25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Mar 05, 2025

உலகிலேயே அதிக பொருட்செலவில் 3000 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம்.

உலகிலேயே அதிக பொருட்செலவில்3000 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம்,8762 கோடி ரூபாய் வசூலித்தது, ஆரம்பத்தில், படத்தின் பட்ஜெட் ரூ.2167 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் தயாரிப்பு செலவுகள் அதிகரித்ததால், ரூ.3000 கோடியை தாண்டியது.பாலிவுட் மற்றும் பிராந்திய சினிமா உட்பட, ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களில் இருந்து வெளியேறும் ஒரு துடிப்பான திரைப்படத் துறையை இந்தியா பெருமையாகக் கொண்டுள்ளது. பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடித்த கல்கி2898AD இதுவரை தயாரிக்கப்பட்ட இந்திய திரைப்படங்களில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம்,RRR மற்றும் ஆதிபுருஷ் போன்ற அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தியப் படங்களைத் தாண்டி, தலைப்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், மிகவும் விலையுயர்ந்த ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடுகையில் அதன் அளவு சிறியது, அதன் பட்ஜெட் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக உள்ளது.உலகின் மிக விலையுயர்ந்த திரைப்படம்: செலவு மற்றும் அதை உருவாக்க எடுத்ததுபைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: ஆன் ஸ்ட்ரேஞ்சர் டைட்ஸ் மிகவும் விலையுயர்ந்த திரைப்படத்தின் தலைப்பு. ஆரம்பத்தில், பட்ஜெட்$250 மில்லியனாக(ரூ.2167 கோடி) நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததால், அது$379 மில்லியன்(ரூ.3,321 கோடி) ஆக உயர்ந்தது. ஸ்ட்ரேஞ்சர் ரைட்ஸிற்காக, ஜானி தனது முன்னணி கதாபாத்திரத்தை கேப்டன் ஜாக் ஸ்பாரோவாக மீண்டும் நடித்தார். குழும நடிகர்களில் ஜெஃப்ரி ரஷ், கெவின் ஆர் மெக்னலி, பெனெலோப் குரூஸ், இயன் மெக்ஷேன், சாம் கிளாஃப்லின் மற்றும் ஆஸ்ட்ரிட் பெர்கெஸ்ஃபிரிஸ்பே ஆகியோர் அடங்குவர். இந்த கற்பனை சாகசத் திரைப்படம்,PiratesOfTheCaribbean உரிமையின் நான்காவது பாகமாகும்.2011 இல் வெளியான இப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. படத்தின் தயாரிப்பில் ரூ.379 மில்லியன்(ரூ.3,321 கோடி) செலவிடப்பட்டு, ரூ.1 பில்லியனுக்கும் மேல்(ரூ.8,672 கோடி) சம்பாதித்தது. உலக பாக்ஸ் ஆபிஸில்2000 கோடி ரூபாய் வசூலித்த டங்கல், அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம். 2 பாகுபலி படங்களின் (ரூ. 2400 கோடி) மொத்த வசூல் கூட ரூ.3000 கோடியை எட்டவில்லை..

Mar 05, 2025

தெருநாய் வாழ்க்கையே போராட்டம் தான்.

தெருநாய்களை  பார்த்தாலே பிடிக்கவில்லையா??இன்னும் சிலருக்கு பார்த்தாலே பயமாகவும், அருவருப்பாகவும் இருக்கிறதா??அழித்துவிட நினைக்கிறீர்களாஒரு நிமிடம் அவர்கள் வாழ்க்கையை தெரிந்துக் கொள்ளுங்கள் நாம் எல்லாம் ஒருவேளை சாப்பிடவில்லை என்றால்கூட உயிரே போய்ட்ற மாதிரி ஆர்பாட்டம் செய்வோம் ஒருவேளை அம்மாவோ அல்லது நம் வீட்டில் இருக்கும் யாராவது சமையல் செய்யவில்லை என்றால் மிகக் கடுமையான கோபம் வரும்.உணவில் கொஞ்சம் சுவை குறைந்தால் தட்டைக் கூட தூக்கி வீசுவீர்கள். ஆனால் அவர்களோ பல நாள் பசியோடு தெருவில் சாப்பாடு இல்லாமல் ரோட்டில் போகின்ற வருபவர்களின் கையையும், முகத்தையும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு யாராவது ஏதாவது கொடுத்து விடமாட்டார்களா நம் பசி போய்விடாதா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன் .அவர்கள் மேல் குறை சொல்லாமல் கொஞ்சம் உணவையும், அன்பையும் கொடுங்கள் அவர்களை பிடிக்காதவர்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லாமல் தள்ளிச்சென்று விடுங்கள். அவர்களும் நம்மை துன்பப்படுத்த மாட்டார்கள் அவர்களை நாமும் துன்பப்படுத்த மாட்டோம். பல நாள் பசியோடு இருக்கும் ஜீவனை.“வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல” நம் கல்லை எடுத்து அடிப்பதால் தான் அவர்கள் நம்மை கடிக்க வருகிறார்கள். பேசமுடியாத அந்த ஜீவன்களின் மனவேதனையை புரிந்து கொள்ளுங்கள்.

Mar 04, 2025

 நின்று கொண்டு அவசரமாக தண்ணீர் குடிப்பது  தவறு.

நின்று கொண்டு அவசரமாக தண்ணீர் குடிப்பது  தவறு . இதனால், செரிமானம் தடை படுவதுடன், கழிவுப் பொருட்கள் உடலில் சேரும்.சாதாரண வெப்பநிலை நீரை குடிக்கும் போது ,சுமார் 20 நிமிடங்களில் சிறுகுடலுக்குள் செல்லும். வெந்நீர் அருந்தும்போது 7 முதல் 10 நிமிடங்கள் ஆகும்.குளிர்ந்த நீரை குடித்தால் அது நீண்ட நேரம் வயிற்றில் இருக்கும். குளிர்ந்த நீர் உடலின் வெப்பநிலையுடன் ஒத்துப்போவதில்லை. அதனால் அதை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பதும் நீர் நச்சுத் தன்மையை ஏற்படுத்தக்கூடும்.

Mar 04, 2025

ஆவின் “கிரீன் மேஜிக் ப்ளஸ்”

புதிய பால் பாக்கெட்டை ஆவின் அறிமுகம் செய்யவுள்ளது. இப்போது ஆவினில் ப்ளூ, கிரீன், ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில், வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட பாக்கெட்டை ஆவின் அறிமுகம் செய்யதுள்ளது. கிரீன் கலர் பாக்கெட்டில்'கிரீன் மேஜிக் ப்ளஸ்', என்ற பெயரில் அறிமுகமாகும், இந்த பாக்கெட் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலத்தில் விற்பனை ஆகிறது.

Mar 04, 2025

இந்தியாவின்   பணக்காரர்களின் வரிசையில் முதல் 5 பெண்கள் 

இந்தியாவில் பெண்கள் பில்லியனர் உலகில் உயர்ந்து 105 பில்லியனர்கள் உள்ளனர்.ஃபோர்ப்ஸின் ரியல்டைம் பில்லியனர்கள் தரவரிசையின்படி ,இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் ஒரே பெண்மணி சாவித்ரி ஜிண்டால் மட்டுமே.3.65 லட்சம் கோடியுடன், ஜிண்டால் குழுமத்தில் முன்னணியில் இருக்கும் ,சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் முதலாவது பணக்கார பெண்மணி ஆவார்.ரேகா ஜுன்ஜுன்வாலா, 76,840 கோடியுடன், இந்தியாவின் இரண்டாவது பணக்கார பெண்மணி.வினோத் ராய் குப்தா 55,123 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.ரேணுகா ஜக்தியானி 40,089 கோடி சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார்.அனு ஆகா 40,089 கோடி சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Mar 04, 2025

 வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வீட்டிற்கு முன் தண்ணீர் வைக்க மறக்காதீர்கள். தவிச்ச வாய்க்கு தண்ணீர் வழங்குங்கள்.

 வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வீட்டிற்கு முன் தண்ணீர் வைக்க மறக்காதீர்கள்.பிளாஸ்டிக்ல வைத்தால் தூக்கிட்டுபோய்டுவாங்க. பூச்செடி வைக்கிற தொட்டில கூட அந்த ஒட்டய சிறு சிமென்ட் வச்சு அடச்சுட்டு அதில் ஊற்றி வைக்கலாம் ஒரு ஓரமா வைத்து விடுங்கள் தயவு செய்து.யாரும் எடுக்க மாட்டார்கள் என்றால் காளான் டப்பா பிரியாணி டப்பா,ஸ்வீட் டப்பா எதுவாக இருந்தாலும் அதில் தண்ணீர் ஊற்றி வையுங்கள்.நகரங்களில் இவர்களுக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இல்லை. தயவு செய்து இதுபோல் இனி வரும் காலங்களில் செய்யுங்கள் வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது பல வீட்டு வாசல் முன்பும்,கடைகள் முன்பும் பைபாஸ் ரோட்டிலும், சாலைகளிலும் நாய்கள் தண்ணீர் தாகத்தால் நாக்கை தொங்கப் போட்டு கொண்டு திரிந்துக் கொண்டிருக்கின்றன. எப்போது வீட்டை விட்டு வெளியில் சென்றாலும்2,3 பாட்டிலில் தண்ணீர் கொண்டு செல்லுங்கள்.கீழே கிடக்ககூடிய பிளாஸ்டிக் டப்பா, கொட்டாங்குச்சி, சிமெண்ட் தொட்டி இருந்தால் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டுவாருங்கள், முடிந்தவர்கள் டப்பா கொண்டு செல்லுங்கள் .எந்த உயிராக இருந்தால் என்ன?

Mar 04, 2025

குவார்ட்ஸ் அறிக்கையின்படி உலகின்  அதிக ஊதியம் பெறும் பாட்காஸ்டர்கள்

குவார்ட்ஸ் அறிக்கையின்படி உலகின் அதிக ஊதியம் பெறும் பாட்காஸ்டர்கள், இந்த லாபகரமான தொழிலில் பெரும் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர்.எடிசன் ஆராய்ச்சியின் படி,12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில், பாதி பேர் ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு போட்காஸ்டையாவது கேட்கிறார்கள்.ஜேசன் பேட்மேன், சீன் ஹேய்ஸ் மற்றும் வில் ஆர்னெட்$33 மில்லியன் (மூன்று ஆண்டுகளில் $100 மில்லியன்) சம்பாதித்து, மூவரும் 2020 இல் தொற்றுநோய்களின் போது SmartLess ஐ அறிமுகப்படுத்தினர்.பில் சிம்மன்ஸ்பில் சிம்மன்ஸ் தனது போட்காஸ்ட் நெட்வொர்க்கிலிருந்து $50 மில்லியன் (ஐந்து ஆண்டுகளில் $250 மில்லியன்) சம்பாதித்தார், இது ஒரு முன்னணி விளையாட்டு போட்காஸ்ட் ஆகும்.டாக்ஸ் ஷெப்பர்ட்DaxShepard2024 இல் தனது போட்காஸ்டுக்காக Amazon'sWondery பிரிவுடன்$80 மில்லியன் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.கரேன் கல்கரிஃப் மற்றும் ஜார்ஜியா ஹார்ட்ஸ்டார்க்மை ஃபேவரிட் மர்டர், பிரபலமான உண்மை-குற்றம் போட்காஸ்ட்,2016 இல் தொடங்கப்பட்டதிலிருந்து$100 மில்லியன் சம்பாதித்தது.அலெக்ஸ் கூப்பர்அலெக்ஸ் கூப்பர் தனது போட்காஸ்ட் கால் ஹெர் டாடி மூலம் $41 மில்லியன் (மூன்று ஆண்டுகளில் $125 மில்லியன்) சம்பாதித்தார், இது VP ஹாரிஸை தொகுத்து வழங்கியது.ஜோ ரோகன்ஜோ ரோகனின் போட்காஸ்ட், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ், அவருக்கு $83 மில்லியன் (மூன்று ஆண்டுகளில் $25 மில்லியன்) சம்பாதித்தது மற்றும் Spotify இல் மிகவும் பிரபலமானது.

Mar 04, 2025

அமெரிக்கரான Ida Sophia Scudder.1900 வேலூரில்  உருவாக்கிய CMC மருத்துவமனை.

1890களில் தமிழ்நாட்டில் பெண்களின் பிரசவ காலங்களில் சிகிச்சை அளிக்க பெண் மருத்துவர்கள் இல்லாததால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிக அதிகம்.தமிழ் பெண்களின் இந்த நிலையே மாற்றுவதற்காகவே மருத்துவம் படிக்கச் சென்றார் அமெரிக்கரான Ida Sophia Scudder.1900 வேலூரில் அவர் உருவாக்கிய ஒரு படுக்கை அறை கொண்ட சிறிய கிளினிக் தான், இன்று பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் /ஆண்டுதோறும் மருத்துவ துறை சார்ந்த நிபுணர்களை உருவாக்கி வரும் இந்தியாவிலே மதிப்புமிக்க CMC மருத்துவமனை.

Mar 03, 2025

 சாகும் வரை மனித உடலில் வளரும் உறுப்பு எது தெரியுமா..?

காது மற்றும் மூக்கு,முடி மற்றும் நகங்கள் போன்றவற்றைத் தவிர ,நம் மரணத்திற்குப் பிறகு சிறிது காலத்திற்கு வளரக்கூடிய இரண்டு வெளிப்புற உடல் பாகங்கள்.காரணம்:நமக்கு வயதாகும் போது நம் உடலின் மற்ற பகுதிகள் சுருங்கும். ஆனால் நமது மூக்கு, காது மடல்கள் மற்றும் காது தசைகள் பெரிதாகிக்கொண்டே இருக்கும். ஏனென்றால், அவை பெரும்பாலும் குருத்தெலும்பு செல்களால் ஆனவை.நமது காதுகள் மற்றும் மூக்கில் எலும்புகள் இல்லை. இது குருத்தெலும்பு இது எலும்பை விடஇலகுவானது மற்றும் நெகிழ்வானது. இதனால் தான் மூக்கு மற்றும் காதுகளை நம்மால் வளைக்க முடிகிறது.

Mar 03, 2025

போனில் அதிக ரீல்ஸ் தொடர்ந்து பார்ப்பதால் Brain rot என்ற பாதிப்பு.

அதிக ரீல்ஸ் தொடர்ந்து பார்ப்பதால்Brainrot என்ற பாதிப்பு ஏற்படலாம். போன் திரையில் விரலால் தள்ளி தள்ளி ரீல் பார்க்கின்றனர். மூளைக்கு வேலை இல்லாமல், ஏதோ ஒன்றை பார்த்து மகிழ்வதால், மூளைக்கு உடனடி நிறைவு கொடுத்து, அதன் செயல்பாடுகளை மாற்றி அமைக்கிறது. இது அறிவாற்றலை குறைத்து, வேலையில் கவனச் சிதறலை ஏற்படுத்துவதுடன், மனித உணர்ச்சிகளையும் குறைக்கும் என்கின்றனர் நிபுணர்கள், ரீல்ஸ் பாக்குறத குறைங்க .....

1 2 ... 92 93 94 95 96 97 98 ... 103 104

AD's



More News