25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Nov 29, 2025

அதானியின் APSEZ நிறுவனத்தின் நிகர லாபம் ₹3,120 கோடியாக அதிகரிப்பு.

அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் (APSEZ) 2026 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ₹5,550 கோடிEBITDA ஈட்டியுள்ளது. மேலும், அது கடந்தாண்டு உடன் ஒப்பிடும்போது27% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கடல்சார் துறைகள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.2026 நிதியாண்டின் முதல் பாதியில், உள்நாட்டுத் துறைமுகங்கள் அதிகபட்சமாக 74.2% EBITDAவை பதிவு செய்துள்ளது. அதேபோல பன்னாட்டுத் துறைமுக ஆபரேஷனும் ₹2,050 கோடி வருவாயையும், ₹466 கோடி EBITDAவை எட்டியுள்ளன. இது வாழ்நாள் சாதனையாகும்.லாஜிஸ்டிக்ஸ் பிரிவில், 2026 நிதியாண்டின் முதல் பாதியில் ₹2,224 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 92% வளர்ச்சியாகும். கடல்சார் துறையில்,2026 நிதியாண்டின் முதல் பாதியில்₹1,182 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட213% அதிகமாகும்.. புதிய கப்பல்கள் வாங்கியதே இந்த வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக ஃபின்ச் மற்றும் எஸ் & பி குளோபல் APSEZஇன் ரேட்டிங்கை மேம்படுத்தி வழங்கியுள்ளது. Fitch Ratings "நெகட்டிவ்" என்பதில் இருந்து "ஸ்டேபிள்" என மாற்றியுள்ளதுடன்,"BBB-" மதிப்பீட்டை உறுதிப்படுத்தியுள்ளது.S&PGlobal, சர்வதேச போக்குவரத்து உள்கட்டமைப்பு நிறுவனங்களில் APSEZஐ முதல் 5% பட்டியலில் அங்கீகரித்துள்ளது.APSEZ இன் ஒருங்கிணைந்த போக்குவரத்துப் பயன்பாட்டு லாபகரமான வளர்ச்சி ஒரு சான்றாக இருப்பதாக அதன் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அஸ்வினி குப்தா தெரிவித்தார்.APSEZ கடந்த செப்டம்பர்30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டு முடிவுகளை அறிவித்திருந்தது. அதில் தான் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அஸ்வினி குப்தா மேலும் கூறுகையில்,"லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கடல்சார் வணிகங்கள் தொடர்ந்து அதிவேக வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன, இது எங்கள் சேவையை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த லாபம் எங்கள் செயல்பாட்டிற்கான ஒரு சான்று. இதுவரை இல்லாதEBITDAஐ பதிவு செய்து சாதனை படைத்துள்ளோம்.12 லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள்,3.1 மில்லியன் சதுர அடி கிடங்குகள், விரிவடைந்து வரும் சரக்கு சேவை போக்குவரத்து என எங்கள் விஷனை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இது சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஒருங்கிணைந்த வீரராக எங்களை நிலைநிறுத்துகிறது" என்றார்.முந்திரா துறைமுகம் இந்தியா மரிடைம் விருதுகளில்"சிறந்த தனியார் துறைமுக மற்றும் ஆண்டின் சிறந்த கொள்கலன் முனையம்" விருதை வென்றது. இந்தியா மரிடைம் வாரத்தில்"கடல்சார் சாதனையாளர்கள்" பிரிவில்"துறைமுக முன்னோடி"விருதைAPSEZ வென்றது. ஓஷன் ஸ்பார்க்கிள் நிறுவனத்திற்கு"மின்னிலக்க நௌகிக் டெக் டிரான்ஸ்ஃபர்மேஷன் விருது"வழங்கப்பட்டது. தாமரா துறைமுகம் ஒடிசா மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால்"மாசு கட்டுப்பாட்டு பாராட்டு விருது" பெற்றது. இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் உச்சிமாநாட்டில்"சிறந்த துறைமுகச் சேவை வழங்கும் நிறுவனம்"மற்றும்"லாஜிஸ்டிக்ஸ் சாம்பியன்" விருதுகளை வென்றது. கங்காவரம் துறைமுகத்திற்கு"சுற்றுச்சூழல் பாதுகாப்பு" விருது, விழிஞ்சம் துறைமுகத்திற்கு"மாசுக்கட்டுப்பாட்டு இயந்திர உபகரணங்கள்" விருது மற்றும் தாமரா துறைமுகத்திற்கு "கழிவு குறைப்பு" விருதுகள் வழங்கப்பட்டன.. கோவா துறைமுகத்திற்கு Apex India Green Leaf Awards அமைப்பு "டயமண்ட் விருது" பெற்றது.

Nov 29, 2025

ரூ.20 கோடிக்கு ஏலம் ஆன டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட தங்க கெடிகாரம் .

அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றபோது இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு 1912-ம் ஆண்டு டைட்டானிக் என்ற கப்பல் பனிப்பாறையில் மோதியது. உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்தனர். இந்த விபத்து 1997-ம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் திரைப்படமாக வந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவ்வப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன. அந்தவகையில் அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் தங்க கெடிகாரம் ஒன்று இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டது.  அதிகபட்ச ஏலத்தொகை  ஆக இந்த கெடிகாரம் சுமார் ரூ.20 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.. இதன்மூலம் டைட்டானிக் தொடர்பான மொத்த ஏலத்தொகை ரூ.35 கோடியை தாண்டியதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Nov 28, 2025

இந்தியாவில் ₹100 கோடி மதிப்புள்ள கார் உரிமையாளர் தொழிலதிபர் நிதா அம்பானி.

இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த கார் ஆடிA9 பச்சோந்தி. இதன் மதிப்பு சுமார் ரூ.100 கோடி இந்த காரின் உரிமையாளர் தொழிலதிபர் நிதா அம்பானி. இந்த காரில் வண்ணங்களை மாற்றும் மின்சார வண்ணப்பூச்சு பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் உலகில்11 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இதில்600 குதிரைத்திறன் கொண்ட4.0 லிட்டர்VS எஞ்சின் உள்ளது. இதன் கூரை மற்றும் ஜன்னல்கள் ஒரே அலகில் உள்ளன.

Nov 28, 2025

ஒரே காலாண்டில் ரூ. 644 கோடி நிகர லாபம், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்.

மின்சார விநியோகத்தின் மூலம் கிடைத்த வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது. அக்டோபர்30,2025 அன்று வெளியான தகவலின்படி, பங்குச் சந்தையில் அதானி கிரீன் எனர்ஜி(AGEL) பங்குகள்10.80% உயர்ந்து ஒரு பங்கு ரூ.1,113.05 ஆக வர்த்தகமானது.அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம், செப்டம்பர் காலாண்டில் ரூ.644 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 28% அதிகமாகும். இந்தச் சாதனை, நிறுவனத்தின் பங்குகளை கிட்டத்தட்ட 11% உயரச் செய்துள்ளது.நாள் முழுவதும், இந்த பங்குகள் அதிகபட்சமாக 13.98% உயர்ந்து ரூ. 1,145-ஐ தொட்டன. தேசிய பங்குச் சந்தையில் (NSE) ஒரு பங்கு ரூ. 1,112.60 ஆக உயர்ந்து,10.79% வளர்ச்சி கண்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வணிகத்தின் வளர்ச்சி இந்த லாப உயர்விற்கு முக்கிய காரணமாகும்.கடந்த2024-25 நிதியாண்டின் ஜூலை,செப்டம்பர் காலகட்டத்தில்நிறுவனம் ரூ.515 கோடி நிகரலாபம் ஈட்டியிருந்ததுகுறிப்பிடத்தக்கது. மின்சாரவிநியோக வருவாய்கடந்த ஆண்டின்இரண்டாம் காலாண்டில்ரூ.2,308 கோடியாகஇருந்த நிலையில், நடப்பு காலாண்டில்ரூ. 2,776 கோடியாகஉயர்ந்துள்ளது.மொத்த வருவாய்கடந்த ஆண்டின்ரூ. 3,396 கோடியிலிருந்துரூ. 3,249 கோடியாககுறைந்துள்ளது. மொத்தசெலவுகள் ரூ. 2,857 கோடியிலிருந்து ரூ.2,874 கோடியாக சற்றுஅதிகரித்துள்ளனஅதானி கிரீன்எனர்ஜியின் தலைமைச்செயல் அதிகாரிஆஷிஷ் கண்ணாஒரு அறிக்கையில்,"குஜராத்தில் காவ்டாவில்30 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்கஎரிசக்தி உற்பத்திஆலையை அமைக்கும்பணி வேகமாகநடைபெற்று வருகிறது. செயல்பாட்டுத் திறன், திட்ட அமலாக்கம்மற்றும் பாதுகாப்பைமேம்படுத்த புதுமையானதொழில்நுட்பங்களை தொடர்ந்துபயன்படுத்தி வருகிறோம்," என்று குறிப்பிட்டார்.இதற்கிடையில், அதானிகுழுமத்தின் பெரும்பாலானமற்ற நிறுவனப்பங்குகளும் உயர்வுடன்முடிவடைந்தன. அதானிஎனர்ஜி சொல்யூஷன்ஸ் 5.05%, என்டிடிவி 3.26%, அம்புஜா சிமெண்ட்ஸ் 2.95%, அதானி போர்ட்ஸ் 2.68% மற்றும் அதானிடோட்டல் கேஸ் 2.15% என குறிப்பிடத்தக்கவளர்ச்சியை பதிவுசெய்துள்ளன.

Nov 26, 2025

வியக்க வைக்கும் நம் பிரதமர் மோடியின் சுறுசுறுப்பு .

10 நாட்கள்,18 விமானம்,16 நகரங்கள்,04 நாடுகள்,03 விருதுகள்,05 இரவுகள் விமானத்தில்36 நிகழ்ச்சிகள்,1 தலைவர்"நம் பிரதமரின் சுறுசுறுப்பு எனக்கு ஆச்சர்யமாக உள்ளது" - பவன் கல்யாண்"நம் பிரதமரை கண்டு நான் வியக்கிறேன். கடந்த 10 நாட்களில் மட்டும் 36 நிகழ்ச்சிகள், பல மணிநேர பயணம், பல சந்திப்புகள். இந்த வயதில் இப்படி ஒருசுறுசுறுப்பான மனிதரை பார்ப்பது மிக அரிது" என்றார் பவன் கல்யாண்.

Nov 26, 2025

பல கோடி ஆண்டு களுக்கு முன்னர் கடல்கள் அனைத்துமே இன்று போல் நீல நிறத்தில் அல்லாமல் பச்சை நிறத்தில் இருந்தது.

பல கோடி ஆண்டு களுக்கு முன்னர் கடல்கள் அனைத்துமே இன்று போல் நீல நிறத்தில் அல்லாமல் பச்சை நிறத்தில் இருந் ததாக ஜப்பான் விஞ் ஞானிகள் அனுமானித் துள்ளனர். அப்படியான பச்சை நிறக்கடலில் தான் உயிர்களும் தோன்றின என்று கூறியுள்ளனர்.ஏர்பஸ் விமான நிறுவனம், பறவை  இறக்கை போல் மடிக்கக்கூடிய, இலகுவான இறக்கைகளை வடிவமைத்துள்ளது. இந்த இறக்கைகளில் ஹைட்ரஜனை எரி பொருளாக கொண்டு இயங்கும் இயந்திரங்கள் உள்ளன. இந்த இரண்டு புது மைகளாலும் வழக்கமான எரிபொருளைவிட 20 சதவீதம் குறைவாக செலவாகும் என்கின்றனர் பொறியாளர்கள்.

Nov 26, 2025

சக் இந்தியாவின் நம்பர்1 கரும்பு சார்ந்த மேஜைப் பாத்திர பிராண்ட்.

சக் இந்தியாவின் நம்பர்1 கரும்பு சார்ந்த மேஜைப் பாத்திர பிராண்ட் ஆகும், இது பூமிக்கு நச்சு மற்றும் குளோரின் இல்லாத பாகாஸ் தட்டுகள், கிண்ணங்கள், உணவுத் தட்டுகள் மற்றும் விநியோக கொள்கலன்கள் மூலம், உங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் உணவைப் பாதுகாப்பாக அனுபவிக்க முடியும். சக் என்பது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு அனுபவத்தை மேம்படுத்துவதாகும். மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் அதற்கு தகுதியானவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்ததும், இந்த பாகாஸ் தூக்கி எறியும் பொருட்களை உரத் தொட்டியில் எறிந்துவிட்டு, குப்பைகளைக் குறைக்கவும், பிளாஸ்டிக்குகளை நச்சுத்தன்மையற்ற மாற்றுகளால் மாற்றவும், சக்நம்பர் 1 கரும்பு சார்ந்த மேஜைப் பாத்திர பிராண்ட்.CHUK தயாரிப்புகள் உங்கள் வழியில் செல்ல தயாராக இருக்கும் .

Nov 25, 2025

'சாகஸ்' நோய் உண்டாக்கும்முத்தமிடும் பூச்சி.

 முத்தமிடும் பூச்சி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய  நாடுகளை நடுங்க வைத்திருக்கிறது. டிரைப்நோசோமா என்ற கிருமி வகையை சேர்ந்த 'சாகஸ்' என்ற ஒரு நோயை  இந்த பூச்சி மனிதனுக்கு உண்டாக்குகிறது.மனித உடலில் இருக்கும் காயங்களில் இந்த பூச்சி அதன் கழிவுகளை வெளியிடுகிறது.இந்த கழிவுகளால் ஏற்படும் அரிப்பை நீக்க காயங்களை ஒட்டிய பகுதியில் விரல்களை வைத்து தேய்க்கும் போது, இந்த கிருமி கைகள் வழியாக வாய், கண்கள் மூலம் மனித உடலின் உள்ளே புகுந்து விடுகிறது.சாகஸ் நோய் பாதித்த ஆரம்ப கட்ட த்தில் சில வாரங்கள் அல்லது மாதங்கள், காய்ச்சல், தலைவலி, வீக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும், சில நேரங்களில் அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். நாள்பட்ட கட்டத்தில் இந்த நோய் இதய செயலிழப்பு, இதய வீக்கம், செரிமான  குழாய்பாதிப்பு உள்ளிட்ட நீண்டகால  சிக்கல்களை ஏற்படுத்தும்.இந்த நோய் அர்ஜென்டினா, பிரேசில்,மெக்சிகோ, கொலம்பியா ஆகிய  நாடுகளில் பரவி ,அமெரிக்காவின் சில மாநிலங்கள், ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து  ஆகிய பகுதிகளிலும் பரவி வருகிறது.அமெரிக்காவில் சுமார் 3 லட்சம் பேர் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த  நோய், சத்தமின்றி பல்வேறு நாடு களில் பரவி வருகிறது. காடு அழிப்பு, நகரமயமாக்கல்  போன்ற நோய்களுக்கு முக்கி காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலக நாடுகள் பலவும் இதனை  தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

Nov 25, 2025

ஏன் தண்ணீருக்குள் கைகளை வைத்திருக்கும் போது தோல் சுருங்குகிறது.?

கடினமான வேலைகளை செய்வதற்காக கைகளும் கால்களும் பயன்படுகின்றன. எனவே அவற்றை பாதுகாப்பு டன் வைப்பதற்காக தோலில் சீபம் என்கிற எண்ணெய் சுரக்கிறது. தண்ணீரில் கைகளை வைத்து வேலை செய்து கொண்டிருக்கும் போது சீபம் சுரந்து தோலுக்குள் தண்ணீர் செல்லாமல் பாதுகாத்து விடுகிறது. அதிக நேரம் தண்ணீரில் கைகள் இருக்கும் போது சீபம் அதிக மாக சுரக்காது. அதனால் தண்ணீர் தோலுக்குள் நுழைந்து விடுகிறது. கை கால்களில் மேடு, பள்ளம் தோன்றி விடு கிறது. இதனால் தோல் சுருங்கி விடு கின்றன. தண்ணீரை விட்டு விரல்களை எடுத்த சிறிது நேரத்தில் தண்ணீர் வெளியேறி மீண்டும் சீபம் சுரக்கிறது.அதனால் விரல்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். 

Nov 24, 2025

கடுமையான குளிர்காலத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அவசரகால தங்குமிடம் .

கடுமையான குளிர்காலத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அவசரகால தங்குமிடமாக செயல்படும்.  நீர் மற்றும் காற்று புகா தன்மையுடன் 2 நபர்கள் வரை இதில் தங்க ,மரம் மற்றும் இரும்பு கலவையால் ஆன இது, உறைபனி காலத்தில் மக்களை பாதுகாக்கும்.. இவை நிரந்தர வீடுகளுக்கு மாற்றாக இல்லாவிட்டாலும், அவசரகாலங்களில் தங்குமிடங்களாக செயல்படு கின்றன. 2020-ம் ஆண்டில் ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது ஜெர்மனியின் பல பகுதிகளுக்கு விரிவடைந்துள்ளது. உணவு, உடை, இருப்பிடம் மனிதனின் அடிப்படை தேவைகளாகும். வீடு இல்லாதவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் ,குளிர்காலம் மற்றும் மழைக் காலத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மிக அதிகம். இதை கருத்தில் கொண்ட ஜெர்மனி அரசாங்கம் பாதுகாப்பு மற்றும் தனி உரிமையை வழங்க சிறிய, சூரிய சக்தியில் இயங்கும்கூடு வடிவிலான தங்குமிடங்களை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

1 2 ... 47 48 49 50 51 52 53 ... 103 104

AD's



More News