ஆசிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழைக்காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜூன் முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை மழைப் பொழிவு ஏற்படும் இந்த காலகட்டம் வெப்பத்துடன் கூடிய ஈரமான பருவம் என்று அழைக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன், அதுவரை நிலவி வந்த கோடை வெப்பம் வெகுவாக குறைந்து காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். சுற்றுப்புறத்தில் 3 டிகிரி முதல்6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும். பொதுவாக, தென்மேற்கு மழைக்காலம் முழுவதும் வெப்பநிலை குறைவாக சீராக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிக மழைப்பொழிவு காரணமாக இந்த வெப்பநிலை குறைவு இருக்கும்.தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திராவின் அருகிலுள்ள பகுதிகளில் இந்த பருவத்தில் மிகக்குறைந்த மழைப் பொழிவு காணப்படும் என்பதால், அப்பகுதிகளில் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும்.அரபிக்கடலுக்கு அருகில் இருப்பதால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த பருவமழை தீவிரம் அடைந்து, இடி, மின்னல் மற்றும் பலத்த மழையாக மாறும்.மழையை கணிக்கும் அறிவியல் கருவிகளையும் கடந்து சில நேரங்களில் பருவமழை அதற்கு முன் அல்லது பிந்தைய காலத் தில் ஏற்படும் போது மனிதர்களுக்கும், விவசாய பயிர்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது.எப்படி இருந்தாலும், தென்மேற்கு பருவமழையை நம்பி பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், ஏராளமான குடிநீர் ஆதாரங் களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள்GPay,PhonePe உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்தி வரும் நிலையில் அதில் குறிப்பிட்ட வகை பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில்GPay,PhonePe,PayTm என பல பணப்பரிவர்த்தனை செயலிகள் இலவச பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகின்றன. இதன்மூலம் மக்கள் கடைகளில் பொருட்களை வாங்குவது தொடங்கி, மின்சார கட்டணம், ரீசார்ஜ் உள்ளிட்டவற்றையும் இந்த செயலிகளின் வழியாக எளிதாக செய்கின்றனர். இந்நிலையில் கடந்த2023ம் ஆண்டு முதலாக ரீசார்ஜ் பணப்பரிவர்த்தனைகளுக்குGooglePay கட்டணம் பிடித்தம் செய்யத் தொடங்கியது. தற்போது தங்கள் செயலிகள் வழியாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பில் செலுத்துபவர்களுக்கு 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை சேவை கட்டணம் பிடிக்க தொடங்கியுள்ளன ஜிபே, போன்பே உள்ளிட்ட செயலிகள். ஆனால் வழக்கமாக மக்கள் தங்கள் வங்கி கணக்குகளைUPI மூலமாக இணைத்து மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு எந்த வித கட்டணமும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அது நமது பாரதம்தான் சோழர்காலம் முதல் இன்று வரையில் கப்பல் துறையில் சிறந்து விளங்கும் நா. இவ்வுலகில் சுமார் 70 சதவீதத்திற்கு அதி மான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் கப்பல் மூலமாகவே நடைபெறுகிறது. நமது தேசிய கல்விக் கொள்கை 2020வும் திறன்மிகு கல்வியை ஊக்குவிக்கும் நிலையில், கடல்சார் கல்வி அவசியம் பெறுகிறது. இத்துறைக்கான வேலை வாய்ப்பும், ஊதியமும் சுமார் லட்சம் வரை மாத சம்பளமாக பெரும் வாய்ப்புள்ளது.பி.எஸ்சி, நாட்டிக்கல் சயின்ஸ், பி.இ. மரைன் இன்ஜினியரிங் படிப்புகளை முடித்த பிறகு கப்பலில் மாலுமிகளாகவும், பொறியாளராகவும் வாய்ப்புள்ளது.கடல்சார் சர்வதேச அமைப்பானது கப்பல் துறையில் பெண்களின் பங்கை ஊக்குவிக்கிறது. கப்பல் துறையில் உலகின் தலைசிறந்த நிறுவனங்களான மெர்ஸ்க், சி.எம்.ஏ.சி.ஜி.எம்.வி.,ஷிப் போன்றநிறுவனங்கள் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. பெண்களும் சாதிக்கலாம்தகுதிகள்பி.எஸ்சி., நாட்டிக்கல் சயின்ஸ், பி.இ., மரைன் இன்ஜினியரிங் படிப்புகளை வழங்க, ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் கப்பல் போக்குவரத்து இயக்குனரகத் தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.இப்படிப்புகளில் சேர்க்கை பெற போக்குவரத்து இயக்குன ரகத்தின் அனுமதி பெற்றிருப்ப தும் அவசியமாகிறது.இத்தகைய படிப்புகளை பயில மாணவர்கள் உடற்தகுதியும், சரியான கண்பார்வையையும் பெற்றிருப்பது மிகவும் அவசியம்.கலர் பிலைண்டர்ஸ் இருத்தல் கூடாது. கப்பலில் பயணித்து வேலைபார்க்க உள்ளதால், இத்தகைய உடற்தகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.இந்ததுறையில்சேர்ந்துபயிலஇயற்பியல், கணிதம்மற்றும்வேதியியல்பாடங்களில்குறைந்தது 60 சதவீதமதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்ணும் எடுத்திருக்க வேண்டும்.இந்த படிப்புகளில் சேர்க்கை பெற இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஐ.எம்.யு., சி.இ.டி., என்ற நுழைவுத்தேர்வை எழுத வேண்டும்.
அணில்கள் தங்களின் உணவுக்காக கடினமான விதைகளைச் சேகரித்து பூமிக்குள் புதைத்து வைக்கிற செயலை வழக்கமாக செய்து வருகின்றன. பெரும் பாலும் அந்த செயல்பாட்டை அணில்கள் மறந்துவிடுகின்றன. எனவே பல லட்சக் கணக்கான மரங்கள் அந்த விதைகளால் வளர்ந்திருக்கின்றன. அந்தவகையில் அணில்களுக்கு நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டு இருக்கிறோம். அணில்களை போல விதைகளை விதைப்போம். விதை பந்துகளை உருவாக்கி பல இடங்களில் வீசுவோம். அதனால் மரங்கள் வளர வாய்ப்புகள் இருக்கின்றன. நம்மை காக்கும் இயற்கையை காக்கும் செயல்களில் அணில்களை பின் பற்றுவோம்.
தபால் அலுவலக நிரந்தர வைப்பு நிதி,வங்கிகளைப் போலவே, பல திட்டங்கள் தபால் நிலையங்களிலும் நடத்தப்படுகின்றன. தபால் அலுவலக நேர வைப்பு நிதி.1 முதல்5 ஆண்டுகள் வரையிலான கால அவகாசம் கொண்ட நிரந்தர வைப்பு நிதிகளுக்கான விருப்பங்கள் தபால் அலுவலகத்தில் கிடைக்கின்றன.5 ஆண்டு நிரந்தர வைப்பு நிதிக்கு7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதனுடன், வருமான வரிச் சட்டம்80C இன் கீழ் வரிச் சலுகைகளையும் பெறுவீர்கள். நீங்கள் விரும்பினால், இந்தத் திட்டத்தில் வட்டி மூலம் இரண்டு மடங்கு அசல் தொகையைப் பெறலாம் மற்றும் உங்கள் தொகையை மூன்று மடங்காகப் பெறலாம்.அஞ்சல் அலுவலகத்தில் உங்கள் பணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க, நீங்கள்5 வருடFDஐ தேர்வு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து, அது முதிர்ச்சியடைவதற்கு முன்பு அதை நீட்டிக்க வேண்டும். நீங்கள் இந்த நீட்டிப்பை தொடர்ச்சியாக2 முறை செய்ய வேண்டும், அதாவது, இந்தFDஐ15 ஆண்டுகளுக்கு இயக்க வேண்டும்.10 லட்சம் முதலீட்டில் 20 லட்சத்திற்கும் அதிகமான வட்டிஇந்த FD-யில் நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், 7.5 சதவீத வட்டி விகிதத்தில், 5 ஆண்டுகளில் இந்தத் தொகைக்கு ரூ.4,49,948 வட்டி கிடைக்கும். இந்த வழியில், மொத்தத் தொகை ரூ.14,49,948 ஆக இருக்கும். ஆனால் இந்தத் திட்டத்தை5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், உங்களுக்கு ரூ.11,02,349 வட்டி மட்டுமே கிடைக்கும்,10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மொத்தத் தொகை ரூ.21,02,349 ஆக இருக்கும். அது முதிர்ச்சியடைவதற்கு முன்பு நீங்கள் அதை மீண்டும் ஒருமுறை நீட்டிக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில்,15வது ஆண்டில், ரூ.10 லட்சம் முதலீட்டிற்கு ரூ.20,48,297 வட்டி மட்டுமே கிடைக்கும்.முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ.30,48,297 கிடைக்கும்.இந்த வழியில், முதிர்ச்சியின் போது உங்களுக்கு மொத்தம் ரூ.30,48,297 கிடைக்கும், அதாவது, உங்கள் அசல் தொகையை விட இரண்டு மடங்கு வட்டி மற்றும் உங்கள் தொகை மூன்று மடங்காக அதிகரிக்கும்.அஞ்சல் அலுவலக 1 வருட FD-ஐ முதிர்வு தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் நீட்டிக்கலாம்,2 வருடFDஐ12 மாதங்களுக்குள் நீட்டிக்கலாம், மேலும்3 மற்றும்5 வருடFDஐ நீட்டிக்க, முதிர்வு காலத்திற்குப் பிறகு18 மாதங்களுக்குள் அஞ்சல் அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இது தவிர, கணக்கைத் திறக்கும் நேரத்தில் முதிர்வுக்குப் பிறகு கணக்கை நீட்டிக்கக் கோரலாம். முதிர்வு நாளில் தொடர்புடையTD கணக்கிற்குப் பொருந்தும் வட்டி விகிதம் நீட்டிக்கப்பட்ட காலத்திற்குப் பொருந்தும்.மீதமுள்ள அஞ்சல் அலுவலகFDகளுக்கு எவ்வளவு வட்டி உள்ளது.வெவ்வேறு தபால் அலுவலக நிலையான வைப்புத்தொகைகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. 1 வருட நிலையான வைப்புத்தொகைகள் ஆண்டுக்கு 6.90%, 2 வருட நிலையான வைப்புத்தொகைகள் ஆண்டுக்கு 7.00%, 3 வருட நிலையான வைப்புத்தொகைகள் ஆண்டுக்கு 7.10% மற்றும்5 வருட நிலையான வைப்புத்தொகைகள் ஆண்டுக்கு 7.50% வட்டியை வழங்குகின்றன.
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி,2018 ஆம் ஆண்டு முதல் ஆனந்த் பிரமலை மணந்தார். தொழிலதிபர் அஜய் பிரமல் மற்றும் டாக்டர் ஸ்வாதி பிரமல் ஆகியோரின் மகனான ஆனந்த், பிரமல் குழுமத்தின் வாரிசு. நிதி சேவைகள், சுகாதார பகுப்பாய்வு, மருந்து மற்றும் கண்ணாடி பேக்கேஜிங் உள்ளிட்ட பல துறைகளில் ஆர்வமுள்ள ஒரு கூட்டு நிறுவனமான பிரமல் குழுமத்தின் தலைவராக அஜய் உள்ளார்.இந்திய மருந்து நிறுவனங்களில் அஜய் பிரமலின் நிறுவனம் ஐந்தாவது இடத்தில் உள்ளது, மேலும் இது வெளிநாடுகளில் தொடர்ச்சியான கையகப்படுத்துதல்களைச் செய்துள்ளது. ஆனந்த் பிரமலைத் தவிர, அஜய் மற்றும் ஸ்வாதிக்கு நந்தினி பிரமல் என்ற மகள் உள்ளார். ஆனந்தின் மூத்த சகோதரியான நந்தினி, தனது தந்தையின் ரூ.9,087 கோடி நிறுவனத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்.அஜய் மற்றும் ஸ்வாதி பிரமலின் மகளான நந்தினி பிரமல், அக்டோபர்1980 இல் பிறந்தார், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை(ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். இது மட்டுமல்லாமல், பட்டப்படிப்புக்குப் பிறகு, நந்தினி ஸ்டான்போர்ட் பட்டதாரி வணிகப் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றார்.நந்தினி பிரமல், பிரமல் எண்டர்பிரைசஸின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.கல்வியை முடித்த பிறகு, நந்தினி பிரமல் மெக்கின்சி& கம்பெனியில் சேர்ந்து வணிக ஆய்வாளராகப் பணியாற்றினார்.2006 ஆம் ஆண்டில், அவர் தனது குடும்பத் தொழிலில் சேர்ந்து, அவர்களின் வணிகத் தொகுதியின் தன்மையைப் புரிந்துகொள்ள தனது தந்தையுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தொடங்கினார். பிரமல் குழுமத்தில் பல குறிப்பிடத்தக்க பதவிகளை அவர் வகிக்கிறார்.அவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார். அவர் பிரமல் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் நிர்வாகமற்ற இயக்குநராகவும், பிரமல் பார்மா லிமிடெட்டின் தலைவராகவும் உள்ளார். கூடுதலாக, நந்தினி குழுவின் மனிதவளம், நிதி, ஆபத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தர செயல்பாடுகளுக்கும் தலைமை தாங்குகிறார்.நந்தினி பிரமல்'இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணி' பிரமல் குழுமத்தில் நந்தினி பிரமல் சேர்ந்ததிலிருந்து, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் மகத்தானவை. பிரமல் பார்மாவை பொதுவில் கொண்டு செல்வது நந்தினி பிரமலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். கிராமப்புறங்களில் சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளை வழங்கும் நோக்கத்துடன், நந்தினி தனது சகோதரர் ஆனந்த் பிரமலுடன் இணைந்து பிரமல் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.2010 ஆம் ஆண்டில், நந்தினி நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் முக்கிய பங்கு வகித்தார், அதில் அவர்களின் உள்நாட்டு ஃபார்முலேஷன் வணிகத்தை அபோட் லேப்ஸுக்கு3.8 பில்லியன் டாலர்களுக்கு விற்றது அடங்கும். நந்தினி பிரமலின் தொலைநோக்குப் பார்வை நிறுவனத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது. அவரது வணிக புத்திசாலித்தனம் மற்றும் சமூக உலகம் தான்2020 மற்றும்2022 ஆம் ஆண்டுகளில் பிசினஸ் டுடேவால்'இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்' பட்டியலில் அவர் இடம்பெற வழிவகுத்தது. இளம் தொழில்முனைவோருக்கு2014 ஆம் ஆண்டில் உலக பொருளாதார மன்றத்தால்'இளம் உலகளாவிய தலைவர்' விருதும் வழங்கப்பட்டது.நந்தினி பிரமலின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில், அவர் பீட்டர் டி'யங்கை மணந்தார், மேலும் இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நந்தினியைப் போலவே, பீட்டரும் ஸ்டான்போர்டில் எம்பிஏ பட்டதாரி மற்றும் மெக்கின்சி& கம்பெனியில் பணிபுரிந்தார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் இளங்கலை அறிவியல் பட்டத்தையும் பெற்றுள்ளார்.இந்த ஜோடி2009 ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் உள்ள ராம்பாக் அரண்மனையில் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டது, மேலும் திருமண விழா கிறிஸ்தவ சடங்குகளின்படி நடைபெற்றது. பீட்டர் டி'யங் தற்போது பிரமல் குளோபல் பார்மாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், பிரமல் பார்மாவின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.பிரமல் குழுமத்தின் மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றாகவும், பல இளம் தலைவர்களுக்கு ஒரு உத்வேகமாகவும் நந்தினி பிரமல் உள்ளார். அவரது நிகர மதிப்பு வெளியிடப்படவில்லை, இருப்பினும், அவரது தந்தை அஜய் பிரமலின் நிகழ்நேர நிகர மதிப்பு310 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. நந்தினியின் வழிகாட்டுதலின் கீழ், மருந்து வணிகம் பிரமல் எண்டர்பிரைசஸிலிருந்து பிரிக்கப்பட்டு, பிஎஸ்இ மற்றும் என்எஸ்இயில் பட்டியலிடப்பட்டது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து 'ஒட்டிய கடற் பகுதியில் யானை (Ghost shark) மீன்களில் ஒரு புது இனத்தை உயிரியலாளர்கள் கண்டறிந்துஉள்ளனர்.இதுஉயிரியலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலிய நகரமான மெல்போர்னின் குகை ஒன்றில் புதிய சில்வண்டு இனம் ஒன்று கண்டறி யப்பட்டுள்ளது. அரை அங்குல அளவுள்ள இது, பழுப்பு நிற உட லும், கருப்பு நிறக் கண்களும் கொண்டுள்ளது.
மனித மூளையானது 4 வகையான அலைகளை வெளிப்படுத்துகிறது. மனித மூளை என்பது மின் தூண்டல் மூலம் இயக்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைத்து வயது ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தங்களுக்கு ஏற்படும் எண்ணங்களை பொறுத்து வெவ்வேறு மூளை அலைகள் உருவாகி, அதன் உணர்வுகளை பெறுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.தீவிரமாக இயங்கும்போது பீட்டா அலைகளை மூளை உரு வாக்குகிறது. இந்த பீட்டா அலைகளின் அதிர்வெண் ஒரு வினாடிக்கு 15 முதல் 40 சுழற்சிகள் வரை இருக்கும். சற்று ஓய்வு நிலையில் மூளை ஆல்பா அலைகளை வெளியிடுகிறது. ஆல்பா அலைகளின் அதிர்வெண் வினாடிக்கு 9 முதல் 14 சுழற்சிகள் வரை இருக்கும். ஒரு பணியை முடித்துவிட்டு ஓய்வு நிலையில் இருக்கும்போது ஆல்பா அலைகளை வெளியிடும். தியானம் செய்யும் போது, மனம் மிகவும் ஓய்வான நிலையில் இருக்கும் போது ஆல்பா அலைகளை மூளை வெளியிடுகிறது.மூளை வெளிப்படுத்தும் மற்றொரு அலை தீட்டா வகை அலைகள் ஆகும். இந்த வகை அலையின் அதிர்வெண் வரம்பு பொது வாக ஒரு வினாடிக்கு 5 முதல் 8 சுழற்சிகள் வரை இருக்கும். ஒருவர் பணி முடித்து ஓய்வு எடுக்கும்போதும், கனவு காண தொடங்கும்போதும் தீட்டா அலை நிலையில் இருப்பார். மூளை வெளிப்படுத்தும் மற்றொரு அலை நிலை டெல்டா ஆகும். இங்கு மூளை அலைகள் மிகப்பெரிய வீச்சு மற்றும் மெதுவான அதிர் வெண் கொண்டவை. வினாடிக்கு 1.5 முதல் 4 சுழற்சிகள் வரம்பில் இருக்கும். மூளை ஏறக்குறைய முற்றிலும் செயல் கடந்த நிலையில் அமைதியாக காணப்படும். ஞானிகள் இந்த அலை நிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது. பொதுவாக, இந்த 4 மூளை அலை நிலைகளும் மனித இனத்துக்கு பொதுவானவை.
பென்குயின் பறவையினத்தை சேர்ந்தது; ஆனால் பறக்க இயலாதது. குள்ள உருவில் இறக்கையை விரித்தபடி சிறிய அடியெடுத்து, தலையை அசைத்தபடி நடக்கும். அமைதியாக காட்சி தரும் உயிரினம் பென்குயின்.இசைக்கருவியான டிரம்பட் போல் ஒலி எழுப்பும். இந்த பறவைக்கு,'பனிப்பாடி' என தமிழ் பெயர் உள்ளது.அதிகம் குளிருள்ள பூமியின்துருவ பிரதேசத்தில் கூட்டம் கூட்டமாக வசிக்கிறது; உலகம் முழுதும்,19 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆப்ரிக்காவின் தெற்கில் மித வெப்ப மண்டல பகுதியிலும் வசிக்கிறது. இந்த பறவை நீந்துவது, வானில் பறப்பது போன்றே காட்சியளிக்கும்.வாழ்நாளின்,75 சதவீதம் நேரத்தை நீருக்கடியில் உணவு தேடுவதில் செலவிடும். அலகின் முன்பகுதி வளைந்து காணப்படுவதால் மீன்களை தவற விடாமல் பிடித்து உணவாக்கிவிடும்.உடல் அமைப்பால் மணிக்கு,25 கி.மீ., வேகத்தில் நீந்தும் திறன் உடையது. நீருக்கடியில் சுவாசிக்க முடியாது; ஆனால், அதிக நேரம் மூச்சை அடக்கும் திறன் பெற்றுள்ளது. கடல் உயிரினமான திமிங்கலம் போல் தோலின் அடிபகுதியில் கொழுப்பு சூழ்ந்திருக்கும். ஆயிரக்கணக்கில் பென்குயின்கள் இணைந்து வெப்ப நிலையை சமன் செய்து கொள்ளும்.பென்குயின் நன்னீரை குடிக்காது; கடல் நீரை மட்டுமே குடிக்கும். உடலில் உள்ள ஒருவகை சுரப்பியால், குடிக்கும் நீரில் உப்பை பிரித்து வெளியேற்றி விடும்.முட்டையிட பாதுகாப்பான இடத்தை பெண் பறவை தேர்வு செய்யும்.பின், ஆண் துணையை தேடி சேர்ந்து வாழும். இந்த சொந்தம், பல ஆண்டுகள் நீடிக்கும். பொதுவாக, இரண்டு முட்டைகள் இட்டபின், பெண் பறவை இரை தேட சென்றுவிடும்; ஆண்தான். அந்த முட்டையை அடை காக்கும்.முட்டை பொரிந்து, குஞ்சுகள் வளர்ந்ததும், கடலில் உணவு தேடும்.குட்டிக்கரணம் அடிக்கும் இயல்பு உடையது பென்குயின். அலைகள் மீது மிதக்கவும் செய்யும். இதற்கு, முதன்மை எதிரி சீல் என்ற கடல் நாய்.மனிதன் எளிதில் அண்ட முடியாத துருவப் பகுதிகளில் பென்குயின் வசித்த போதும், எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல்25ம் தேதி, உலக பென்குயின் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி இந்த உயிரினத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்வுகள் உலகம் முழுதும் நடத்தப்படுகிறது.
ISRO என்பது பற்றித் நமக்குத் தெரியும். ஆனால் தெரியாத ஒன்று உண்டு. பள்ளியில் படிக்கும் நம் மாணவர்களை குறிப்பாக +1 படிக்கும் மாணவர்களை ISRO-விற்கு அழைத்துச் செல்ல ஒரு MP க்கு RS.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கிறார்கள். அவர்கள் +2 தேர்வில் இயற்பியல் வேதியியல் மற்றும் கணக்கில் தலா 65% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கட்டணமின்றி நான்கு வருடங்கள் ISRO பொறியாளர் பட்டப் படிப்பை படிப்பது மட்டுமல்ல அவர்கள் தேர்ச்சி பெற்றவுடன் இளநிலைப் பொறியாளராக ISRO வில் பணிநியமணம் பெறுவார்கள். இதுவரை நான் என் பள்ளியில் 45 மாணவர்களை உருவாக்கியுள்ளேன். இது பெருமைக்காக அல்ல. இது பற்றி தெரியாதவர்கள் தெரிந்து அவர்களும் சில ISRO விஞ்ஞானிகளை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம்தான்.இது பற்றிய விவரம் வேண்டுவோர் திரு. பாலமோகன். ISRO SCHOOL EDUCATIONAL DIRECTOR அவர்களை78928 98919 மற்றும் 94814 22237 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.