கோயம்புத்தூர், புருக்ஃபீல்டு மாலில் 2 (Brookfield Mall) நடந்ததாக கூறப்படும் சம்பவம்:ஒரு பெண்ணிடம்'பெர்ஃப்யூம் மணம் பார்க்கலாமா?'என்று கேட்டு, வாசனை காட்டியதும் மயக்கமடைந்து உடமைகள் திருடப்பட்டதாக தகவல்.மால்கள், பார்க்கிங் பகுதிகளில் குறைந்த விலையில் பெர்ஃப்யூம் விற்பனை என்ற பெயரில் மயக்க மருந்து கலந்த திரவத்தை பயன்படுத்துவதாக எச்சரிக்கை.எனவே பெண்கள் அனைவரும்:அறிமுகமில்லாதவர்கள் கொடுக்கும் எந்த வாசனை திரவத்தையும் முகர வேண்டாம்.தனிமையான இடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகமான நபர்களை கண்டால் உடனே. பாதுகாப்பு பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.எச்சரிக்கையாக இருப்பதே பாதுகாப்பு!
நீ எவ்வளவு உயர்ந்தவன் என்பது உன் அறிவிலோ அழகிலோ அந்தஸ்திலோ படிப்பிலோ பணத்திலோ இல்லை...மற்றவர்களை நீ எப்படி மதிக்கிறாய் என்பதில் தான் இருக்கிறது...உனக்கு மேலே உள்ளவனை பாத்து ஏங்காதே...உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே...உன்னை யாருடனும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு..தற்பெருமை பேசுபவரிடம் தரத்தை எதிர்பார்க்காதே...' பழகியவரிடம் பணத்தை எதிர்பார்க்காதே...பணக்காரர்களிடம் பாசத்தை எதிர்பார்க்காதே...உறவினர்களிடம் உண்மையை எதிர்பார்க்காதே... உலகத்திடம் எதையுமே நிரந்தரமாக எதிர்பார்க்காதே...'யாரயும் பழிவாங்க நினைக்காதே .கடந்து செல்ல கற்றுக்கொள்...'
இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் ஆண்டுதோறும் வழக்கத்தை விட 15 முதல் 40 நாட்கள் வரை கடுமையான வெப்பம் நிலவும் எனப் புதிய ஆய்வில் எச்சரிக்கை.மேலும் கூடுதலாக 20 முதல் 40 இரவுகள் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பத்துடன் காணப்படும் என்றும், கனமழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கையும் 10 முதல் 30 நாட்கள் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் CEEW அமைப்பு கணிப்பு.தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதன் தாக்கம் மற்ற பகுதிகளை விட அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிப்பு.
2 லட்சத்திற்கு மேல் - தங்கம் வாங்கினால் -PAN கார்டு கட்டாயம். ₹10 லட்சத்திற்கு மேல் – PAN Aadhaar வருமான சான்று அனைத்தும் கட்டாயம். தங்கம் விலையில் - 3% GST கட்டாயம் செலுத்த வேண்டும். மேக்கிங் சார்ஜில் - நகை தயாரிப்பு கட்டணத்தில் 5% GST கட்டாயம்.
உங்கள் கேஸ் வழங்குநரின்(Indane,HP,Bharat) இணையதளத்திற்குச் சென்று,'LinkAadhaar' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு,OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம்.
உடலை குளிர்விக்கும் உணவுகள்: தண்ணீர் நிறைந்த பழங்கள் - தர்பூசணி,வெள்ளரி,முலாம்பழம். குளிர்பானங்கள் - மோர்,இளநீர்,நெல்லிக்காய் ஜூஸ். சத்தான காய்கறிகள் - புதினா,முருங்கைக்கீரை, வெண்டைக்காய். குளுர்ச்சி தரும் உணவுகள் - தயிர் சாதம்,கஞ்சி,பானகம். முக்கிய குறிப்புகள்:அதிக தண்ணீர் குடிக்கவும்.வெயிலில் அதிக நேரம் தவிர்க்கவும்.குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடவும்.
நன்றாக வளர்ந்த ஒரு மரம். ஒரு நாளைக்கு 2 முதல் 10 மனிதர்கள் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என கண்டறியப்பட்டு உள்ளது. . ஒரு முதிர்ந்த மரம் ஓராண்டுக்கு ஏறக்குறைய 260 பவுண்டு ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். பொதுவாக, மரங்கள் கார்பன்டை ஆக்சைடு மற்றும் சூரிய ஒளியை பயன்படுத்தி ஆக்சிஜன் மற்றும் குளுக்கோசை உற்பத்தி செய்கின்றன. மரங்கள் பகல் நேரத்தில் ஆக்சிஜனை வெளியிடும். அதே வேளையில், இரவு நேரத்தில் சுவாசிப்பதற்காக அதில் சிறிதளவு பயன்படுத்துகின்றன. மரங்களை பொறுத்தவரை, அகன்ற இலை கொண்ட மரங்கள், அவற்றின் அதிக இலை மேற்பரப்பு காரணமாக சிறிய இலைகளை கொண்ட ஊசியிலை மரங்களை விட அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன . இவற்றை எல்லாம்விட, ஒரு இடத்தில் மரங்கள் அதிக அளவில் இருந்தால் அந்த இடத்தின் வெப்பநிலை சுமார் 5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து குளிர்ச்சியாக காணப்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு புள்ளி விவரப்படி, ஒரு மனிதனுக்கு 699 மரங்கள் என்ற விகிதம் அமெரிக்காவில் காணப்படுகிறது. இதுவே ஆஸ்திரேலியா 3,266, பிரான்சு 203, எத்தியோப்பியா 143, கிரீன்லாந்து 4,964 என்ற அளவில் காணப்படுகிறது. இந்தியாவில் ஒரு நபருக்கான மரங்களின் எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. எதிர்காலத்தில் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கம் குறைய வேண்டும் என்றால், மேற்கண்ட நாடுகளை போல மரங்களை ஏராளமாக வளர்க்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
உடல் வெப்பநிலையை சீராக்கி, புத்துணர்ச்சி பெற தண்ணீரை குடிப்பது அவசியம். அத்தகைய நீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பல் துலக்காமல் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. கோழையை உமிழ்ந்துவிட்டு, பல் துலக்காமல் நீர் குடிக்கும்போது, உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை தான் நாம் உட்கொள்கிறோம். இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்தில் வீடு அல்லது மனை வாங்கும்போது இனி முக்கியமான மாற்றம் வருகிறது. 1.சொத்து பத்திரத்தில் இனி ஜி.பி.எஸ் (GPS) லொகேஷன் விவரம் கட்டாயமாக இணைக்கப்பட உள்ளது. 2.சொத்து உண்மையில் அந்த இடத்திலேயே உள்ளதா, என்பதை உறுதி செய்ய இந்த நடைமுறை கொண்டு வரப்படுகிறது. 3.சொத்து விற்பவர் அந்த இடத்தின் முன் நின்று புகைப்படம் எடுத்து ,பத்திரத்தில் இணைக்க வேண்டும். 4.பதிவுத்துறைதற்போது 'STAR 3.0' என்ற புதிய டிஜிட்டல் மென்பொருள் மூலம் காகிதமில்லா பத்திரப்பதிவு முறையை கொண்டு வர முயற்சி செய்கிறது. 5. இதன் மூலம் நிலத்தின் துல்லியமான இடத்தை GPS மூலம் கண்டறிந்து பதிவு செய்ய முடியும். இந்த புதிய முறையால் போலி நிலங்கள், தவறான பதிவுகள் போன்ற பிரச்சனைகள் குறையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
1. உங்களுடைய மொத்த வருமானத்தையும் எப்போதும் வெளியே சொல்லாதீர்கள். 2.உங்களுடைய மொத்த சொத்தின் 1-5% பணமாக (Cash) கையில் வைத்திருங்கள். 3. நீங்கள் சம்பாதிப்பதன் 30%-க்கும் அதிகமாக செலவு செய்யாதீர்கள். 4. ஒரு அவசர நிதி (Emergency fund) தயாராக வைத்திருங்கள். 5.வரி விதிகளைப் பற்றி படியுங்கள். 6.சொத்துக்கள் (Assets) வாங்குவதற்கு 7. ஒன்றுக்கும் மேற்பட்ட வருமான வழிகளை உருவாக்கிக்கொள்ளுங்கள்.