தேவையானவை:கேரட்(விரல் நீள துண்டு)ஒன்று, ஆரஞ்சு பழச்சுளைகள்-10, சர்க்கரை தேவையான அளவு, ஐஸ் கட்டிகள் தேவையான அளவு.செய்முறை: கேரட் துண்டுடன் ஆரஞ்சு சுளைகள், சர்க்கரை சேர்த்து அரைத்து வடிகட்டவும். ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருகவும்.
தேவையான பொருட்கள்:முருங்கை பூ- 1 கப்,தக்காளி -1,புளி, உப்பு, ரசப்பொடி -சிறிதளவுதுவரம் பருப்பு,மிளகு, சீரகம்,தண்ணீர்,நெய்- தேவையான அளவு.செய்முறை:புளியை நீரில் கரைத்து, அதில் முருங்கை பூ, பொடியாக நறுக்கிய தக்காளி, ரசப்பொடி கலந்து கொதிக்க விடவும். நன்றாக வேகவைத்த துவரம் பருப்பை அதில் சேர்த்து கொதித்த பின், நெய்யில் தாளித்த சீரகம், மிளகு போடவும். உப்பு சேர்த்து இறக்கவும்.சுவைமிக்க,'முருங்கை பூ ரசம்!' தயார். சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சூப்பாகவும் பருகலாம். சளி, இருமல் போன்ற உபாதைகள் தீர உதவும்.
தேவையான பொருட்கள் - 15 தூதுவளை இலை,2 தேக்கரண்டி மிளகு,2 தேக்கரண்டி சீரகம், 6 பல் பூண்டு,3 பச்சை மிளகாய் , 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் , தேவையானஅளவு உப்பு , கொத்தமல்லி இலை, 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்செய்முறை - தூதுவளை இலையை கத்தரிக்கோல் கொண்டு முள் குத்தாதவாறு வெட்டிக் கொள்ளவும். அதில் பின் பக்கம் இருக்கும் முல்லை கிள்ளி எடுக்கவும். நன்றாக அலசி வைக்கவும். மிக்ஸியில் மிளகு, சீரகம் பூண்டு பச்சை மிளகாய்4 கருவேப்பிலை கூடவே தூதுவளை இலை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.புளியை தண்ணீரில் ஊற வைக்கவும் இதில் தக்காளி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கரைத்து கரைசல் தயாரிக்கவும்.அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். அதன்பின் அரைத்த மிளகு சீரகம் மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி கரைசல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.நுரை கட்டி வந்த பின் அடுப்பை அணைக்கவும். மருத்துவ குணம் நிறைந்த தூதுவளை ரசம் சாப்பிட சளி குணமாகும்.
தேவையான பொருட்கள் - 2 கருப்பு வெற்றிலைஅரைக்க:- 1டீ ஸ்பூன்மிளகு 1டீ ஸ்பூன்சீரகம்,.4 பூண்டு .1டீ ஸ்பூன்தனியா,1ப.மிளகாய் , 2தக்காளி . 1கப்புளி கரைசல்தாளிக்க:- 1டீ ஸ்பூன்கடுகு, 2 ஸ்பூன்பசு நெய்,2 சி.மிளகாய்,1டீ ஸ்பூன்சீரகம்,1டீ ஸ்பூன்ம,தூள்,1டம்ளர் தண்ணீர்,கொத்தமல்லி இலை 2 ஸ்பூன், அலங்கரிக்க – வெற்றிலைதுண்டுகள்செய்முறை - தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.புளியை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.மிக்ஸி ஜாரில், தனியா, மிளகு, சீரகம், ப.மிளகாய், பூண்டு, ஆகியவற்றை போட்டு சற்று கொர கொரப்பாக, அரைக்கவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், சீரகம், சி.மிளகாய், தாளித்ததும், ம.தூள், உப்பு போடவும்.அடுத்து புளிக் கரைசலை ஊற்றி, 5 நிமிடம் புளி வாசனை போக கொதித்ததும், அரைத்த விழுதை போடவும்.கொதித்து ஒரு பொங்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.சிறிய கடாயில் நெய் காய்ந்ததும், வெற்றிலை துண்டுகளை போட்டு நன்கு வதக்கவும்.வதக்கினதை ரசத்தில் கலக்கவும்.ஒன்று சேர கிளறி அடுப்பை நிறுத்தி விட்டு, ரசத்தை பௌலுக்கு மாற்றவும்.இப்போது, சுடசுட, மருத்துவ குணம் நிறைந்த,வெற்றிலை ரசம் தயார்.சளி, இருமலுக்கு ஏற்ற ரசம்.சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம்.வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகை ஆகும்.பசியை தூண்டக் கூடியது.வயிற்றுக் கோளாறு, அஜீரணத்தை போக்கக் கூடியது.
தேவையான பொருட்கள் - 1/2 கப் - ஆரஞ்சு சாறு,4 நடுத்தரமான தக்காளி, நெல்லி அளவு – புளி,1 சிட்டிகை – பெருங்காயம்,சிறிதளவு-கருவேப்பிலை, மல்லி,தேவையானஅளவு –எண்ணெய், தேவையான அளவு – உப்பு ,1/4 டீஸ்பூன் கடுகு , 2 -வற்றல்வறுத்து பொடிக்க - 1டீஸ்பூன்மிளகு ,1டீஸ்பூன்சீரகம்,5 பல் பூண்டு -1/2 டீஸ்பூன்கடலைபருப்பு , 1/4 டீஸ்பூன்மல்லி, 1/2 டீஸ்பூன்வெந்தயம் -செய்முறை - தக்காளியை வேகவைத்து தோல்உரித்து அரைத்து கொள்ளவும்.வறுத்து பொடிக்க தேவையான பொருட்களை நன்கு மனம் வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி3/4 லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கவும்.வாணலியில்எண்ணெய்ஊற்றிபெருங்காயம்,கடுகு,கருவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.பின்னர் வறுத்து தூளாக்கிய பொடியை சேர்த்து வதக்கவும்.பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.மஞ்சள்தூள், புளிகலந்த தண்ணீர்,ஆரஞ்சு சாறு சேர்க்கவும்.நுரை சேர்ந்து வரும் பொழுது இறக்கவும்.ரசம் ஊற்றும் பாத்திரத்தில் வெல்லதூள்,உப்பு, மல்லிதழை சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும்.
தேவையான பொருட்கள் - 11/2cupகொள்ளு வேக வைத்த தண்ணி,1 சிறிய எலுமிச்சம் பழ அளவு புளி,1/2 ஸ்பூன் வரக்கொத்தமல்லி சீரகம், மிளகு, கடுகு , 5 பல் பூண்டு, சிறிதளவு பெருங்காயம்,தேவையான அளவு உப்பு ,ஒரு பிடி கருவேப்பிலை,1பிடி(கொத்தமல்லி தழை.செய்முறை – வரக்கொத்தமல்லி சீரகம், மிளகு, பூண்டு ஒரு வரமிளகாய், மஞ்சள் தூள் உப்பு அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.கொள்ளு வேகவைத்து அதிலிருந்து அந்த தண்ணியை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும் .அந்த தண்ணீரில் நாம் அரைத்ததை எடுத்து கலந்து வைத்துக் கொள்ளவும்.புளித் தண்ணியை நன்றாக கரைத்து இதில் சேர்த்து விடவும்.மேலே கருவேப்பிலை கொத்தமல்லித்தழை அனைத்தையும் போட்டு வைத்துக் கொள்ளவும்.வானொலியில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் தாளித்து இந்த தண்ணீரில் ஊற்றி கொதிக்க விட வேண்டாம். நுரை கட்டி உடன் இறக்கி வைத்து விடுவோம் கொள்ளு ரசம் உடம்புக்கு ரொம்ப நல்லது மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் - 5மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணை,.2½கப் தனியா,முக்கால் கப் பெருஞ்சீரகம்.,கால் கப் வெந்தயம்,15கார சிகப்பு மிளகாய்,10 கறிவேப்பிலை,½கப் திப்பிலி,1 தேக்கரண்டி பெருங்காயம் ரசம் செய்ய - 2 மேஜை கரண்டி துவரம்பருப்பு,1 மேஜைகரண்டி தேங்காய் எண்ணை, 1தேக்கரண்டி பெருஞ்சீரகம்,1தேக்கரண்டி கடுகு,1தேக்கரண்டி இஞ்சி நசுக்கியது,2 வரமிளகாய்,¼ கப் கறிவேப்பிலை,சிட்டிகை பெருங்காயம்,அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி,1கப் தக்காளி துண்டுகள்,½தேக்கரண்டி புளி பேஸ்ட் (paste),1/4 கப் வெல்லம் பொடித்தது (ஆப்ஷனல்),2½மேஜை கரண்டி ரச பொடி,கால் கப் கொத்தமல்லி ,தேவையான உப்பு செய்முறை - ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்கரசப் பொடி செய்ய: மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சிறிது சூடான பின் தனியா வறுக்க. பொன் நிறமானதும், ஒரு கிண்ணத்தி மேல் ஒரு ஜல்லடையில் வடிக்க. வறுத்த தனியாவை பேப்பர் டவல் மேல் போடுக. குறைந்த நெருப்பிண் மேல் அதே வாணலியில் அதே எண்ணையில், பெருஞ்சீரகம் வறுக்க. சீரகம் பொறிந்த பின் முன் போலவே எண்ணையை வடிக்க. வறுத்த சீரகத்தை பேப்பர் டவல் மேல் போடுக. குறைந்த நெருப்பின் மேல் அதே வாணலியில் அதே எண்ணையில், வெந்தயம் வறுக்க. முன் போலவே எண்ணையை வடித்து, பேப்பர் டவல் மேல் போடவும் .குறைந்த நெருப்பின் மேல் அதே வாணலியில் அதே எண்ணையில், சூடான எண்ணையில் மிளகாய் வறுக்க; காந்த வைக்காதீர்கள். இப்பொழுது அதே வாணலியில் எண்ணை சேர்க்காமல் திப்பிலி, கறி வேப்பிலை வறுக்க பச்சை வாசனை போக. பெருங்காயம் சேர்க்க. வீடு முழுவதும் வாசனை நிரம்பும்.வறுத்தபொருட்களை மிக்ஸியில் கொர கொரவென்று அறைக்க. பொடி தயார். தட்டில் போட்டு ஆற வைக்க. ஒரு காற்று புகாதairtightcontainer இல் போட்டு சேமித்து வைக்க. தேவையான பொழுது தேவையான அளவு எடுத்து சாம்பார், ரசம் செய்யலாம்.¼கப் கொதிக்கும் நீரில் பெருங்காயம் ஊறவைக்க. நீரில் கறையும்.மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம் தாளிக்க, மஞ்சள் பொடி, இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து வதக்க. தக்காளி சேர்த்து வதக்கவும் . பூண்டு வெளி தோலை நீக்கு உள்ளே இருக்கும் கருப்பு பல்களை நசுக்கி சேர்க்கவும் .6 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் . துவரம் பருப்பு, பெருங்காயம் சேர்க்க`10 நிமிடம் ஹைflame மில் கொதிக்க வைக்க,புளி பேஸ்ட்2 கப் நீரில் கரைத்து சேர்க்கவும் .நன்றாக4,5 நிமிடங்கள் கொதிக்கட்டும்.¼ கப் வெல்லம் சேர்க்க. பச்சை வாசனை போகட்டும். கொதி வந்ததும்.2 மேஜைகரண்டி ரச பொடி1கப் சூடு நீரில் நன்றாக கலக்கி ரசத்துடன் சேர்த்து கலக்கவும் . நன்றாக4,5 நிமிடங்கள் கொதிக்கட்டும். உப்பு சேர்த்து கலக்கி பெருங்காயம் சேர்க்க,2 கொதி வரட்டும், அடுப்பை அணைக்க,கொத்தமல்லி சேர்க்க. வீடு முழவதும் கம கம வென்று மணக்கும். ரஸம் தயார்.
தேவையான பொருட்கள்-1டம்ளர் சீரகசம்பா அரிசி,1 பாக்கெட் பன்னீர்,1 கப் பச்சை பட்டாணி,1பெரிய வெங்காயம்,1 கப் புதினா இலை,1 பச்சை மிளகாய்,1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1ஸ்பூன் தனி மிளகாய் தூள்,1ஸ்பூன் தனியா தூள், 1சிறியஸ்பூன் கரம் மசாலாத்தூள்,1 துண்டு பட்டை, 2 கிராம்பு,1 பிரிஞ்சி இலை, 4 ஸ்பூன் நெய், 2ஸ்பூன் ஆயில்செய்முறை - சீரக சம்பா அரிசியை இருமுறை கழுவி தேவையான நீர் விட்டு10 நிமிடம் ஊறவிடவும். ஒரு பெரிய வெங்காயம் ஒரு பச்சை மிளகாய்நீளவாக்கில் நறுக்கவும். பனீரை சதுர வடிவ துண்டுகளாக நறுக்கவும்.இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் எடுத்து வைக்கவும். பச்சை பட்டாணி ஒரு கப் எடுத்து வைக்கவும்.குக்கரில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை ஏலக்காய் தாளிக்கவும். வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி ஒரு கப் புதினா தழை சேர்த்து வதக்கவும்.நறுக்கிய பனீர் சேர்த்து தேவையான உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் தனியாத்தூள்சேர்த்து கலந்து விடவும்.தேவையான நீர் விட்டு ஊற வைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்துக் கலந்து குக்கரை மூடி போட்டு சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும்.சுவையான பன்னீர் புதினா புலவு தயார் .
தேவையான பொருட்கள் – வெங்காயம்-2,பன்னீர்-2பாக்கெட், குடை மிளகாய் 1,தக்காளி 1.1/2,கான்ப்லார் 5 ஸ்பூன்,உப்பு தேவையான அளவு,மிளகாய் தூள் தேவையான அளவுகறிமசாலா 11/2 ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,டோமேட்டோ சாஸ்,பேப்பர் 2ஸ்பூன் செய்முறை பன்னீரை சிரிதாக நறுக்கி கொள்ளவும்.அதனுடன் குடை மிளகாய் தக்காளி வெங்காயம் ஆகியவற்றையும் நறுக்கி கொள்ளவும்.வெங்காயம் தக்காளி குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பன்னீரையும் சேர்க்கவும்..மஞ்சள் தூள் மிளகாய் தூள் கறிமசாலா தூள் உப்பு சேர்த்து கிளறி தேவைபட்டால் பேப்பர் தூள் சேர்த்து கொள்ளலாம்.பன்னீரையும் சேர்த்து கலந்து கான் பிலார் மாவும் சேர்க்கவும். நன்கு கலந்து கொள்ள வேண்டும்.வட்டமாக திரட்டி கொள்ளவும்.அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி பன்னீர் கலவையை பொட்டு பொறித்து எடுத்தால் சுவையான பன்னீர் கட்லட் ரெடி.
தேவையான பொருட்கள்- தோசை மாவு, பனீர் துருவியது,இட்லிப்பொடி -தேவைக்கு,எண்ணெய்or நெய் - தேவைக்கேற்ப செய்முறை- பனீரைத்துருவிக் கொள்ளவும்.தோசைமாவு,இட்லி பொடி எடுத்துக்கொள்ளவும். துருவியபனீர்,மிளகாய்பொடி, கொஞ்சம் எண்ணெய்விட்டு வதக்கவும்.பின் அடுப்பில் தோசை வாணலியை வைத்து தோசை வார்க்கவும்.இட்லி மிளகாய் பொடி சேர்த்த பனீரை தோசை மீது தூவி தோசையைச்சுற்றி நெய் ஊற்றி திருப்பிப் போட்டு எடுக்கவும்.சுவையான பனீர் தோசை ரெடி.சட்னி, இட்லிபொடி, சாம்பார் வைத்து சாப்பிடலாம்.