மக்களுக்கு சொத்து, சுகம் மட்டும் போதாது, நல்லாட்சி மிக மிக முக்கியம்.தமிழ் நாட்டில் கடந்த 55 ஆண்டுகளாக மக்கள் ஆட்சியா ? மன்னர் ஆட்சியா ? மக்களின் பொறுமைக்கும், ஒரு எல்லை உண்டல்லவா ? பொறுத்து, பொறுத்து வெடித்த தமிழக மக்கள் நல்லதொரு தீர்ப்பை, இந்தத் தேர்தலில் கொடுத்திருக்கின்றனர்,என்றே சொல்லலாம். திமுக, அதிமுக, ஆட்சிக் காலங்களில் ஒருவருக்கொருவர் மாற்றி, மாற்றி அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் செய்தனரே தவிர, நல்லாட்சியைக் கொடுக்கவே இல்லை. ஆட்சி கெட்டுச் சீரழிந்துள்ளது.இந்த இரண்டு கட்சிகளில் உள்ள அமைச்சர்கள் அனைவருமே தங்கள் காலத்திற்கும் அடுத்த 10 ,15, தலைமுறைக்கும் சொத்துக்களைத்தான் சேர்த்தனர். எங்கும் கொள்ளை! எதிலும் கொள்ளை! பாக்தாத்திருடர்கள் தோற்கும் அளவிற்கு கொள்ளை!ஆட்சியாவது நன்றாகச் செய்தார்களா ? அதுவும் இல்லை, அதுவும் திமுக ஆட்சியில் போதைக் கலாச்சாரம், கரைபுரண்டு ஆண், பெண், ஏன் குழந்தைகளையும் அடிமை யாக்கியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு பெரிய கேள்விக்குறியானது.இன்னும் சிறிது காலம் இவர்கள் ஆட்சியில் இருந்தால் நம் தமிழ்நாட்டை கூறு போட்டு பங்கிட்டு, விற்று வெளிநாட்டில் முதலீடு செய்து விட்டு, தப்பி ஓடிவிடுவார்கள். தமிழ்நாட்டில் இவர்கள் ஆட்சி செய்த பொழுதெல்லாம் மத்திய அரசை பகைத்துக் கொண்டு, தாங்கள் ரெம்ப நல்லர்களைப் போல பிம்பம் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.ஒரு அரசாங்கமே மது ஆலைகளை திறந்து வைத்துக் கொண்டு ,அதிலிருந்து வரும் பணத்தை மக்களுக்கு இலவசங்களைத் தருகிறது, என்றால் அந்த நாடு என்னவாகும் என்று சிந்திக்கக் கூடவா மக்களுக்குத் தெரியாது. சரியான பாடம் புகட்டி விட்டார்கள்.பதவி எடுத்த நாளிலிருந்து திமுக இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுவதும், சனாதன தர்மத்தை அழிப்போம். என்று கூறுவதும் எவ்வளவு அகம்பாவம், ஆணவம். இந்துக் கோவில்களின் வருமானத்தை, இவர்கள் யார்? இதைக் கையாள்வதற்கு ? தமிழ்நாட்டில்உள்ள85%இந்துக்களின்பாரம்பரியத்தைஅலட்சியப்படுத்துவதுபோன்றஅட்டுழியங்கள் கொஞ்ச ,நஞ்சமல்ல,தமிழ்நாட்டில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும், கிருஸ்தவர்களும், சண்டையா போடுகின்றனர். எல்லோரும் ஒற்றுமையாகத் தான் இருக்கிறார்கள். அவர்களிடம் இனக் கலவரங்களை உண்டாக்க, இவர்கள் செய்யும் செயல்கள் அநியாயம், 18 வயதிலிருந்து 24 வயதுவரை உள்ள 1 கோடியே 20 லட்சம் தமிழக இளம் வாக்காளர்கள் பாக்தாத்திருடர்களின் அட்டுழியங்களை கவனித்து ஓட்டளித்துள்ளனர்.த.வெ.க கட்சியினர் ஒரு பைசா கூட கொடுக்காமல் எப்படி ஜெயித்தனர் என்பதற்கு இன்னும் பல காரணங்கள் உண்டு. அதிகார துஷ்ப்பிரயோகம், மணல் கொள்ளை, எக்குத் தப்பாக ஏறிய வீட்டு வரி, சொத்து வரி, மின்கட்டண உயர்வு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். பழைய முகங்களே வேண்டாம். புது முகத்திற்கு போடலாம் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனம் ரணகளமாகி, த.வெ.க. விஜய்யிற்கு ஓட்டு அளித்துள்ளனர்.திரைப்படத்தில் Let me sing a kutty story! life is very short நண்பா! Always be happy! என்ற பாடல் மூலம் விஜய்யின் ரசிகர்கள் எந்த அளவுக்கு கவரப்பட்டனரோ, அந்த அளவிற்கு தன் நல்லாட்சியிலும் மக்கள் சந்தோஷப்படுவார்கள் என நம்புவோம்.தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை விஜய் சரி செய்வாரா ? சரியாகச் செய்வாரா ? என்பது பலரின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன மக்களுக்காக செய்வேன் என்பது ஒரளவு நன்றாகச் சிந்தித்து செயல்பட்டுள்ளார் என்றே சொல்லலாம். மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள மாட்டார்கள்.தேர்தலுக்காகக் கொடுத்த வாக்கைச் சிறப்பாகச் செய்வார் என்று மக்களின் அதீத நம்பிக்கைக்கு துரோகம் செய்யாமல் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கையில், தமிழ்நாட்டு மக்கள் விஜய்யின் விஜயத்தை எதிர்பார்த்துள்ளனர்.குணா பாஸ்கர் ராஜா.
குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட நீர் உடலில் வாதத்தை அதிகரிக்கும். இது மூட்டு வலி, வாய்வு மற்றும் மலச்சிக்கல் போன்றபிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.பானை நீர் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கும் திறன் கொண்டது.மூளை மற்றும் செரிமான அமைப்புக்கும் நன்மை பயக்கும்.
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் 'இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி', பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது.18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும்.
ஊழியர்கள் தொடர்ந்து நைட் ஷிஃப்ட்டில் பணிபுரிந்தால், உடலின் இயல்பான நேரச்சுழற்சி பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் டைப்-2 சர்க்கரை நோய், இதய கோளாறு, ஹார்மோன் சமநிலை குறைவு என பல உடல் நல பிரச்சினைகளை சத்தமின்றி உருவாவதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு.
இந்தியாவில் அதிகரித்து வரும்'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகளை கட்டுப்படுத்த, சிம் கார்டு பெறுவதில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் சந்தேகத்திற்கிடமான வங்கி பரிவர்த்தனைகளை தற்காலிகமாக முடக்குவது உள்ளிட்ட அதிரடித் திட்டங்களை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.காவல்துறை அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள் போல நடித்து, பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் இந்த மோசடிகளை தடுக்க பலமுனை உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, சிம் கார்டுகளை வழங்கும் போது பயோமெட்ரிக் அடையாள சோதனையை கட்டாயமாக்கவும், மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளை உடனடியாக முடக்கவும் தொலைத்தொடர்புத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் மோசடி அழைப்புகளை கண்டறியும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், நீக்கப்பட்ட கணக்குகளின் தரவுகளை180 நாட்கள் வரை சேமித்து வைக்கவும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.வங்கி துறையை பொறுத்தவரை, சைபர் மோசடிகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க தற்காலிகத்தடை விதிக்கும் ரிசர்வ் வங்கியின் நடைமுறையை நாடு முழுவதும் சீராக அமல்படுத்த கோரப்பட்டுள்ளது. 2024,ஆம் ஆண்டில் அரசு அதிகாரிகள் முதல் முதியவர்கள் வரை பலரையும் பாதித்துள்ள இந்த'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகளை குறைக்க தொழில்நுட்பதளம், வங்கி மற்றும் சட்ட கட்டமைப்பு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செயல்பட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உங்கள் வீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள்: 1. AC unit check (use AC indoor/outdoor image icon) “உள் மற்றும் வெளி யூனிட்கள் சுத்தமாகவும் நல்ல நிலையில் உள்ளதா பார்க்கவும்.” 2. Outdoor protection (sun + AC unit image) “நேரடி வெயிலில் கம்ப்ரசர் அதிகமாக சூடாகாமல் shade அல்லது cover பயன்படுத்தவும். 3. Voltage stabilizer (electric icon) “மின்சாரம் மாறுபாடு AC-க்கு சேதம் செய்யலாம், stabilizer பயன்படுத்தவும். 4. Gas leak warning (pipe + oil leak image) “பைப் பகுதியில் கருப்பு எண்ணெய் இருந்தால் உடனே சரிசெய்யவும். 5. Warning signs (fire / alert icon) "விசித்திரமான சத்தம் அல்லது எரியும் வாசனை இருந்தால் உடனே AC அணைக்கவும். AC வெப்பதிலை 24°C - 26°C வைத்தால் மின்சாரம் சேமிக்கலாம் மற்றும் கம்ப்ரசர் பாதுகாப்பாக இருக்கும்.
மகளிர் மேம்பாடு.குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500. 6 விலையில்லா சிலிண்டர்கள்: மணப்பெண்களுக்கு தங்கம் + பட்டுச்சேலை; பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; மாணவர்களின் அம்மாக்களுக்கு ரூ.15,000 கல்வி உதவி: மகளிர் குழுக்களுக்கு ரூ.லட்சம் வட்டியில்லா கடன்.உலகத்தரக் கல்வி..உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள், ரூ.20 லட்சம் வரை உயர்கல்விக் கடன்; நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள், Al மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிகள்சுகாதாரமான தமிழ்நாடு.குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் மருத்துவக் காப்பிடு; நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை; ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை; போதைப்பொருள் இல்லா தமிழ்நாடுசமூகப் பாதுகாப்பு.முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்தியம்: 200 யூனிட்கட்டணமில்லா மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு:நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டாஅரசு ஊழியர் நலன்.மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை OPS: ஐந்தாண்டு பணியிலுள்ள ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம். அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.18,000, சுகாதாரபணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம். பணி ஓய்வின் போது ரூ.15 லட்சம்இளைஞர் முன்னேற்றம்.வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை; ஊதியத்துடன் கூகூடிய லட்சம் இன்டர்ன்ஷிப்: 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன்: அரசுத் தேர்வுகளுக்குக் கால அட்டவணைவிவசாயிகள் நலன்.நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.18,000 முதலீட்டு உதவி பயிர்க் கடன்கள்தள்ளுபடி: MSP: நெல் குவிண்டால் ரூ.3.800. கரும்பு பன்னுக்கு ரூ.4.500 5 லட்சம் சோலார் பம்புகள்: தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000; 100% பயிர்க் காப்பீடுமீனவர் நலன்.தடைக்கால நிவாரணம் ரூ.27.000; மீன்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு; மீனவர்களுக்கு நிரந்தர வீடுதமிழ்நாடு வளர்ச்சி.2030-க்குள் $15 டிரில்லியன் பொருளாதாரம் Al அமைச்சகம், Al பல்கலைக்கழகம். A நகரம்: MSME-களுக்கு ரூ.15,000 கோடி ஆதரவு, மாவட்ட வாரியாக மாஸ்டர் பிளான்", தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம்நல்லாட்சி.லஞ்சமில்லா நிர்வாகத்துடன் அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில் காலக்கெடுவுடன் கூடிய அரசு சேவைகள்: நிதி ஒதுக்கீட்டில் 10% திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம். சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள்.
1 உன்னத் தவிர வேற யாரையும் முழுசா நம்பாத. 2. யாரையும் துரத்திட்டு போகாத, உன்ன தேடி வர்ற அளவுக்கு நீ மாறு. 3. குளிர்ந்த நீர் குளியல், உன் மன உறுதிய வளர்க்கும். 4.உயிரைக் கொடுத்து உடற்பயிற்சி பண்ணு. ஏன்னா உன் உயிர் அந்த உடம்புல தான் இருக்கு. 5.உன் மேல மட்டும் கவனம் வை, மத்ததெல்லாம் தேவையில்லாதது தான். 6.'வேற வழி இல்ல'-னு நினைச்சு ஒரு விஷயத்த பண்ணு, கண்டிப்பா ஜெயிப்ப. 7.எமோஷனல் ஆகாத, உன் உணர்வுகளை நீ கண்ட்ரோல் பண்ணு. 8.உன்ன செதுக்கிய குடும்பத்தையும், கூடவே இருந்தவங்களையும் என்னைக்குமே மறக்காத.
நீங்கள் சூரிய ஒளியைப் பார்த்தால் மட்டுமல்ல, பிரகாசமான எந்த ஒளியைப் பார்த்தாலும் கண் கூசும். இது ஒரு வகையான பார்வைப் புலனுக்கான தகவமைப்பே ஆகும்.இந்த பிரகாசமான ஒளியைப் பார்க்கும் போது, கண்ணில் உள்ள ரெடப்சின் நிறமி செயலிழக்கப்படுகிறது. இதனால் ஒளி-வேதியியல் வினை மட்டுப்படுகிறது. அப்போது நமக்கு சில வினாடிகளுக்கு பார்வையே தெரியாது. உதாரணமாக வெளியே, வெளிச்சமான பகுதியில் இருந்து இருண்ட திரையரங்கிற்குள் நுழையும்போது இந்நிலை ஏற்படுவதை நீங்கள் காணலாம். மேலும், ஒளிச் செறி விற்கேற்ப கண்ணுக்குள் செல்லும் ஒளியின் அளவை ஒழுங்குபடுத்த கண் பார்வையின் விட்டத்தின் அளவு விழித் திரை தசைகளால் தானியங்கு நரம்பு களின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.இந்தப் பாதுகாப்பு கூறுகள் அனைத்தும் கண்களைக் காப்பதற்கே தகவமைப்பாக அமைந்துள்ளன.
பெட்ரோல் பங்குகளில் இனி E20 பெட்ரோல் மட்டுமே வழங்கப்படும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் OTP மட்டும் போதாது, PIN / Password அல்லது Fingerprint போன்ற 2 பாதுகாப்பு முறைகள் அவசியம். சில வங்கிகள் டெபிட் கார்டு கட்டணங்களை உயர்த்தியுள்ளன. KYC செய்யாத FASTag கணக்குகள் தடை செய்யப்படும். புதிய இன்சூரன்ஸ் பாலிசிகள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்கப்படும்.