25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நலம் வாழ

Oct 22, 2024

ராஜ்மா

கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றும் வேலையைச் செய்யக்கூடியது சிறுநீரகம், 'கிட்னி பீன்ஸ்' எனப்படும் ராஜ்மாவில் உள்ள உயர்தர புரதம் சிறுநீரகம் சிறப்பாகச் செயல்பட உதவும். உடலுக்கு கேடு செய்யாத புரதம் இதில் உள்ளதால் இது கொழுப்பை உடலில் சேர விடாது..

Oct 21, 2024

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவு

ராகி கீரை அடை: இரும்புச்சத்து, ரத்தசோகை நீங்கும். எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும், சருமத்துக்கு நல்லது, பார்வைத்திறன் மேம்படும் ஆப்பம்: செரிமானமாவது எளிது, வயிறு, குடலுக்கு நல்லது, வயிற்று, வாய் புண்களை குணப்படுத்தும் ரவை புட்டு: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு காலை உணவாக கொடுக்க சிறந்தது 

Oct 20, 2024

மூட்டு வலி நீக்கும் தேங்காய் , பேரீச்சம் பழம்

அரைமுடி தேங்காயும், 5 பேரிச்சை பழத்தையும் காலை உணவாக கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.தேங்காயை துருவி 5 பேரீச்சம் பழத்தை அதனுடன் பிசைந்து சாப்பிடணும்.மூட்டு வலி, எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, நரம்பு பலவீனம், உடல் பருமன், இளைப்பும், இருதய பலவீனம், மனசஞ்சலம்.இவை அனைத்தும் போக்கும் மாமருந்தான உணவுகள் தேங்காயும் பேரிச்சையும் தான்.

Oct 16, 2024

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க....

காய்கறி சூப்கள், முளைக் கட்டிய பயிர்கள், சோளம், தேனுடன் கூடிய மூலிகை தேநீர், மசாலா சாய், எலுமிச்சை, புதினா இலைகள், உலர் பழங்கள் மற்றும் பருப்புகள், புரோபயாடிக்குகள், தயிர், மோர், பழங்கள்.வேகவைத்த காய்கறிகள், கீரைகள், பூண்டு, மஞ்சள், சுரைக்காய்போன்றவைகளைசாப்பிடலாம்

Oct 14, 2024

உடலுக்குத் தேவையான வைட்டமின் சி' சத்துக்கள் நிறைந்த நார்த்தை   இலை பொடி

நார்த்தங்காய் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி' சத்துக்களை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ள நார்த்தங்காயை பலரும் ஊறுகாய் தயாரிக்க மட்டுமே பயன்படுத்துவார்கள் ஆனால், நார்த்தையின் இலை, காய் ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது. இதன் இலையைப் பொடியாக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு பெருகும்.

Oct 13, 2024

ஹீமோகுளோபின் கூட சாப்பிடவேண்டியவை

பேரிச்சம்பழம் -தினம் 4 முருங்கைக்கீரை - வாரம் 2 முறை பீட்ரூட் ஜூஸ் - 100 ml வாரம் 2 முறை சுண்டைக்காய்-வாரம் 2 முறை கருப்பட்டி வெல்லம்-தினம் ஊறவைத்த கருப்பு உலர் திராட்சை - தினம் 4 மாதுளை - வாரம் 2 முறை நெல்லிக்காய்-தினமும் ஒன்று பீர்க்கங்காய்- வாரம் 2 முறை முளைகட்டிய தானியங்கள்  - வாரம் 4 முறை

Oct 10, 2024

இருதய அடைப்பு, இருதய வலி நீங்குவதற்கு சூரணம்

சுக்கு, மிளகு, கருஞ்சீரகம் வகைக்கு 100 கிராம் வாங்கிவந்து தனித்தனியாக லேசாக வறுத்து தனித்தனியாக இடித்து பொடியாக்கி ஒவ்வொன்றும் 50 கிராம் அளவாக கூட்டி நன்றாக அரைத்து பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு காலை மாலை திரிகடி வீதம் நாட்டு சர்க்கரையுடன் கலந்து உண்டுவர இருதய அடைப்பு, நெஞ்சு எரிச்சல், மேல்மூச்சு வாங்குதல் நீங்கும் ஆஞ்சியோ, சர்ஜரி செய்ய வேண்டியதில்லை, ஸ்டன்ட் வைக்கும் அவசியமல்லை.

Oct 07, 2024

நின்ற நிலையில் தண்ணீர் குடிக்காதீர்கள்

45 முதல் 60 நாட்களுக்கு தினமும் தண்ணீருடன் திராட்சையும் (ஒரு இரவு ஊற  வைக்கப்பட்ட திராட்சை ) தினசரி உட்கொண்டால் இரத்த சோகை குணப்படுத்தலாம்.நின்ற நிலையில் தண்ணீர் குடிக்காதீர்கள். அது முழங்கால் வலிக்கு வழிவகுக்கிறது, எனவே எப்போதும் உட்கார்த்த நிலையில் தண்ணீர் குடிக்க வேண்டும்.காதுகளில் எலுமிச்சை சாறு 3 முதல் 4 சொட்டுகளை விட்டால், அது கடுமையான காது வலியை குணப்படுத்துவதில் மந்திரம் போன்றது.

Oct 06, 2024

குடல் வாலிலுள்ள கற்கள் வெளியேற…..

குடலில் சேர்ந்து இருக்கும் கற்களைஅகற்ற சுத்தமான விளக்கெண்ணெய் 30 மில்லியும் ,வாழைக்கிழங்கு சாறு அல்லது வாழைத்தண்டு சாறு 30 மில்லியும் கலந்து ,காலை நேரத்தில் உணவிற்கு முன் கொடுக்க வேண்டும்.இப்படி 3 நாட்கள் தர வேண்டும். பலன் குடல் வாலிலுள்ள கற்கள் வெளியேறி விடும். முதல் நாளே வலி இருக்காது.  3 நாட்களில் பூரணக் குணம் தெரியும்.

Oct 04, 2024

நோய்களை உருவாக்கும் உணவுகள் 

டால்டா - மாரடைப்பு, கேன்சர், உடல் பருமன்,இரத்த அழுத்தம். மைதா- மலச்சிக்கல், நீரிழிவு. கணைய பாதிப்பு.  வெள்ளை சர்க்கரை - எலும்பு தேய்மானம், நீரிழிவு, உடல்சூடு, தோல் நோய், ஆண்மையின்மை யின்மை. ரிபைண்ட் ஆயில்(சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் )  - அல்சர், புற்றுநோய், மூட்டுவலி, முடி நரைத்தல், நைஸ் உப்பு ( அயோடின் சேர்த்த உப்பு )  - பக்கவாதம், இரத்தகொதிப்பு, அறிவுத்திறன் பாதிப்பு. அஜீண மோட்டோ: ஜீரண உறுப்புகள் சிதைவு, நோய்களை உருவாக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது .

1 2 ... 33 34 35 36 37 38 39 ... 51 52

AD's