பு -1/2 கப், வெங்காயம் – சிறிது,பச்சை மிளகாய் -2,பெருங்காயம் – சிறிது,மஞ்சள் பொடி – சிறிது,கடுகு உளுந்து தாளிக்கசெய்முறை: கடலை பருப்பை மஞ்சள் பொடி பெருங்காயம் சேர்த்து வேகவிடவும்.கோஸ் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வேக வைக்கும் அதனுடன் வெந்த கடலை பருப்பை சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் .கடைசியில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் .இப்பொழுது கோஸ் கூட்டு ரெடி..

Apr 11, 2025

சௌ சௌ கூட்டு.

தேவையானவை:சௌ சௌ -1,வெங்காயம் – சிறிது,பச்சை மிளகாய் -2இஞ்சி – சிறிது,தக்காளி -1,பாசி பருப்பு - அரை கப்,உப்பு - சிறிது,கொத்தமல்லி இலை – சிறிது,தேங்காய் துருவல் -1 ஸ்பூன்கடுகு உளுந்து மற்றும் சீரகம் தாளிக்கசெய்முறை: சௌ சௌ வெங்காயம் தக்காளியை நறுக்கி கொள்ளவும்..அதனுடன் பாசி பருப்பையும் சேர்த்து வேகவைக்கவும். தேங்காயுடன் பச்சைமிளகாய் இஞ்சியும் சேர்த்து அரைத்து விழுதாக்கவும்.தேங்காய் விழுதை காயுடன் சேர்க்கவும் நன்கு வெந்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சேர்க்கவும்.கடைசியில் கொத்தமல்லியை சேர்க்கவும்.சௌ சௌ கூட்டு ரெடி.

Apr 04, 2025

சாட் மசாலா பொடி

தேவையானவை : சீரகம், தனி ஆம்ச்சூர் (மாங்காய் தூள் ) தூள், உப்பு தலா அரை கப், கருப்பு உப்பு, மிளகு தலா 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 15. செய்முறை: மேலே கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வெயிலில் நன்றாக காயவைத்து நைஸாக அரைத்தெடுத்தால் அதுதான் சாட் மசாலா பொடி.இந்தப் பொடியை பழங்களின்மீது தூவி சாப்பிடலாம். தயிர் பச்சடியோடு கலந்து பரிமாறலாம். பேல் பூரி, பானி பூரி ,வகைகளிலும் உபயோகிக்கலாம். எதனோடு சேர்த்தாலும் சுவை தூக்கலாக இருக்கும்.

Apr 04, 2025

வேர்க்கடலை பொடி.

தேவையானவை : வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை 2 கப், மிளகாய் வற்றல் ஒண்ணே கால் கப், மலை பூண்டு2(முழுதாக), உப்பு தேவைக்கு.செய்முறை: மிளகாயை  வெறும் வாணலியில், மிதமான தீயில் வறுத்தெடுங்கள். ஆறியதும் அதனுடன் மற்ற  பொருட்களை கலந்து நைஸாக அரைத்தெடுங்கள்.இந்த வேர்க்கடலை பொடியில் நல்லெண்ணெய் அல்லது நெய் கலந்து,சாதம்,இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டுக் கொண்டால் அபார  சுவை தரும். இதனை பதினைந்து நாட்கள் வரை  வைத்திருக்கலாம்.

Apr 04, 2025

எள் பொடி .

தேவையானவை : கருப்பு எள், உளுந்து தலா 1 கப், மிளகாய் வற்றல் 2 கப், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு தலா கால் கப், உப்பு தேவைக்கு, பெருங்காயம் ஒரு துண்டு, எண்ணெய் 2 டீஸ்பூன்.செய்முறை : உளுந்து, கடலைப் பருப்பு, துவரம் ருப்பு   இவற்றை வெறும் வாணலியில் சிவக்க  வறுத்தெடுங்கள். எள்ளை (வெறும் வாணலியில்) மொறுமொறுப்பாக பொரித்தெடுங்கள். எண்ணெயில் பெருங்காயத்தை பொரித்தெடுத்து விட்டு, மீதமுள்ன எண்ணெயில் மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுங்கள். வறுபட்ட பொருட்கள் அனைத்தும் ஆறியதும் உப்பு சேர்த்து கரகரப்பாக பொடித்து வையுங்கள்.இந்த எள் பொடியோடு நல்லெண்ணெய் கலந்து சாதம், இட்லி,தோசைக்கு தொட்டுக் கொண்டால சுவையாக இருக்கும். புளியோதரையில்இந்தப்பொடியைசிறிதளவுதூவிகிளறினால்சுவையாகஇருக்கும்.எள்பொடியைஒருமாதம்வரைவைத்துஉபயோகிக்கலாம்

Apr 04, 2025

கொள்ளு பொடி .

தேவையானவை : கொள்ளு 1 கப்,உளுந்து அரை கப், மிளகாய் வற்றல்  25, பெருங்காயம்1 துண்டு, கொப்பரை துருவல்  கால் கப், உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை: கொள்ளை சுத்தம் செய்து வெறும்வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுங்கள். எண்ணெயில் பெருங்காயத்தை பொரித்தெடுத்துவிட்டு, மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுங்கள். மீதமாகும் எண்ணெயில் உளுந்தை வறுத்தெடுத்துவிட்டு, கடைசியில் தேங்காயைப் போட்டு சிவக்க வறுத்தெடுங்கள்.வறுபட்ட அனைத்தும் ஆறியதும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து கரகரப்பாக பொடித்தெடுங்கள்.இந்தப் பொடியுடன் நல்லெண்ணெய் கலந்து சாதம், இட்லி, தோசை வகைகளுக்குத் தொட்டுக்கொண்டால்,சுவை பிரமாதமாக இருக்கும்.

Apr 04, 2025

தேங்காய் பொடி.

தேவையானவை :கொப்பரை துருவல்1 கப், உளுந்துஅரை கப், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு தலா கால் கப், பெருங்காயம் சிறு துண்டு, மிளகாய் வற்றல் 20, உப்பு தேவைக்கு, எண்ணெய்1 டேபிள் ஸ்பூன்.செய்முறை: தேங்காயை  வெறும் வாணலியில்  சிவக்க வறுத்தெடுங்கள். எண்ணெய் பெருங்காயத்தைப் பொரித்தெடுத்துவிட்டு  மிளகாய் வற்றலை வறுத்தெடுங்கள். மீதமாகும் எண்ணெயில் பருப்பு வகைகளை  ஒன்றாகப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்து ஆறியதும் உப்பு சேர்த்து  கரகரப்பாக அரைத்தெடுங்கள்.இந்த தேங்காய்ப் பொடியுடன் நெய்  கலந்து சாதம்,இட்லி, தோசையோடு  சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இந்தப் பொடியை பதினைந்து நாட்கள்  வரை வைத்திருக்கலாம்.

1 2 ... 42 43 44 45 46 47 48 ... 72 73

AD's



More News