பிறவியிலேயே காது கேட்காதவர்களுக்கும், வயதாவது அல் லது பிற காரணங்களால் காது மந்தம் அடைந்த வர்களுக்கும், உதவும் வகையிலான ஒரு புது கண்ணாடியை நியூயார்க் கைச் சேர்ந்த கோர்னெல் பல்கலையில் படிக்கின்ற 25 வயது மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.காது கேட்பதில் குறைபாடு உடையவர்களா ல் எதிரே பேசுபவருடைய வாய் அசைவை வைத்துத் தான் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.இவ்வாறு அறிந்து கொள்வதற்குப் பேசுபவரை மிகவும் கூர்மை யாகக் கவனிக்க வேண்டு ம். இந்தச் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக நிர்பாய்நரங் (Nirbhay Narang) எனும் மாணவர் ஒரு கண்ணாடியை வடிவமைத்துள்ளார்.இதைச் சாதாரண மூக் குக் கண்ணாடி போலக் கண்கள் மீது அணிந்து கொள்ளலாம். இது ஐபோன் உடன் ப்ளூடூத் மூலம் இணைக்கப் பட்டிருக்கும்.எதிரே ஒருவர் பேசும் போது அவருடைய குரல் போனில் பதிவாகி அது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூல மாக எழுத்தாக, மாற்றப் படும்.இந்த எழுத்து அணிந்திருப்பவருடைய கண்ணாடியில் தெரியும்.இதனால் தன்னிடம் பேசுபவர் என்ன பேசுகிறார் என்பதைக் கண்ணாடியில் வாசித்து அறிந்துகொள்ள முடியும். அமெரிக்காவில் மட்டும் விற்கப்படுகின்ற இந்தக் கண்ணாடி விரைவில் உலகம் முழுதும் பிரபலமாகும்.
இத்தாலியில் வெசுவியஸ் எரிமலை வெடித்து பாம்பெய் நகரம் அழிந்ததை நாம் வரலாற்றில் படித்திருப்போம். இந்த வெடிப்பின் போது இறந்த ஒருவரின் உடலில், அதீத வெப்பத்தால் மூளை கருப்பு நிறக் கண்ணாடியாக மாறி இருப்பதைச் சமீபத்தில் அங்கு ஆய்வுசெய்த தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூகம்பம் ஏற் படுவதற்குப் பல்வேறு கார ணங்கள் உள்ளன. சூரியனின் வெப்பமும் கூட பூகம்பத்திற்கு ஒரு காரணம் என்று ஜப்பானிய புவியியலாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிறுவியுள்ளனர்.
வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி 3.5 மூன்றரை கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது.55டன் எடையுள்ள ஸ்டீல் (கம்பம்) பயன் படுத்தப்பட்டுள்ளது. கொடி கம்பத்தின் உயரம் 360 அடி. கொடி கம்பத்தை நிறுத்த (நடுவதற்கு) கிரேன் செலவாக 60லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.கொடியின் உயரம் 80அடி, அகலம் 120 அடி தேவைப்படும்போது12 கொடிகள் (மாற்று) தயாராக உள்ளன.இது ஒரு உலக சாதனை ஆகும். வாகா எல்லை கோட்டில் இருந்து 200 மீட்டர் உள்புறமாக மிக கம்பீரமாக இந்திய தேசிய கொடி பறக்கும்.இந்தியர் என்பதில் நாம் பெருமை கொள்வோம்.
துபாய் தங்க நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு தங்க வர்த்தகம் மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது. துபாயில் சுமார் 300 தங்கக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் எல்லா நேரங்களிலும் தோராயமாக 10 டன் தங்கம் இருக்கும். 2013 ஆம் ஆண்டில், இங்கு 396 யானைகளின் எடைக்கு சமமான தங்கம் வர்த்தகம் செய்யப்பட்டது.
சென்னையில் வசிக்கும் ஷ்ரவண் மற்றும் சஞ்சய், ஆண்டுக்கு ரூ.120 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் இளைய தலைமை நிர்வாக அதிகாரி,இந்தியாவின் இளைய தொழில்முனைவோர். இருவரும் சேர்ந்து,2012 இல்"வடிவமைப்பு பரிமாணம்" செயலியை அறிமுகப்படுத்தினர். இந்த இரண்டு சகோதரர்களும் தங்கள் முதல் செயலியை உருவாக்கியபோது அவர்கள் முறையே7 ஆம்8 ஆம் வகுப்பு மாணவர்கள்.இதுவரை, அவர்கள்11க்கும் மேற்பட்ட செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பனிப்பாறைகள் என்பது பனிக்கட்டிகளாக மாறிய உறைந்த ஆறுகள் ஆகும். ஆண்டு முழுவதும் பனி ஒரே பகுதியில் இருக்கும் போது பனிப்பாறைகள் என்ற பெரிய அளவிலான திட வடிவ படிகமாக உருவாக தொடங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும், புதிய பனி அடுக்குகள் முந்தைய அடுக்குகளை புதைத்து சுருங்க வைக்கின்றன. சிறிய ஐஸ் துண்டுகள் போல உருவாகும் பனிப்பாறைகள் 100 ஆண்டுகளில் மலை போல் மிகப்பெரிய அளவை எட்டுகிறது.பனிப்பாறைகள் அனைத்து வடிவங்களிலும், அளவிலும் காணப்படுகின்றன. ஐஸ்-க்யூப் அளவிலான துண்டுகள் முதல் ஒரு சிறிய நாட்டின் அளவிலான பனித்தீவுகள் வரை உள்ளன. பனிப்பாறை என்ற சொல் 16 அடி விட்டம் கொண்ட பெரிய பனித் துண்டுகளை குறிக்கிறது. பெர்கிபிட்ஸ் மற்றும் க்ரோலர்ஸ் என்று அழைக்கப்படும் சிறிய பனிப்பாறைகள், கப்பல்களுக்கு மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் நீரில் அமிழ்ந்து கிடக்கும் இவற்றை கண்டறிவது கடினம். வடக்கு அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிக் கண்டத்தை சுற்றியுள்ள குளிர்ந்த நீர்நிலைகளில் தான் பூமியில் உள்ள பெரும்பான்மையான பனிப்பாறைகள் காணப்படுகின்றன.இந்த பனிப்பாறைகள் அதன் நீட்சியாக பனி படலங்களை தோற்றுவிக்கின்றன. பனிப்படலம் என்பது நிலத்தில் அமைந்து 50,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி காணப்படும் மிகப்பெரிய உறைபனி ஆகும். இப்போது பூமியில் இரண்டு பனிப்படலங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று உலகின் மிகப்பெரிய தீவானகிரீன்லாந்தின்பெரும்பகுதியைஉள்ளடக்கியது, மற்றொன்று அண்டார்டிக் கண்டம் முழுவதும் பரவியுள்ளது.
பிரேசில் நட் எனப்படும் பருப்பு வகையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால், இது பெண் களின் குடல் ஆரோக்கி யத்தை மேம்படுத்து வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகின் மிகப் பழமையான பாலாடைக்கட்டி (சீஸ்) சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் வயது 3,600 ஆண்டுகள் என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
முகம் பார்த்தல், கண் பார்வை, வாகனம், ஜன்னல், அறிவியல் ஆய்வக கண்ணாடி என பல விதமான கண்ணாடிகள் உள்ளன. இதில் சில ஒளி ஊடுருவும், சில ஊடுருவாது. கண்ணாடியானது சிலிக்கா (மணல்). கால்சியம் கார்பனேட் (சுண்ணாம்புக்கல்), சோடியம் கார்பனேட் வேதிப்பொருள்களால் ஆனது. இவற்றை அதிக வெப்பநிலையில் அக்கலவை உருகிப் பாகுபோல ஆகிவிடும். உருகிய கண்ணாடியை வெவ்வேறு வடிவிலான வார்ப்புகளில் ஊற்றி அதை ஒரே சீராகவும், மெதுவாகவும் குளிரச் வெப்பப்படுத்தும்போது செய்து கண்ணாடிப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன .
ஒருவர் மற்றவர்களை சார்ந்து இயங்குவதே சமூகம். ஒரு துறையைசார்ந்தவர், பிறதுறையினருடன்இணைந்தேசெயல்படுகின்றனர். அதற்கு, இதர துறைகள் குறித்த திறனையும், அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.அதேபோல், இன்றைய காலத்தில் எந்த ஒரு இன்ஜி னியரும் தனித்து செயல்பட இயலாது. மெக்கானிக்கல் இன்ஜினியர் மெக்கானிக் கல் துறை சார்ந்த அறிவை மட்டுமே கொண்டு செயல் பட முடியாது. கம்ப்யூட்டர் இன்ஜினியர் கம்ப்யூட்டர் துறை சார்ந்த அறிவை மட் டுமே கொண்டு செயல்படமுடியாது.எந்தஒருதுறைஇன்ஜினியரும்அவர்களதுதுறையில்ஆழ்ந்தஅறிவைவளர்த்துக்கொள்ளவேண்டும்.அதேதருணம், இதரதுறைகள்சார்ந்தசெயல்பாட்டுஅறிவையும்வளர்த்துக்கொள்ளவேண்டியதுஅவசியம்.ஆட்டோமேஷன், ஆர்ட்டி பிசியல் இன்டெலிஜென்ஸ் அனைத்தும் மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்கு கின்றன. இத்தகைய முன்னேற்றங்கள் தொடரும் பட்சத்தில், ஒரு காலகட்டத் தில் சமுதாய கட்டுப்பாடுகள்உடையும், ஏற்றத்தாழ்வுகள் குறையும், நீண்ட காலத்தை ஒப்பிட்டால் புதிய வாய்ப் புகளும், பணி செய்யும் முறையும் மாற்றம் காணுமே தவிர, வேலைவாய்ப்புகள் குறையாது, எதிர்காலத்தில் ஏராளமான முன்னேற்றங்கள் தொடர்ந்து, அனைவருக்கும் அனைத்தும் சாத்தியமாகும்நிலை உருவாகும். மனிதர்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளை இன்று, 'ஹியுமானாய்டு' செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன.மனித மூளை செயல்பாடுகளை அடிப்ப டையாகக் கொண்டே, இன்று 'ஆர்ட்டிபிசியல் இன்டெலி ஜென்ஸ்' செயல்படுகிறது. அதேபோல், மனித கை மற்றும் கால் செயல்பாடு களை அடிப்படையாகக் கொண்டே 'மெக்கானிக்கல் இன்ஜினியரிங்' செயல் படுகிறது. இவ்வாறு, இயற்கையை பார்த்து, புரிந்து அவற்றில் இருந்தே அனைத்து கண்டுபிடிப்புகளும் நிகழ்கின்றன. இதுவரை இயற்கையில் இருந்து மனிதர்கள் கற்ற வற்றை, இயந்திரங்களை கற்றுக்கொள்ளச் செய் கிறோம். அதுவே, 'ஆர்ட்டி பிசியல் இன்டெலிஜென்ஸ்'.இச்சூழலில், அனைத்து மாணவர்களையும் முழுமையான மனிதராக்க வேண்டும் என்பதே எங்களது கல்வி நிறுவனத்தின் பிரதான குறிக்கோள். அத்தகைய குறிக்கோளை அடைய, ஒரு இன்ஜினியர் பல்வேறு விதமான துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆக வேதான், அனைத்து துறை சார்ந்த மாணவர்களுக்கும் வேளாண்மை பாடம் செயல் முறையில் கற்பிக்கப்படுகிறது.ஆட்டோமொபைல் சார்ந்த பயிற்சியும், பயாலஜி குறித்த அறிவையும் அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் வழங்குகிறோம்.
ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைவான அளவுள்ள நெகிழிகள், நுண் நெகிழிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உலகின் எல்லா இடங்களையும் மாசுபடுத்தி வருகின்றன. மேகங்களில் உள்ள நுண் நெகிழிகளால் பருவ கால நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா பல்கலை கூறியுள்ளது.வட பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் ஒரு புதிய கடல்நத்தை இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு பாத்திதேவியஸ் காவ்டாக்டைலஸ் என்று பெயரிட்டுள்ளனர். இது ஒளிரும் ஆற்றல் பெற்ற நத்தைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.