25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 28, 2026

மின்சார விரயத்தை குறைக்க…

செல்போன் சார்ஜர்கள் பயன்படுத்தாத நேரத்தில் ப்ளக்கில் இருந்து நீக்க வேண்டும்.ப்ளக் இணைந்திருந்தால் சிறிய அளவில் மின்சாரம் தொடர்ந்து செலவாகும்.இது தேவையில்லாத மின்சார விரயத்தை குறைக்கும்.

Apr 27, 2026

எளிய குளிர் பானங்கள்.

நீர் மோரில் இஞ்சி தட்டி போட்டு கருவேப்பிலை, கொத்துமல்லியை தூவிவிட்டு, அலுவலகம் செல்லும் போது ஒரு லிட்டருக்கு குறையாமல் கொண்டு செல்லுங்கள். காபி, டீ தவிர்த்துவிட்டு தாகம் எடுக்கும் போது எல்லாம் குடியுங்கள். எந்தவெய்யில் கால நோய்களும் அணுகாது. நீர் மோர் காவிரி வெள்ளம் போல dilute ஆக இருக்க வேண்டும்.ஒரு லிட்டர் தண்ணீரில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, சிறிது உப்பு போட்டு வைத்து கொள்ளுங்கள். அடிக்கடி தாகம் எடுக்கும் போது குடிக்கலாம். வெயில் காலத்திற்கு நல்ல  energy tonic. Artificial Cool drinks, ஐஸ்கிரீம் தவிர்த்துவிடுங்கள்

Apr 27, 2026

99 - 100GB வைஃபை...விருதுநகரில் அரசின் புதிய சலுகை!

விருதுநகர் மக்களே, இனிInternet பில் அதிகம் வரும் கவலை வேண்டாம். மத்திய அரசின்PMWANIWiFi திட்டத்தின் மூலம் குறைந்த கட்டணத்தில் இணைய சேவையை பெறலாம். மாதம் ரூ.99க்கு100GB டேட்டா வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்தால் வீட்டிலேயே வந்து அமைத்து தருவார்கள். 

Apr 27, 2026

ஆந்திராவில் ஒரு KGF தங்க சுரங்கம் .

ஆந்திர மாநிலத்தின் ஜொன்னகிரியில் பூமிக்கு அடியில் பெரிய அளவில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Geomysore Services நிறுவனம் அதை சுரங்கம் மூலம் எடுத்து உள்நாட்டு நகை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. ஹட்டி கோல்டு மைன்ஸுக்கு அடுத்ததாக செயல்படும் 2-வது தங்க சுரங்கமாக இது இருக்கும். இதனால் இறக்குமதி குறைந்து தங்க விலை குறைய வாய்ப்பு உள்ளது. அடுத்த மாதம் இது செயல்பாட்டுக்கு வரும் என தகவல்.

Apr 27, 2026

உலகின் டாப் 10 வங்கிகளில் இருப்பதை விட அதிகமாக,இந்திய குடும்பங்களிடம் ரூ.415 லட்சம் கோடி தங்கம்.

உலகின் டாப் 10 வங்கிகளில் இருப்பதை விட அதிகமாக, இந்தியக் குடும்பங்களிடம் மட்டும் சுமார் 415 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் குவிந்து கிடப்பதாக இந்திய தொழில் வர்த்தக சங்கமான அசோசெம் குறிப்பிட்டுள்ளது.'மறைந்து கிடக்கும் பொக்கிஷ'மான இதில் இருந்து ஆண்டு தோறும் வெறும் 2% முதலீடுகளாக மாறினால் கூட, 2047-க்குள் இந்தியா அசுர வளர்ச்சி அடையும் என அந்த அமைப்பு கணிப்பு.

Apr 27, 2026

"உடல் நுண்ணறிவு விழிப்பு" (Bodhic Awareness) 

கண்களை மூடி, மூச்சை இயல்பாக விடு. உன் கவனத்தை மெதுவாக கால் விரலிலிருந்து தலை வரை எடுத்துச் செல். எங்கு சுமை, வலி, தடை என உணருகிறாயோ – அந்த இடத்தில் 3 மூச்சுகள் ஆழமாக விடு. 10 நிமிடங்கள் இதைச் செய்தால் உடல் தானாக அதற்கான சிகிச்சைச் சிந்தனையை தொடங்கும். இதை "உடல் நுண்ணறிவு விழிப்பு" (Bodhic Awareness) என சித்தர்கள் அழைத்தனர்.

Apr 25, 2026

"உலகிலேயே 'காதலின் சிகரம்' என்று அழைக்கப்படும் இடம் எது?" .

ஒரு வகுப்பறையில், ஆசிரியர் குழந்தைகளிடம், "உலகிலேயே 'காதலின் சிகரம்' என்று அழைக்கப்படும் இடம் எது?" என்று கேட்டார்.வகுப்பு முழுவதுமே ஒரே குரலில், "தாஜ் மஹால்!" என்று முழங்கியது.ஆனால், ஒரே ஒரு மாணவன் மட்டும் "ராமர் சேது" (Ram Setu) என்று பதிலளித்தான்.ஆசிரியர் அவனை எழுந்து நிற்குமாறு கூறினார்."நீ என்ன சொல்ல வருகிறாய்...?"அந்தச் சிறுவன் எழுந்து நின்று பின்வருமாறு கூறினான்:"ராமர் சேதுவானது, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் தன் மனைவியின் சடலத்தைப் புதைப்பதற்காக அல்ல.மாறாக, தன் மனைவியை மீட்டு வருவதற்காகவே ஸ்ரீராமரால்கட்டப்பட்டது.ஸ்ரீராமர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு மனைவிக்கு மட்டுமே விசுவாசமாகஇருந்து, பெண்களின் கண்ணியத்தைப் போற்றிக் காத்தார். ஆனால், ஷாஜகானுக்கோ பலமனைவியரும், துணைவியரும், அடிமைப் பெண்களும் இருந்தனர்.ராமர் சேதுவானது, ஸ்ரீராமரின் படையில் இருந்த வீரர்களால் கட்டப்பட்டது. ஆனால் தாஜ்மஹாலோ, ஒரு பெரும் பஞ்சகாலத்தில் முகலாயர்களால் அடிமைகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களால் கட்டப்பட்டது.மேலும், அந்தச் சேதுப்பாலத்தைக் கட்டியவர்களுக்கு ஸ்ரீராமர் முழுமையான மரியாதையை அளித்தார்.'இனி உலகில் இது போன்றதொரு அதிசயம் வேறெங்கும் நிகழ்ந்துவிடக் கூடாது' என்பதற்காக, ஸ்ரீராமர் அந்தத் தொழிலாளர்களின் கைகளைத் துண்டிக்கவில்லை."ஆசிரியரும் மற்ற மாணவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்திய வரலாறு ஒரு புதிய கண்ணோட்டத்தில் 'மீண்டும் எழுதப்பட' வேண்டிய அவசியம் உள்ளது.இந்திய வரலாற்றை மீண்டும் எழுதுவதற்குத் துணைபுரியும் வகையில், தயவுசெய்து இதை அனைவருடனும்பகிர்ந்துகொள்ளுங்கள்.

Apr 25, 2026

நாராயண ஹ்ருதயாலயா, பெங்களூரு மருத்துவ இயக்குநரும் உலகின் முன்னணி இதய நிபுணர்களில் ஒருவருமான டாக்டர் தேவி ஷெட்டியின் செய்தி.

"என் நண்பர்களே.கடந்த சில ஆண்டுகளில் எனக்கு நெருக்கமாக இருந்த 8 முதல் 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் 'ஃபிட்' ஆக இருக்கபயிற்சி செய்து வந்தவர்கள்.சில பிரபலங்கள் கூட 40 வயதிற்குள்இறந்துவிட்டார்கள். அவர்கள் உடலில் சிக்ஸ் பேக் இருந்தவர்கள்.'மிதவடைதல்' (Moderation) என்பதே வாழ்க்கையின் மந்திரம்.எதிலும் சீர்குலைவு கூடாது. சுழலும் நேரங்களில் மிகுந்த கோரிக்கையோ, மிகக் குறைவோ தவறு.மிதமான உடற்பயிற்சி – தினமும் 21 நிமிடங்கள் போதும்.உணவில் எல்லாம் சாப்பிடலாம், ஆனால் எல்லாம் மிதமாகவே வேண்டும்.அதிக சிக்கன உணவுகள் தேவையில்லை. கிவி பழம், ஒலிவ் எண்ணெய் எல்லாம் தேவை இல்லை...உங்கள் பாட்டி, தாத்தா சாப்பிட்டதைச் சாப்பிடுங்கள்.உங்கள் கிராமத்தில் கிடைக்கிற உணவுப்பொருட்கள், பருவ உணவுகள், இயற்கை உணவுகள்,அனைத்தும் மிதமாக எடுத்துக்கொள்வது சிறந்தது.தினமும் முழு 7 மணி நேர தூக்கம் முக்கியம்.ஸ்டீராய்டுகள், பர்ஃபார்மன்ஸ் டிரக் மாத்திரைகள் எல்லாம் எதுவும் தேவையில்லை. உங்கள் உடலை மதியுங்கள்.நீங்கள் வளர்ந்த உணவுகளை மிதமாகச் சாப்பிடுங்கள்.தினமும் 20-30 நிமிடங்கள் நடைப்பயிற்சி போதும்.எனர்ஜி டிரிங்க்ஸ், சப்பிள்மெண்ட்கள் — எல்லாம் நிறுத்துங்கள்.மது பழக்கம் இருந்தால், வாரத்துக்கு சில டோசாக கட்டுப்படுத்துங்கள்.புகை பிடிக்காமல் இருக்க முயலுங்கள். முடியாவிட்டால், தினம் ஒன்றோ இரண்டோ மட்டும். எனது கருத்தை புரிந்துகொள்ளுங்கள் — எதிலும் மிதம் முக்கியம்.மௌனத் தியானம் — தினசரி பழக்கமாக்குங்கள்.முக்கியமாக — உங்கள் உடலைக் கேளுங்கள், அதைப் புரிந்துகொள்ளுங்கள். முக்கியமான உடல்நல குறிப்புகள்:1. தொலைபேசியில் பேசும்போது இடது காதில் பேசுங்கள்.2. மருந்துகளை குளிர்ந்த தண்ணீர் கொண்டு குடிக்க வேண்டாம்.3. மாலை 5 மணிக்குப் பிறகு அதிக உணவு சாப்பிட வேண்டாம்.4. காலை நேரத்தில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் தண்ணீர் குடியுங்கள்.5. சிறந்த தூக்க நேரம்: இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை.6. மருந்து எடுத்தவுடன் அல்லது உணவு சாப்பிட்டவுடன் உடனே தூங்காதீர்கள்.7. மொபைல் பாட்டரி கடைசி அளவுக்கு வந்திருந்தால், பேசாதீர்கள் — அந்த நேரத்தில் ரேடியேஷன் 1000 மடங்கு அதிகமாக இருக்கும்.இந்த செய்தி  உங்களுக்கும், மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும்.

Apr 25, 2026

வாட்ஸ் அப் மூலம் அரசு சான்றிதழ்கள் பெறலாம் விருதுநகரில் புதிய சேவை.

விருதுநகர் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி உள்ளிட்ட 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை.7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தேவையான சான்றிதழ் விவரம் மற்றும் ஆதாரங்களை அனுப்பினால், சான்றிதழ் நேரடியாக வாட்ஸ்அப்பிலேயே கிடைக்கும்.பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 78452-52525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பொதுமக்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம்.

Apr 25, 2026

தமிழக அரசு அறிவிப்பு. புதிய ரேஷன் அட்டைகள் , மாற்றங்கள் ஆன்லைனில்.

புதிய ரேஷன் அட்டைக்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். குடும்ப தலைவரின் போட்டோ(5 MB), குடும்ப தலைவர் & உறுப்பினர்களின் ஆதார், மின் கட்டண ரசீது ஸ்கேன் செய்து வைத்து கொள்ளவும். tnpds.gov.in தளத்திற்கு சென்று Apply new smart card லிங்கை கிளிக் செய்து செல்போன் எண் உள்ளிட்ட தகவலை பதிவேற்றம் செய்யவும். பின்னர், TSO (அ) RI நேரில் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்வர். பின்னர் உங்களுக்கு கார்டு வழங்கப்படும்.ரேசன் அட்டையில் புதிய நபர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய அல்லது புதிய ரேசன் அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் tnpds.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் எளிதாக மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

1 2 ... 19 20 21 22 23 24 25 ... 103 104

AD's



More News