நிறைய பணம் பர்சில் இருந்தால் அடிக்கடி அதைத் திறந்து பார்க்க வேண்டாம். எப்போதும் ஜன நடமாட்டம் இல்லாத குறுக்கு வழியில் போக - வேண்டாம். டாக்டரிடம் உடல் கோளாறுகள் சம்பந்தமான விவரம் எதையும் மறைக்க வேண்டாம். அந்த மருந்தை சாப்பிடலாமா, இந்த மருந்தை சாப்பிடலாமா என்று டாக்டரிடம் நீங்கள் யோசனை கேட்க வேண்டாம். பிறர் பேசும் போது அவரை உற்சாகப் படுத்துங்கள் தற்பெருமை பேச வேண்டாம். ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது இன்னொருவரிடம் கூற வேண்டாம் குழந்தைகளை பந்தியின் நடுவே உட்கார வைக்க வேண்டாம். பந்தியில் சாப்பிடும் போது இன்னொரு வீட்டில் சாப்பிட்ட விருந்தைப் பற்றி சாப்பிடும் போது பேச வேண்டாம்.
அறிவியல் ஆராய்ச்சியில் தொடர்ந்து தூக்கம் இல்லாமல் இருந்தால் மூளை செல்கள் தாமாகவே சாப்பிடத் தொடங்குவதற்கு காரணமாகிறது என்று கண்டறிந்துள்ளனர். மூளை தன்னைத்தானே சாப்பிடுவது என்பது மூளையின் செல்கள் தேய்ந்து போனவற்றை அகற்றி, சேதமடைந்த பொருட்களை ஜீரணிக்கும் ஒரு செயல்முறையாகும். இதை மைகரோகலியா எனப்படும் செல்கள் செய்கின்றன. மூளையில் உள்ள மைக்ரோக்லியா செல்கள் ஃபாகோசைட்டோசிஸ் என்ற செயல்முறையின் மூலம் நியூரான்கள் அல்லது அவற்றின் இணைப்புகளை சாப்பிடுகின்றன அல்லது நீக்குகின்றன. எனவே தொடர்ந்து தூக்கம் இல்லாமல் இருந்தால் மனநிலை பாதிப்பு, மறதி நோய் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தலாம். நல்ல தூக்கம் ஆரோக்கியமானது.
உலக பூமி தினம்- ஏப்ரல்-22உலக தந்தையர் தினம்- ஜூன்-18அன்னையர் தினம்- பிப்ரவரி-22உலக பெண்கள் தினம்- மார்ச்-8உலக குடும்ப தினம்- மே-5உலக ஏழைகள் தினம் ஜூன்-28உலக தாய்ப்பால் தினம்- ஆகஸ்ட்-01உலக நண்பர்கள் தினம்-ஆகஸ்ட்-03உலக உணவு தினம்-அக்டோபர்-16உலக வறுமை ஒழிப்பு தினம்- அக்டோபர்-17உலக மனித உரிமைகள் தினம்-டிசம்பர்-10உலக பூமி தினம்- ஏப்ரல்-22உலக ஆண்கள் தினம்-நவம்பர்-19உலக மருத்துவர் தினம்- ஜூலை-1உலக எழுத்தறிவு தினம்- செப்டம்பர்-8உலக தபால் தினம்-அக்டோபர்-9உலக மக்கள் தொகை தினம்- ஜூலை-11உலக மூத்தோர் தினம்- அக்டோபர்-1உலக செவிலியர் தினம்- மே-12உலக வன தினம்- மார்ச்-21உலக கால்நடை தினம்-மார்ச்-28உலக கடல் தினம்-ஏப்ரல்-5உலக விலங்குகள் தினம்-அக்டோபர்-4உலக அமைதி தினம் செப்டம்பர்-21
பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை27,2025)"மன்னர் ராஜேந்திர சோழன்,I இன் கடற்படைப் பயணத்தின்1,000வது ஆண்டு நிறைவை" குறிக்கும் வகையில் ஆயிரம் ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.குதிரையில் சவாரி செய்யும் பேரரசர் கப்பலை பின்னணியாகக் கொண்டு இருப்பது போன்ற படம் நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு கவுன்சில் அறக்கட்டளையின் தலைவர் ஆர். கோமகன்ஒரு நாணயத்தை வடிவமைத்து ,நாணயத்தை வெளியிடுவதற்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாணயம் வெளியிடப்பட்டது. குதிரையில் சவாரி செய்யும் பேரரசரின் உருவம், கப்பலைபின்னணியாகக் கொண்டு பொறிக்கப்பட்டுள்ளது.பிரதமரால் வெளியிடப்பட்ட₹1,000 நாணயம். தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் நாணயத்தைப் பெற்றுக்கொண்டனர்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா''இந்திய விண்வெளி ஆய்வு மையம், இஸ்ரோ' உடன் இணைந்து, 'நிசார்' என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது பூமியை அங்குலம் அங்குலமாக படம் பிடித்து, 12 நாட்களுக்கு ஒரு முறை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து ,இந்த செயற்கைக்கோளை ஜி.எஸ். எல்.வி., - எப் 16 ராக்கெட், நாளை மாலை 5:40 மணிக்கு ராக்கெட் எரிபொருள், செயற்கைக்கோள் என, மொத்தம், எடையை 420.50 டன்சுமந்தபடிவிண்ணில்ஏவப்படுகிறது.இதற்கான,27 மணிநேரம் 30 நிமிடங்களுக்கான, 'கவுன்ட்டவுன்' இன்று மதியம் 2:25 மணிக்கு துவங்குகிறது.
உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் நிறுவனம், ஜூலை15ஆம் தேதி529 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்டெல் நிறுவனம் செலவை குறைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ள நிலையில், முதல் கட்டமாக 529 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் சிக்கல்களை அகற்றுவது, செயல்திறனை வலுப்படுத்துவது, லாபத்தை நோக்கி நிறுவனத்தை கொண்டு செல்வது ஆகியவற்றிற்காக செலவுகளைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக இன்டெல் நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இந்தவேலைநீக்கநடவடிக்கையால்சிப்தயாரிப்புவல்லுநர்கள், கிளவுட்மென்பொருள்வல்லுநர்கள், பொறியாளர்கள்உட்படசில முக்கியபதவிகள்காலியாகும்என்றும்கூறப்பட்டுவருகிறது. வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு60 நாள் நோட்டீஸ் அல்லது குறைந்த நான்கு வார நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், ஒன்பது வார ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்றும் இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எந்த சேவைக்குச் சென்றாலும், அது ரயில் டிக்கெட் முன்பதிவாக இருக்கட்டும், அல்லது வங்கி கணக்குதொடங்குவதாக இருக்கட்டும், முதன்முதலில் கேட்கப்படுவது ஆதார் அட்டை. எப்போதும் நம் ஆதார் அட்டையை கையில் எடுத்து செல்வது சில சமயங்களில் சாத்தியப்படாமல் போகலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) ஒரு தீர்வை கொண்டு வந்துள்ளது.வரும் காலங்களில்UIDAI ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலி உங்கள் போனில் இருந்தால், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உங்கள் ஆதாரை மிக எளிதாக மின்னணு முறையில் சமர்ப்பிக்க முடியும். இனி ஆதார் ஜெராக்ஸ் எடுக்க கடைகளை தேடி அலைந்து நேரம் விரயமாக்க தேவையில்லை. இந்த செயலியில், உங்கள் ஆதார் தகவல்கள் கியூ.ஆர். கோடு வடிவில் இருக்கும். இதை ஸ்கேன் செய்தால் போதும், உங்கள் ஆதார் சமர்ப்பிக்கப்பட்டுவிடும். மேலும், தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நீங்கள் ஆதாரை சமர்ப்பிக்கும்போது, முழுமையான விவரங்கள் தெரியும்படி வேண்டுமா, அல்லது சில தகவல்கள் மறைக்கப்பட்ட வடிவில் வேண்டுமா என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இது உங்கள் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்புக்கு உதவும்.இந்த புதிய வசதி மூலம், ஆதார் தொடர்பான சேவைகளுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதும், வீணாக அலைந்து திரிவதும் முற்றிலும் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உட்படப் பல சாட்டிங் மற்றும் சமூக வலைதளங்கள் இருந்தாலும், அவை செயல்படுவதற்கு இன்டர்நெட் கட்டாயம் தேவைப்படுகிறது. இந்த நிலையில், இன்டர்நெட் இல்லாமல் தகவல்களை பகிர முடியும் என்ற வகையில் ஒரு செயலியை, ட்விட்டர் வலைதளத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி அறிமுகம் செய்துள்ளார். இதனால், இனிமேல் இன்டர்நெட் இல்லாமலேயே சாட் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.இன்டர்நெட் சேவை இல்லாமல் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில்'பைட்சாட்'(BITCHAT) என்ற புதிய செயலியை ஜாக் டோர்சி அறிமுகம் செய்துள்ளார். ப்ளூடூத் தொழில்நுட்பத்தை சங்கிலி தொடர் போல பயன்படுத்தி மெசேஜ் அனுப்பும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது இயங்குவதற்கு இன்டர்நெட் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது இன்டர்நெட் கிடைக்காத நேரங்களில் அல்லது இன்டர்நெட் செயல்படாத நேரங்களில் பயன்படுத்த ஏற்ற வகையில் இருப்பதால், இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 'பைட்சாட்' என்ற புதிய செயலி தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்துமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் தற்போது இணைய தேடுபொறி நிறுவனங்களிடையே AIதொழில்நுட்ப யுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராகியுள்ளது ஓபன் AI நிறுவனம்.சாட் ஜிபிடி (Chat GPT) மூலம் உலகில்AI தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதுOpenAI. சாட் ஜிபிடி வருகையை தொடர்ந்து கூகிளும்GEMINI,AI உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்திய நிலையில் சீனாவின்DeepSeek,GWEN,AI என பல AI கள் அறிமுகமாகியுள்ளன. இதனால் ஆட்டோமேஷன் நடவடிக்கைகளும் பல துறைகளில் வேகமாக அதிகரித்து வருகிறது.சாட்ஜிபிடியால் ஏற்கனவே கூகிள் ப்ரவுசர் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கூகிள் தேடுபொறியை விட பலரும் சாட் ஜிபிடியில் வெறும் வாய்ஸ் கமெண்டில் கேட்டாலே அது தகவல்களை அள்ளி வழங்குவதால் அதற்கு மவுசு கூடியுள்ளது. மேலும் AI திரட்டி தரும் தகவல்களில் ஏற்படும் தகவல் பிழையை ப்ரவுசர்கள் சுட்டிக்காட்டும் நிலையில் Deep Search மூலமாக தளங்களின் தரவுகளையும் AI க்கள் வழங்கத் தொடங்கிவிட்டன.இந்நிலையில்தான் அடுத்த கட்டமாகAI தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வெப் ப்ரவுசரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது ஓபன் AI நிறுவனம். அதற்கான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த புதிய AI ப்ரவுசர் பயன்பாட்டிற்கு வரும் என பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கூகிள் ப்ரவுசர் பெரும் பின்னடைவை சந்திக்கக் கூடும் என கூறப்படுகிறது.இதனால் கூகிள் சூதானமாக செயல்பட்டு தனது ப்ரவுசருடனே ஜெமினியை Integrate செய்துள்ளது. ப்ரவுசரிலேயே DiveDeeperinAI,Mode மூலமாக ஜெமினிக்கு மாறி ப்ரவுசர் போல அல்லாமல் AI எக்ஸ்பீரியன்ஸில் தகவல்களை பெற முடியும். ஆனால் அதையும் ஓபன் AI சிந்தித்தே பல புதிய அம்சங்களை தனது ப்ரவுசரில் அமைத்திருக்கும் என்கிறார்கள் AI தொழில்நுட்ப ஆர்வலர்கள்.
மதுரையைச் சேர்ந்த விஜய் குமார், நியூயார்க்கில் "ஜேம்ஸ் பியர்ட் விருதை - உணவு உலகின் ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்திய உணவக சமையல்காரர் ஆவார். அவர் நியூயார்க்கின் செம்மாலில் தலைமை சமையல்காரர்.