பாரத், ஹெச்பி, இன்டேன் ஆகிய கேஸ் நிறுவனங்களின் சிலிண்டரை பேடிஎம் செயலி மூலம் முன்பதிவு செய்தால் ரூ.200 கேஷ்பேக்ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு பேடிஎம் செயலியில் 'கேஸ் சிலிண்டர் முன்பதிவு' விருப்பத்தை தேர்வு செய்து தகவல்களை நிரப்பி ப்ரோமோ குறியீட்டை பெற்று பயன்படுத்த வேண்டும்.
குறை பிரசவத்தில் பிறந்த சிசுவை இக்காலத்தில் இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்து பிழைக்க வைக்கிறார்கள். அக்காலத்தில் குறைப்பிரசவ சிசுவை வாழை இலையில் வைத்து மற்றோர் வாழை இலையால் போர்த்தி பாதுகாத்தார்கள்.அப்படி உயிர் வாழ இலை உதவியதால் ,அவ்விலையை வாழ இலை வாழை இலை என வழங்கலாயிற்று!
தாயிடம் அன்பாகப் பேசுங்கள், தந்தையிடம் பண்பாகப் பேசுங்கள், துணைவியிடம் உண்மையைப் பேசுங்கள், சகோதரியிடம் பாசமாகப் பேசுங்கள்,சகோதரனிடம் அளவாகப் பேசுங்கள், குழந்தையிடம் செல்லமாகப் பேசுங்கள், உறவினரிடம் பரிவாக பேசுங்கள், நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள், வியாபாரியிடம் கராராகப் பேசுங்கள், வாடிக்கையாளரிடம் நேர்மையாக பேசுங்கள், கடவுளிடம் மவுனமாக பேசுங்கள், அறிவாளியிடம் பணிவாகப் பேசுங்கள், எதிரியிடம் தைரியமாகப் பேசுங்கள்.பிறர் மனம் புண்படாதவாறு பேசுங்கள்.
மாற்றம் செய்த இரண்டு வங்கிகள்!*முக்கிய மாற்றங்கள்:UPI மூலம் ATM-ல் பணம் எடுத்தாலும், அது இப்போது "Free Limit” க் குள் சேரும்.இலவச வரம்பு முடிந்தால், ஒவ் வொரு பரிவர்த்தனைக்கும் ₹23 +வரி .தினசரி பணம் எடுக்கும் வரம்பு சில வங்கிகளில் குறைப்பு.Card இல்லாமலே QR Scan செய்து பணம் எடுக்கும் புதிய வசதி.முக்கிய வங்கிகள் எடுத்த முடிவுகள்:HDFC Bank - UPI பரிவர்த்தனையும் Free Limit-ல் சேர்க்கப்பட்டது.Punjab National Bank – தினசரி பணம் எடுக்கும் வரம்பு மாற்றம்.Jio payments Bank - Cardless QR withdrawal வசதி.
1. பணம் வந்ததும் செலவழிக்காதீங்க.2. கடன் வாங்கி வாழ நினைத்தால் உங்கள் நிலை மோசமாகிவிடும்.3. பிறர் பார்வைக்காக செல்வழிக்காதீங்க.4. வருமானத்தை விட ,ஆசை அதிகமாக இருந்தால் பணம் பறந்து போகும்.5.உண்மையான தேவைக்கு மட்டும் செலவிடுங்க.6.பாசாங்கு செலவுகள் பாதுகாப்பை சிதைக்கும்.7. பணம் வரும் வழியை கவனியுங்கள். போகும் வழியே உங்கள் நிலையை தீர்மானிக்கும்.8. ஆடம்பர வாழ்க்கை ஆழ்ந்த வறுமைக்கு வழிவகுக்கும்.9.நாளைக்காக சேமிக்க தவறாதீங்க.10.தேவையற்ற செலவுகளை தவிர்த்திடுங்கள்.
வீட்டு ஜன்னல்களுக்கு ,கரும் பச்சை அல்லது கருநீல நிற திரைச் சீலைகளை பயன்படுத்தினால், வெயிலின் உஷ்ணம் உள்ளே வருவது குறையும்.
ரேஷன் அட்டைதாரர்களுக்குTN அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் முன்னுரிமை ரேஷன் கார்டு பெற தகுதியற்றவர்கள். அவர்கள் உடனே தங்கள் கார்டை பொது ரேஷன் கார்டாக மாற்ற வேண்டும். இதை உறுதிப்படுத்த அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று கள ஆய்வு நடந்த உள்ளனர். விதிகளை மீறினால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.
உணவு, இனப்பெருக்கம், காலநிலைக்காக பறவைகள் வலசை (இடம் பெயர்தல்) செல்கின்றன.இடைநில்லாமல் ஆயிரக்கணக்கான கி.மீ., துாரம், கண்டங்கள் தாண்டி இலக்கை அடைகின்றன. இதற்காக பறவைகள் ஒரு யுக்தியை கடைபிடிக்கிறது என விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி சஹாரா போன்ற பாலைவன பகுதியில் இரவு நேரத்தில் பறக்கின்றன. இதுவே பகலில் எனில், வெப்பத்தில் இருந்து தப்பிக்க மேலும் உயரே பறக்கிறது. ஆனால் கடல் பகுதியில் மிக தாழ்வாக பறக்கிறது. அதிலும் சில பகுதியில், சில மீட்டர் உயரம் தான் வித்தியாசம் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
ஒருவருடன் பேசும்போது அடிக்கடி அவர்களது பெயரைப் பயன்படுத்திப் பேசுங்கள். ஒரு மனிதருக்குப் பிரபஞ்சத்திலேயே மிகவும் பிடித்தமான சத்தம் அவர்களது பெயர்தான். இது உடனடியாக உங்கள் மீது ஒரு நன்மதிப்பை உருவாக்கும்.நீங்கள் ஒருவரைச் சந்திக்கும்போது மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவர்களை வரவேற்றால், அடுத்த முறை அவர்கள் உங்களைப் பார்க்கும்போதும் அதே உற்சாகத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள்யாராவது உங்களிடம் ஒரு கேள்வி கேட்டு,அதற்கு அவர்கள் முழுமையாகப் பதில் சொல்லவில்லை என்று நீங்கள் கருதினால், பேசாமல் அவர்களது கண்களைப் பார்த்துக் கொண்டே இருங்கள். அந்த அமைதி அவர்களை சங்கடப்படுத்தும், இதனால் அவர்கள் மீதமுள்ள தகவலையும் தானாகவே சொல்லிவிடுவார்கள்.'உங்களுக்கு ஒரு பெரிய உதவி தேவைப்பட்டால், முதலில் ஒரு மிகச்சிறிய உதவியைக் கேளுங்கள் (உதாரணமாக: "ஒரு பேனா கிடைக்குமா?"). ஒருமுறை சிறிய உதவி செய்தவர், அடுத்த முறை நீங்கள் கேட்கும் பெரிய உதவியைச் செய்வதற்கான வாய்ப்பு 80% அதிகம்.
அமீரக அரசு விடுத்துள்ள அவசர 'சைபர்' எச்சரிக்கை!அமீரகத்தில் சைபர் தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளதால், கணினியில் உள்ள தரவுகளை அழிக்கும் 'வைப்பர்' மால்வேர் குறித்து அரசு எச்சரித்துள்ளது. பொதுமக்கள் தங்களதுமுக்கியத்தகவல்களைப்பாதுகாப்பாகப்பேக்அப்எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.