தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், துவரம்பருப்பு - கால் கப், பச்சரிசி - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் -2. இஞ்சி -ஒரு துண்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன். உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை சிறிது.செய்முறை: பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஒரு மணிநேரம் ஊறப் போடுங்கள். தண்ணீரை நன்றாக வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம். உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து காயும் எண்ணெயில் சிறு வடைகளாக தட்டி போட்டு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு - அரை கப், புளிக்காத புது தயிர்ஒரு கப், பால் கால் கப், உப்பு - ருசிக்கேற்ப, மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், காராபூந்தி (அ) ஓமப்பொடி (விருப்பத்துக்கேற்ப) சிறிது, எண்ணெய்- தேவையான அளவு, கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: முந்திரிப்பருப்பு 4, பச்சை மிளகாய் சீரகம் கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன். செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நைஸாக அரைத்தெடுங்கள். கால் கப் தயிரை எடுத்து வைத்துவிட்டு, மீதியுள்ள தயிரில் அரைத்த விழுதைக் கலந்து, கடுகு பொரித்து கொட்டுங்கள். சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள். ஒன்றேகால் கப் தயிருடன், பால், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.ஊறிய உளுந்தை மெத்தென்று அரையுங்கள்.. உப்பு சேர்த்து கலந்து, பிறகு வழித்தெடுங்கள்.. எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போடுங்கள். வெந்ததும் எடுத்து தயிர், பால் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊற விட்டு, ஒரு ட்ரேயில் அடுக்குங்கள் (ஒன்றின் மேல் ஒன்று படாமல்).அரைத்த விழுது கலந்துள்ள தயிரை அதன் மேல் சுற்றிலும் ஊற்றுங்கள். அதன் மேல் காராபூந்தி அல்லது ஓமப்பொடி, துருவிய கேரட், மிளகாய்தூள், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.
தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு ஒரு கப், பொடியாக நறுக்கிய கோஸ் ஒரு கப், இஞ்சி -ஒரு துண்டு, பச்சை மிளகாய் 2. கறிவேப்பிலை - சிறிது, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:- உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ். இஞ்சி,மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய்- தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு.ரசத்துக்கு: பருப்பு தண்ணீர் - 2 கப், புளித் தண்ணீர் - அரை கப், தக்காளி சாறு (வடிகட்டியது) - அரை கப், பழுத்த தக்காளி 1, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, பெருங்காயம் - அரை டீஸ்பூன்.பொடிக்க: மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது. - தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.செய்முறை:- உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, மெத்தென்று ஆட்டுங்கள். அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து கெட்டியாக ஆட்டி, உப்பு சேர்த்து கலந்து எடுங்கள். பருப்பு தண்ணீருடன் புளி தண்ணீர், தக்காளி சாறு, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம், பொடித்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய்யில் கடுகு தாளித்து. ரசக் கரைசலை ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய மல்லி சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து ரசத்தில் போட்டு சூடாக பரிமாறுங்கள். (பொடித்த பொடியை புளித் தண்ணீரில் சேர்க்காமல் பாத்திரத்தில் போட்டு, அதில் ரசத்தை இறக்கி ஊற்றினாலும் நன்றாக இருக்கும்).
தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவைக்கு. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அரை கப்,. பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு. சாம்பாருக்கு: துவரம்பருப்பு - அரை கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் 1. தக்காளி - 3, புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு. உப்பு ருசிக்கேற்ப. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன். வறுத்துப் பொடிக்க: தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, வெந்தயம் - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.செய்முறை:-உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.துவரம்பருப்பை. மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும். தக்காளியையும் சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். தக்காளி கரைந்து வதங்கியதும் புளித்தண்ணீரை சேருங்கள். அதில் உப்பு, பெருங் காயம். கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள்.பிறகு. துவரம்பருப்பைக் கரைத்து ஊற்றுங்கள். வறுத்துப் பொடித்த பொடியைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மல்லித்தழை சேருங்கள். உளுத்தம்பருப்பை சிறிது தண்ணீர் தெளித்து. சிறிது உப்பு சேர்த்து மெத்தென்று ஆட்டிக்கொள்ளுங்கள்.சாம்பாரில் இருந்து கால்பகுதி அளவு எடுத்து, அதனுடன் அரை கப் கொதிக்கும் தண்ணீரை சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து ஆட்டிவைத்துள்ள மாவை, சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிற மானதும் எடுத்து, சாம்பார் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊறியதும் எடுத்து. ஒரு டிரேயில் அடுக்கிக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் இதே போல செய்யுங்கள். பரிமாறும்பொழுது. சாம்பாரை வடைகள் மேல் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்..
தேவையான பொருட்கள்- குட மிளகாய் 1 சிறியது (நறுக்கியது) கோதுமை மாவு 3/4 கப், கடலை மாவு 3/4 கப், கான் பிளவர் சோள மாவு 1/4 கப், ராகி மாவு 1/4 கப், இஞ்சி 1/4 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது, சீரக தூள் 1/4 டீஸ்பூன், கரம் மசாலா தூள் 1/4 டீஸ்பூன், மிளகு தூள் பெப்பர் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு. கீரை3 கப், பாலக்கீரை, முருங்கைக் கீரை, பொடியாக நறுக்கி வதக்கவும் .எந்த வகை கீரை இருந்தாலும் போடலாம் அல்லது இரண்டு வகை கீரை இருந்தாலும் கலந்து செய்யலாம்.செய்முறை- முதலில் நான்கு விதமான மாவுகள் , கீரை, குடமிளகாய் இவற்றை ஒரு பாத்திரத்தில்போட்டுதேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைய வேண்டும்.பின் இஞ்சி சீரகத்தூள் கரம் மசாலா தூள், மிளகுத்தூள், உப்பு போட்டு கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து தோசை மாதிரி வார்த்தால் சத்தான கீரை அடை ரெடி.
தேவையான பொருட்கள் -துருவிய பீட்ரூட் 1/4 கப், பொடியாக நறுக்கிய பீன்ஸ் 5 எண்ணிக்கை, ஜவ்வரிசி 1 கப், தேங்காய் துருவல் 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், உருளை கிழங்கு 1/4 கப் வேக வைத்து நறுக்கியது. உப்பு சுவைக்கேற்ப.செய்முறை- ஜவ்வரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து ஒரு வெள்ளை துணியில் உலர்த்தவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து பின்னர் இத்துடன் பீன்ஸ், துருவிய பீட்ரூட் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். வதங்கியவுடன் வேகவைத்த வேர்க்கடலை, உருளைகிழங்கு மிளகாய்தூள், உப்பு சேர்த்து கிளறவும். இத்துடன் ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து ஒன்றாக கிளறி தேங்காய் பூ தூவி பரிமாறவும்.
தேவையான பொருட்கள் -மக்காச்சோள ரவை 250 கிராம், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி 1 கப், அனைத்தும் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி 1/4 கப், குடமிளகாய் 1/4 கப், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டேபிள் ஸ்பூன், புதினா நறுக்கியது 1/4 கப், வரமிளகாய் 5 எண்ணிக்கை.செய்முறை- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வரமிளகாய் தாளித்து, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, புதினா, குடமிளகாய், போட்டு நன்றாக வதக்கவும். இத்துடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இத்துடன் உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் மக்காச்சோள ரவை சேர்த்து கட்டி வராமல் அடிபிடிக்காமல் கிளறி, கொத்தமல்லியை தூவி இறக்கவும். இந்த உப்புமாக சத்து நிறைந்தது. எளிதில் தயாரிக்கக் கூடியது.
தேவையான பொருட்கள்- கேப்பை மாவு 1 கப், அரிசி மாவு 1கப்,எண்ணெய் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, தேங்காய் ஒரு மூடி துருவல் நாட்டுச் சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை தேவையான அளவுசெய்முறை- கேப்பை, அரிசி, மாவில் சுடுதண்ணீர் மற்றம் சிறிதளவு, எண்ணெய், தேவைக்கேற்ப உப்பு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். 10 நிமிடம் கழித்து பிழிந்து வேகவைக்கவும். வெந்தவுடன், தேங்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரை போட்டு லேசாக கிளறினால் கேப்பை இடியாப்பம் ரெடி. காரமாக சாப்பிட விரும்பினால் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து, கேரட் துருவியது, பீன்ஸ், பட்டாணி, குடைமிளகாய் போட்டு வதக்கி, வெந்த கேப்பை இடியாப்பம், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்- புழுங்கல் அரிசி 2 கப், உளுந்து 1/4 கப், கடலை பருப்பு 1 டீஸ்பூன், துவரம்பருப்பு 1 டீஸ்பூன், வெந்தயம் 1/2 டீஸ்பூன், புதினா 1 கட்டு, மல்லிதழை 1 கட்டு, இஞ்சி 1 துண்டு, மிளகாய் 4, வெண்ணெய் 1/2 கப்செய்முறை -அரிசி, உளுந்து, துவரம்பருப்பு, கடலைபருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 2 மணி நேரம், ஊற விடுங்கள், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், உப்பு சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும். தோசைகல்லில் தோசை போடும்போது வெண்ணை ஊற்றி வார்த்து எடுத்து சாப்பிட்டால் சுவையில் நாக்கு மயங்கும்.அரிசிக்கு பதிலாக முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்தும் இதே முறையில் தோசை வார்க்கலாம்.