25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


அழகுக் குறிப்பு

Dec 23, 2025

முல்தானிமட்டி.

முல்தானிமட்டி என்பது, சருமத்தை அழகுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொருள். இது, சருமத்தை சுத்தப்படுத்தவும், உலர்ந்த செல்களை நீக்கவும் - 'ஸ்கிரப்பிங்' எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் உதவுகிறது.முல்தானிமட்டியில் உள்ள துத்த நாகம், சருமத்தில் பருக்களால் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் தன்மைக் கொண்டது. இதனுடன், தயிர், பன்னீர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து வீட்டிலேயே, 'பேஸ் பேக்'குகள் தயாரித்து பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், தோலின் நிறத்தையும், அழகையும் பாதுகாக்கலாம்.முகத்தில் வரும் கரும்புள்ளி, வெண்புள்ளி போன்ற பிரச்னைகளுக்கு முல்தானிமட்டியுடன் வேப்ப இலையின் விழுதை கலந்து பூசி, காய்ந்ததும் முகத்தை கழுவவேண்டும். இவ்வாறுசெய்தால், முகத்தில்உள்ளகரும்புள்ளிகளும், வெண்புள்ளிகளும் நீங்கி, சருமம் பொலிவடையும்.கோடைகாலத்தில் முல்தானிமட்டிபயன்படுத்தும்போது, சிலருக்குமுகத்தில்எரிச்சல் ஏற்படலாம்.அவர்கள்முல்தானிமட்டியுடன், துாய்மையான சந்தன தூளை கலந்து பூசினால், எரிச்சல் குறைந்து, குளிர்ச்சியாக இருக்கும்.வெளியே செல்வதற்கு முன், முகத்தில் முல்தானிமட்டியை பூசி, 15 நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீரில் கழுவ முகம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.பூலான் கிழங்கு - 50 கிராம், கஸ்துாரி மஞ்சள் - 50 கிராம், கடலைப்பருப்பு -100 கிராம், பயத்தம் பருப்பு - 100 கிராம், வெள்ளரி விதை -100 கிராம், வெட்டிவேர் 25 கிராம்ஆகியவற்றைபொடியாகஅரைத்துவைத்து, தினமும் குளிக்கும்போதுபயன்படுத்தலாம்.வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குளியல் பவுடருடன், ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து, சருமம் பொலிவடையும்.முகத்தில் பருக்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்சுரப்புபிரச்னைஉள்ளோர், பன்னீருடன், முல்தானிமட்டியைகுழைத்து, சிறிய பிரஷால் முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், விரைவில் இப்பிரச்னை தீரும்.

Dec 22, 2025

பெண்களின் முடி உதிர்வு தீர ..

முருங்கை இலை 1கப் நன்றாக கழுவி கொதிக்கும் நீரில் 3 நிமிடம் வேகவைக்கவும்.அதில் 1தேக்கரண்டிஎலுமிச்சைச்சாறு, சிறிது  உப்பு சேர்க்கவும்,விரும்பினால்1 சிட்டிகை மிளகு தூள் அல்லது சுக்கு தூள் சேர்க்கலாம்.தினமும் காலை அல்லது மாலை வெதுவெதுப்பாக குடிக்கலாம்.இது இரத்தத்தை சுத்தப்படுத்தி, ஹீமோகுளோபின் அதிகரித்து, உடல் சக்தி, நோய் எதிர்ப்பு சக்தி, பெண்கள் ஹார்மோன் சமநிலை, முடி & தோல் நலனை மேம்படுத்த உதவும்.

Dec 17, 2025

பொடுகு தொல்லை நீங்க கடுக்காய்.

ஒருபிடி கறிவேப்பிலை நான்கு கடுக்காய் இரண்டையும் ஒன்றாக அரைத்து சாறு எடுத்து அதில் பாதி அளவுக்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்துவர தலைமுடி நன்றாகவளரும் பொடுகு தொல்லையும் நீங்கும்.

Dec 13, 2025

முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க.

தக்காளி விழுது மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து கலந்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கும்.

Dec 12, 2025

சரும அரிப்பு நீங்க….

சிலருக்கு சதா உடலில் அரிப்பு குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும். இதற்கு காரணம்  சருமத்தில் ஈரப்பதம் குறைந்து வறட் சியாக காணப்படுவதுதான். இதற்கு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு  ஈரப்பதம் மூட்டும் கிரீம்கள்  அல்லது மாய்ஸரைசரை பயன்படுத்த அரிப்பு நீங்கி  தூக்கம் கெடாமல் இருக்கும். அல்லது வீட்டு வைத்தியமாக சந்தனத் தூளுடன் பன்னீர் கலந்து குழைத்து உடலில் தடவி வர அரிப்பு காணாமல் போகும்.அத்துடன் பருத்தி ஆடைகளை அணிவதும்  நல்ல பலன் தரும்.

Dec 09, 2025

வெடிப்புகள் மறைந்து பாதம் பளபளக்க…

ஒரு பாத்திரத்தில் வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து ,அதில் பாதங்களை சிறிது நேரம் வைத்து சுத்தமாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பாத வெடிப்புகள் மறைந்து பாதம் பளபளக்கும்.

Dec 05, 2025

முகம் பளிச்சென்று மாற....

இரண்டு ஸ்பூன் பாலுடன் 1/4 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் அப்ளை செய்து 15.நிமிடம் அல்லது 20 நிமிடம் கழித்து ஈரத்துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். அதன் பிறகு, தண்ணீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். ஆரம்பத்தில் முகம் எண்ணெயாக இருப்பதுபோல் இருக்கும். ஆனால், சில நேரம் கழித்து முகம் பளிச்சென்று மென்மையாக மாறிவிடும். இதேபோல், இரண்டு முறை செய்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.

Dec 02, 2025

கருவளையம் மறைய....

கடலைமாவுடன் சிறிது மஞ்சள் துாள், எலுமிச்சைச் சாறு, ஒரு மேஜைக்கரண்டி பால் கலந்து முகத்தில் பூசி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவினால் முகம் மிருதுவாகும்.பாதியாக நறுக்கிய ஆப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஐந்து துண்டுகள் சேர்த்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அதில் சிறிது கடலைமாவுசேர்த்துகலந்து, முகத்தில்பூசி,30 நிமிடம்ஊறவைத்துகழுவலாம்.இதனால், சருமத்தில்உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாகும். இதை,வாரம் ஒருமுறை செய்யலாம்.கருவளையத்தைப்போக்க,பூசணிசிறந்தமருந்தாகும்.பூசணிக்காயைசிறுதுண்டுகளாக்கி, அதைகண்களைசுற்றிவைத்தால், கருவளையம் மறையும்.

Nov 24, 2025

முடி வளர்ச்சியை அதிகரிக்க வேம்பாளம் பட்டை எண்ணெய்.

வேம்பாளம் பட்டையானது பெண்களின் முடி வளர்ச்சியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. மற்றும் இது முடி உதிர்வதையும் தடுக்கிறது.வேம்பாளம் பட்டை எண்ணெய் எப்படி தயாரிப்பது?தேங்காய் எண்ணெய் - 1கப்விளக்கெண்ணெய் - 1/4 கப்சிறிய வேம்பாளம் பட்டை - 2செய்முறை:இந்த எண்ணெய்யை செய்ய முதலில் ஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த 3 பொருட்களையும் சேர்த்து 2 முதல் 3 நாட்கள் சூரிய ஒளியில் படும் இடத்தில் வைக்க வேண்டும். 3 நாட்கள் கழித்து எண்ணெயின் நிறம் சிவப்பு வண்ணத்தில் மாறி இருக்கும். நீங்கள் அதனை பயன்படுத்தும் முன் தேவையான அளவு எடுத்து சூடாக்கி பயன்படுத்தவும்.உடல் ஆரோக்கியத்திற்கு வேம்பாளம் பட்டை: சருமம் பொழிவு பெற சரும தொற்றுகள் வராமல் தடுக்க அழற்சி எதிர்ப்புத் தன்மை தீக்காயங்களை விரைவில் ஆற வயிற்றுப்போக்கு, அல்சர் மற்றும் நாள்பட்ட இருமல் குணமாக சிறுநீரகக் கற்கள், மஞ்சள் காமாலை, எலும்பு முறிவு போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேம்பாளம் பட்டை, பெருங்காயம், கருஞ்சீரகம் ஆகியவற்றை பொடியாக எடுத்து, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து காயம் இருக்கும் இடத்தில் போட்டு வந்தால் அவை விரைவில் ஆறும்.

Nov 15, 2025

உதடு வெடிப்புக்கு.....

உதட்டில் வெடிப்பு மற்றும் உதடு வறண்டு பொலிவில்லாமல் இருப்பதற்கு காரணம், போதிய எண்ணெய் பசை இல்லாதது தான். சிலருக்கு உதட்டில் தோல் உரிந்து ரத்தம் கூட வரும். இதற்கு நெய் மிகச்சிறந்த மாய்ஸ்ரைராக செயல்படும். நெய்யை சிறிது எடுத்து ,உதட்டில் தடவி சிறிது நேரம் வைத்திருக்க, வெடிப்புகளும் வறண்ட உதடு காணாமல் மறைந்து பளபளக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 25 26

AD's



More News