200 கிராம் பச்சை பயிறு. 100 கிராம் கடலை மாவு .50 கிராம் ரோஜா இதழ் பொடி .50 கிராம். ஆரஞ்சு தோல் பொடி. 10 கிராம் பூலாங்கிழங்கு பொடி. 10 கிராம் பாதம் பருப்பு பொடி.இவற்றினை எல்லாம் ஒன்று சேர்த்து நன்கு மாவாக அரைத்து ஜலித்து எடுத்துக் கொள்ள வேண்டும், இந்த கலவையை குளிக்கும் பொழுது பயன்படுத்தினால் எந்தவிதமான பிரச்சனையும் வராது. இந்த கலவையானது குழந்தையின் தோல் நிறத்தினை மாற்ற உதவுகிறது.
முடக்கத்தான் கீரையை வாரம் ஒரு முறை அரைத்து தலையில் தேய்த்து5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும்.இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பார்க்கவும்.முடி கொட்டுவது நின்று விடும். அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும்.கருகருவென முடி வளர தொடங்கும்.
ஆவாரம்பூ10 கிராம், வெந்தயம்100 கிராம், பயத்தம் பருப்பு1/2 கிலோ, இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.இந்தப் பவுடரை குளிப்பதற்கு முன், வெந்நீரில் கரைத்து,15 நிமிடங்கள் ஊற வைத்த பின் அந்தப் பேஸ்ட்டை வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நின்றுவிடும்.முடி நல்ல அடர்த்தியாக சில்க்கி ஆக மாறுவது கண்கூடாக காணலாம்.
2 ஸ்பூன் ஆப்பிள் சாறுடன் சிறிது தேன் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விட ,பொலிவிழந்த சருமம் கண்ணாடி போல் பளபளக்கும்.நெய் ஃபேஸ்பேக் சந்தனம் 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன், அத்துடன் நெய் சிறிது சேர்த்து நன்கு குழைத்து,முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து ,வெதுவெதுப்பான நீரில் கழுவி விட முகத்திற்கு உடனடி பொலிவையும் தரும்.
தினந்தோறும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள்.இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, புடலங்காய், பூசணி, சுரைக்காய், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய், கனிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.தினமும் வைட்டமின் ஏ நிறைந்த கேரட் மூன்று நிற வகைப் பழங்கள் சாப்பிடுங்கள். சருமத்துக்குப் பொலிவைத் தந்து இளமைத் தோற்றத்தை தக்கவைக்கும்.மறக்காமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
குளிப்பதற்கு சோப் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுகிறது.சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக நலங்கு மாவு பயன்படுத்தினால் சருமம் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.நலங்கு மாவு செய்ய தேவையானவை:கடலை மாவு, பச்சை பயிறு மாவு- கால் கிலோ,வெட்டிவேர், விளாமிச்சு வேர். பூலாங்கிழங்கு, கோரைக் கிழங்கு, சந்தனச் சிராய், ஆவாரம் பூ, ஆகியவை 50 கிராம், கார்போக அரிசி, காட்டுச் சீரகம் -20 கிராம்.மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை அரைத்து சலித்து குளியலுக்கு பயன்படுத்த முகம் இயற்கை பொலிவு பெறும்.
சிலருக்கு உதட்டிற்கு மேல் பகுதியில் முடி வளர்ந்து அழகை கெடுக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் சர்க்கரை இரண்டையும் சிறிதளவு தண்ணீர் விட்டு சர்க்கரை நன்கு கரையும் வரை கொதிக்கவிடவும்.ஆறியதும் முடிகள் உள் இடத்தில் தடவி வர சருமத்தில் உள்ள முடிகளை முற்றிலுமாக நீக்கிவிடும்.
சின்ன வெங்காயம் வேப்பிலைக் கொழுந்து இரண்டையும் சுத்தம் செய்து, அரைத்து முற்றிய தேங்காய்ப்பால் அல்லது தயிருடன் கலந்து, கூந்தலில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசவும் பொடுகு அகன்று தலை சுத்தமாகும்.ஆவார இலைச்சாற்றை புற்று மண்ணுடன்.கலந்து தலையில் பூசி அரை மணி கழித்து குளித்து வந்தால் விரைவில் பொடுகு குணமாகும்.
எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் இந்த நரைமுடியால் பலரும் முதுமை தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். அந்த முதுமை தோற்றத்தை பெறக் கூடாது என்பதற்காகவே நரைமுடியை மறைப்பதற்காக கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுடைய அழகும் தலைமுடியும் பாலாய் போய்விடும். இந்த எண்ணெய் அதிக அளவில் கேரள மக்களால் பயன்படுத்தக்கூடிய எண்ணையாக திகழ்கிறது. இதில் பல மூலிகை பொருட்களை சேர்த்து எண்ணை தயாரித்திருப்பதால் இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து குளிப்பதன் மூலம் விரைவிலேயே தலைமுடி பிரச்சனைகளும் நீங்கும், நரைமுடி பிரச்சனையும் நீங்கும். இதற்கு நமக்கு சில பவுடர்கள் தேவை. ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெல்லிக்காய் பவுடர் ஒரு டீஸ்பூன், கரிசலாங்கண்ணி பவுடர் ஒரு டீஸ்பூன், செம்பருத்தி பவுடர் ஒரு டீஸ்பூன், நில ஆவாரை பவுடர் அரை டீஸ்பூன், மருதாணி பவுடர் 2 டீஸ்பூன், கருஞ்சீரகப் பவுடர் மூன்று டீஸ்பூன், கடுக்காய் பவுடர் ஒரு டீஸ்பூன், சீயக்காய் பவுடர் ஒரு டீஸ்பூன் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கருஞ்சீரக பவுடர் என்று கிடைக்காது. அதனால் கருஞ்சீரகத்தை வாங்கி நன்றாக வறுத்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 12 கிராம்பு, 1/2 டீஸ்பூன் வெந்தயம், 1/2 டீஸ்பூன் ஆளிவிதை, 1/2 டீஸ்பூன் சியாவிதைகள் இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து அதையும் இந்த பவுடர்களுடன் சேர்த்து விட வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.இப்பொழுது இது மூழ்கி திக்காக ஹேர்டை பதத்திற்கு வரும் வரை தேவையான அளவு தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். இதை மூன்று நாட்கள் அப்படியே வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் ஹேர் டை ஆயில் தயாராகி விட்டது. இதை தினமும் தலைக்கு உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதை நாம் வடிகட்டுவது கிடையாது. மேலும் இதை நாம் நன்றாக கலக்கி விட்டு தலையில் தேய்ப்பதன் மூலம் இதில் இருக்கக்கூடிய அந்த பவுடர்கள் தலையில் அப்படியே தங்குவது போல் தோன்றும் என்பதால் தினமும் பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக என்றைக்கெல்லாம் நீங்கள் தலைக்கு குளிக்கிறீர்களோ அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த எண்ணெயை நன்றாக தலையில் தடவி மசாஜ் செய்து ஊறவைத்து பிறகு குளிப்பது நல்லது. சளி பிடிக்காது என்று நினைப்பவர்கள் இரவே இந்த எண்ணெயை தலையில் தேய்த்து தலையை கவர் செய்து விட்டு மறுநாள் காலையில் எழுந்து கூட தலைக்கு குளிக்கலாம். ஒரு முறை தயார் செய்து வைத்தாலே போதும். தொடர்ச்சியாக நாம் இந்த எண்ணையை உபயோகப்படுத்துவதன் மூலம் விரைவிலேயே நரைமுடி என்பது கருமை ஆவதை உணர முடியும்.நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த இந்த பொடிகளை நாமும் பயன்படுத்தி நம்முடைய நரைமுடிபிரச்சினையும்,தலைமுடிபிரச்சினையும்தீர்த்துக் கொள்வோம்.கொத்தமல்லி,கறிவேப்பிலை, வெந்தயகீரை வகைகளை உடனேஆய்ந்து காற்று வெளிச்சத்தில் பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் கெடமால் இருக்கும்.வெள்ளிப் பொருட்களைப் புளித்த தயிரில் ஊற வைத்துச் சுத்தம் செய்தால் பளீரென இருக்கும்.
சிலருக்கு முழங்கை, கணுக்கால், முட்டி போன்ற இடங்களில் கருப்பு தட்டி இருக்கும். இந்த கருமை நீங்க எலுமிச்சை சாறுடன் சிறிது வெள்ளரிக்காய் சாறு, மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து, கருமை படர்ந்த இடங்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர கருமை மறைந்துவிடும்.