தேவையான பொருட்கள்:20 அத்திப்பழம்,5 பேரிச்சம் பழம், 1 லிட்டர் புல் க்ரீம் மில்க்,100 கிராம் இனிப்பில்லாத கோவா,100 கிராம் சர்க்கரை,1/2 கப் நட்ஸ்,1 டேபிள்ஸ்பூன் கசகசா,1ஸ்பூன் ஏலத்தூள்,3 டேபிள்ஸ்பூன் நெய், விருப்பப்பட்டால் சில்வர் தாள்.செய்முறை :அத்திப்பழம் மற்றும் பேரிச்சம் பழம் ஆகிய இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின் வாணலியில் நெய் விட்டு சூடானதும் நறுக்கிய அத்திப்பழம் மற்றும் பேரிச்சம் பழத்தைசேர்த்து வதக்கவும்.மெல்லிய தீயில் வைத்து வதக்கவும் பின் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு வேகவிடவும்.பாலுடன் சேர்ந்து அத்திப்பழம் மற்றும் பேரிச்சம் பழம், நன்கு வெந்ததும் பால் முழுவதும்சுண்டியதும், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். பின் ஏலத்தூள் நட்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்.பின் உதிர்த்த கோவா சேர்த்து நன்கு கிளறவும்.எல்லாம் சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கி ,நெய் தடவிய ட்ரேயில் வறுத்த கசகசாவை தூவிவிட்டு ,அதன் மேல் இந்த கலவையை கொட்டி சமப்படுத்தி மேலே சில்வர் தாள் ஒட்டி ,அரை மணிநேரம் வரை செட் செய்யவும். பின் விரும்பிய வடிவில் துண்டுகள் போடவும்.
தேவையான பொருட்கள்:1/2 கப் மைதா,,1/2 கப் சர்க்கரை ,1/2 கப் வனஸ்பதி (அ) நெய்,1/2 ஸ்பூன் ஏலக்காய்.செய்முறை :சர்க்கரையை பொடிக்கவும்.தேவையான பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு, கடாயில்வனஸ்பதி சேர்க்கவும்.வனஸ்பதி உருகி எண்ணெய், போல மாறிய பின் மாவை சேர்த்து, சிறிய தீயில் வைத்து கிளறவும்.மாவை சேர்த்து நன்கு கலந்து ,பின்பு இறக்கி அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.பின்னர் சர்க்கரைப் பொடி சேர்த்து நன்கு கலந்து ஆறவிடவும்.வெது வெதுப்பான சூட்டில் காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி, 20 நிமிடம் குளிர்சாதனப் பெட்டியில்வைக்கவும்.20 நிமிடத்துக்கு பின்பு வெளியில் எடுத்து 10 நிமிடம் அறை வெப்பநிலையில் விட்டு ,பின்தேவையான வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும்.தொண்ணூறுகளில் மிகவும் பிரபலமான, குழந்தைகளின் விருப்பமானதாக இது இன்றும் உள்ளது...
தேவையான பொருட்கள்:துருவிய தேங்காய் - 1 கப் (பழுப்பு நிறம் இல்லாதது),சர்க்கரை - 3/4 கப்,தண்ணீர் - 1/4 கப்,ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி,நெய் - 1 மேசைக்கரண்டி (விரும்பினால்) செய்முறை:ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்து, ஒரு கம்பி பதம் (தண்ணீரில் விட்டால் கரையாத நிலை) வரும்வரை பாகு காய்ச்சவும்.துருவிய தேங்காயை பாகில் சேர்த்து, மிதமான தீயில் வைத்து கிளறவும்.தேங்காய் மற்றும் சர்க்கரை நன்றாக கலந்து, பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் திரண்டுவரும் வரை கிளறவும். இந்த நிலையில் ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறி அடுப்பைஅணைக்கவும்.நெய் தடவிய தட்டில் இந்த கலவையை கொட்டி, சமப்படுத்தி, சூடாக இருக்கும் போதேவில்லைகளாக (துண்டுகள்) வெட்டி கொள்ளவும். ஆறிய பின் தேங்காய் பர்பி தயார். தேங்காய் துருவும்போது அதன் பழுப்பு நிறப் பகுதியைத் தவிர்த்து, வெள்ளைப்பகுதியை மட்டும்துருவினால் பர்பி அழகிய வெள்ளை நிறத்தில் இருக்கும். வெல்லம் சேர்த்தும் இதே முறையில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:1/2 கப் ரவை,1கப் சர்க்கரை,2 கப் பால்,1/2 கப் நெய்,1 டேபிள்ஸ்பூன் பிஸ்தா பவுடர்,1 டேபிள் ஸ்பூன் நட்ஸ் துருவல்,ஏலக்காய், குங்குமப்பூ- சிறிதளவு. செய்முறை :ஒரு வாணலியில் நெய் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து சூடானதும் ரவை சேர்த்து வாசம் வரும்வரை வறுக்கவும்.பின்னர் சூடான பால், குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து விடவும். கட்டி சேராமல் கலந்துகொண்டேஇருக்கவும்.பின்னர் சர்க்கரை சேர்க்கவும். முதலில் சர்க்கரை சேர்த்தால் ரவை வேகாது. நன்கு கலந்து விட்டுநெய், நட்ஸ் துருவல் சேர்க்கவும்.மேலும் நெய் சேர்த்து கலக்கவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும்.நன்கு கெட்டியாகி ஓரங்கள் ஒட்டாமல் வரும்போது எடுத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி,சமமாக தட்டி தேய்த்து விடவும்.பின்னர் அதன் மேல் பிஸ்தா தூள் தூவி ஐந்து நிமிடங்கள் விட்டு விருப்பப்பட்ட வடிவில்துண்டுகள் போடவும்.பர்பி துண்டுகளை எடுத்து பரிமாறும் பௌலில் வைக்கவும்.
தேவையான பொருட்கள்:பார்லி -1 கப்பாசிப்பருப்பு -1 கப்பால்-1 கப்வெல்லம் -கால் கப்முந்திரி, திராட்சை, தண்ணீர்,தேவையான அளவுஏலக்காய்த்துாள், சுக்குப்பொடி- சிறிதளவுசெய்முறை:பார்லியை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த பார்லியுடன், பாசிப்பருப்பை சேர்த்துகுக்கரில் நன்கு வேக வைக்கவும். அதில், சிறிது பால் மற்றும் வெல்லம் சேர்த்து, வெல்லம்கரையும் வரை கிளறவும்.வெல்லம் கரைந்ததும், சிறிது ஏலக்காய்த்துாள் மற்றும் சுக்குப்பொடி தூவி, இறுதியாக நெய்யில்வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து, சூடாக பரிமாறலாம். பிரிஜ்ஜில் குளிர வைத்தும்சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:உளுந்தம் பருப்பு 250 கிராம்பால் பவுடர் 200 கிராம்ஏலக்காய் 6நெய்-100 கிராம்எண்ணெய் 400ரோஸ் எசன்ஸ் தேவையான அளவு.செய்முறை:உளுந்தம் பருப்பை நன்கு ஊற வைத்து, நீரை வடிகட்டிய பின், மிக்ஸியில் வெண்ணைய போல்அரைத்து கொள்ளவும். அத்துடன் நெய், பால் பவுடர் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டையாகஉருட்டி கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உருண்டைகளை வேகவிட்டு எடுத்து, ஆறவைக்கவும். பின், தேவையான அளவு ரோஸ் எசன்ஸை சேர்த்து சர்க்கரை பாகுதயாரிக்கவும்.பாகு சற்று ஆறியதும், அதில் உருண்டைகளை போட்டு, மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, சுவையான உளுந்து ஜாமூன் தயார்.பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - 1.5 கப்பச்சை பட்டாணி - 1 கப்இஞ்சி - 1 இன்ச்பச்சை மிளகாய் - 2சீரகம் - 1/2 தேக்கரண்டிகொத்தமல்லி இலைகள் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் - பொரிக்கசெய்முறை:பச்சை பட்டாணி, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் ஆகியவற்றைமிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த பட்டாணி விழுது, உப்பு,கொத்தமல்லி இலைகள் சேர்த்து பிசையவும். தேவைப்பட்டால் சிறிதளவுதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 15-20 நிமிடம் ஊறவைக்கவும்.மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சற்றே தடிமனான வட்டங்களாகஇட்டுக்கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, இட்டு வைத்த பூரியை போட்டு இருபுறமும்பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். கூடுதல் சுவைக்கு சோம்பு, கசூரி மேத்தி அல்லது சீரகப் பொடி சேர்க்கலாம்.காரம் தேவைக்கேற்ப பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். இந்த பூரியை உருளைக்கிழங்கு மசாலா அல்லது சட்னியுடன் பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்:மரவள்ளிக்கிழங்கு -500 கிராம்வெல்லம் - 300 கிராம்உடைத்த முந்திரி, திராட்சை.தேங்காய் துருவல்,ஏலக்காய், தண்ணீர் - தேவையான அளவுஉப்பு -சிறிதளவு.செய்முறை:மரவள்ளிக் கிழங்கை தோல் சீவி, ஆவியில் நன்கு வேகவைத்து, மசித்து வைத்துக் கொள்ளவும்.வெல்லத்தில் தண்ணீர் ஊற்றி, பாகாக காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.மசித்த மரவள்ளிக்கிழங்கு சூடாக இருக்கும் போதே, அத்துடன் வெல்லப்பாகு, தேங்காய்துருவல், முந்திரி, ஏலக்காய், திராட்சை, சிறிதளவு உப்பு சேர்த்து,நன்கு பிசைந்து உருண்டைபிடிக்கவும்.சுவையான, மரவள்ளிக்கிழங்கு லட்டு தயார். சிற்றுண்டிக்கு ஏற்றது. சாப்பிட சுவையாகஇருக்கும்.
.தேவையான பொருட்கள்:ஓட்ஸ் - 1 கப், சிறுபருப்பு - 1 கப், சீரகம் -1 டீஸ்பூன், மிளகு -1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன்,கறிவேப்பிலை -6செய்முறை:ஒட்சை ஒரு பாத்திரத்தில் வாசனை வரும் வரை வறுக்கவும். ஒரு கப் சிறு பருப்பை 2 டம்ளர்தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.வேகவைத்த பருப்பை ஒட்சுடன் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இதை 3 இல் இருந்து 5நிமிடம் வரை ஓரளவு கெட்டி பதம் வரும் வரை கிளறவும்.ஒரு பாத்திரத்தில் நெய்யுடன் மிளகு, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.அதனுடன் சிறிது முந்திரிப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.தாளித்த மிளகு, சீரகத்தை ஓட்சில் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இப்போது சுவையான,சத்தான ஓட்ஸ் பொங்கல் தயார்.
தேவையான பொருட்கள்:விதை நீக்கியபேரீச்சம் பழம்- 300 கிராம் இஞ்சி- 100 _)கிராம் சர்க்கரை- 250 கிராம் முந்திரி- 50 கிராம் ஏலக்காய்- 5நெய்- 50 கிராம் தண்ணீர்-தேவையான அளவு.செய்முறை:இஞ்சியை தோல் நீக்கி சீவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் நைசாகஅரைத்து சாறு எடுக்கவும். அதில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, பேரீச்சம் பழங்களைசிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு, அரை மணி நேரம் ஊற விடவும். ஊறிய பிறகு அந்த கலவையை, மறுபடியும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் .வாயகன்ற கடாயை அடுப்பில் வைத்து, கலவையில் சர்க்கரை சேர்த்து மிதமானசூட்டில் கிளறவும். முக்கால் பதத்தில் இருக்கும் போது பொடித்த ஏலக்காய்,முந்திரி,நெய் சேர்த்து கிளறவும். கலவை, அல்வா பதத்திற்கு வந்ததும், தட்டில் கொட்டிஆறவிடவும். சுவையான, 'பேரீச்சம்பழ அல்வா' தயார்.