வணக்கம் நண்பர்களே & சமூக ஆர்வலர்களே!! இராஜபாளையத்தின் அடையாளம் நமது முன்னாள் முதல்வர் திரு பி.எஸ்.கே.ராஜா அவர்கள். அவரின் ஆட்சியில் தான் இராஜை தொழில் நகரமாக மாறத் தொடங்கியது பல சாதனைகள் தமிழகத்திற்க்கும், இராஜபாளையம் ஊருக்கும் செய்த உன்னதத்தலைவர் அவர்களை நாம் கௌரவிக்க தவறிவிட்டோம்மத்திய அரசு பாரத ரத்னா, பத்ம விபூசண் போன்ற விருதுகள் வழங்கவில்லை.மாநில அரசு சட்ட சபையில் PSK படத்தினை திறந்து வைக்கவில்லை. மற்ற எல்லா தமிழக முன்னாள் முதலமைச்சர் படங்கள் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.அனைத்து சமுதாயமும் கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை.புதிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்/கலெக்டர் அலுவலகத்தில் PSK படம்/மார்பளவு சிலை வைக்க படவில்லை. மற்ற தலைவர்கள் சிலைகள் வைத்துள்ளனர்.கோரிக்கைகள்/விண்ணப்பம் கொடுத்தும் PSK சிலை வைக்கப்படவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்.கலைஞர் ஆட்சியில் சென்னையில் உள்ள சாலைக்கு PSK பெயர் சூட்டப்பட்டது, விருதுநகர் கலெக்டர் அலுவலகம் PSK வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டது.இராஜபாளையம் PSK நூற்றாண்டு நினைவு திருமண மண்டபம் கலைஞர் திறந்து வைத்தார். இராஜபாளையம் பேரூந்து நிலையத்திற்கு PSK பெயர் வைத்தனர்.தமிழக அரசு சின்னம் உருவாக்கியவர், கதர் இயக்கம் முன்னெடுத்தவர், முதல் காதி வஸ்திராலயம் இராஜபாளையத்தின் தியாகி PSK, தன் முழு சொத்துக்களை பொது காரியங்களுக்காக கொடுத்த வளாளல்பெருமான். அவர்கள் திருவுருவப்படத்தை சட்டசபையில் திறக்க யாருக்கும் மனம் வராதது வேதனையான விஷயம். மற்ற முன்னாள் தலைவர்களுக்கு அரசு விழா எடுத்து கொண்டாடுகின்றனர், ஆனால் திரு PSK அவர்களுக்கு அரசு விழா நடத்துவதாக தெரியவில்லை.ஒவ்வொரு தமிழக குடிமகனும், முதன்முதலில் தமிழக முதல மைச்சராக விளங்கிய PSK அவர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை தராதது நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய சமாச்சாரம்.நாம் அனைவரும் ஒன்று கூடி போராடினால் தான் இவ்விசயம் நடைபெறும்.முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.அதற்கான அவசர நடவடிக்கைகள் எடுத்தே ஆக வேண்டும். போராடுவோம் !!.உறுதியாக வெற்றி பெறுவோம் !!விரைவில் களத்தில் இறங்கி போராட ஆரம்பிப்போம் உங்கள் மேலான ஒத்துழைப்பு அவசியம் நல்கிட வேண்டும்.இந்த முக்கிய செய்தியினை அனைவருக்கும் பகிறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி, வாழ்த்துக்கள்.. இப்படிக்கு, முன்னாள் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர், சர்வ சமுதாய கூட்டமைப்பு இராஜபாளையம்.
தாயின் வயிற்றில் பனிக்குட நீரில் நீந்தி பழகிய குழந்தை, தாய் நடக்கும் போதும் உடல் அசைவின் போதும் ஊஞ்சலாட்டத்தை கருவறையில் உணரும். அந்த இருட்டும், கதகதப்பும், குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும்.புடவைத்தொட்டில் அசையும்போது, குழந்தை தன் தாயின் கரு அசைவுகளை அதில் உணர்ந்து ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் இடையில் தூக்கம் இடறினாலும், குழந்தை தொல்லையின்றி தூக்கத்தை தொடர, பாரம்பரிய புடவைத் தொட்டிலே சிறந்தது என பிசியோ தெரபி மருத்துவர்கள் கூறுகின்றார். இதை நம் முன்னோர்கள் அறிந்து பயன் இத்தியுள்ளார்.தொட்டிலில் குழந்தையிட்டு ஆட்டும் பொழுது, குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் ஜீரணக் கோளாறுகள் சரியாகிவிடும் எனவும், குழந்தைக்கு கழுத்து வலி வராமலும் இருக்கும். புடவை தொட்டிலில் படுக்க வைக்கும்போது, குழந்தையின் தலைப்பகுதி ஒரு மென்மையான அழுத்தம் பெறுகிறது. இது ஆரோக்கியமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.
ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு நிலையை பயணிகள் அறிந்து கொள்ளலாம்ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு நிலை வெளியிடப்பட்டு வந்த நிலையில் 10 மணி நேரமாக நீட்டிப்புகாலை 5.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு முந்தைய நாள் இரவு 8.00 மணிக்கு அட்டவணை தயாரிப்புஇதர ரயில்களுக்கு, அவை புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரம் முன் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்கடைசி நேரத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் ரத்தாவதால் பயணத்தை மாற்றி அமைக்க வசதியாக ஏற்பாடு.
பெரும்பாலான விமானத்தின் வெளிப்புற நிறம் வெள்ளைதான். இது நிதி, பாதுகாப்பு, வெப்பநிலை கட்டுப்பாடு உள்ளிட்டவை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஏனெனில் விமானம் பறக்கும் போது சூரிய ஒளியை அதிகம் எதிர்கொள்கிறது. எனவே சூரியனின் புற ஊதாக்கதிர்களால், மற்ற நிறங்கள் விரைவில் மங்கி விடும். மேலும் வெப்பத்தை உன்வாங்குவதால் விமானம் சூடாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வெள்ளை நிறம், ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து வெப்பம் உள்வாங்காமல் தடுக்கிறது. அதிவேக போக்குவரத்துக்கு விமானத்திற்கு வெள்ளை நிறம் பயன்படுத்தப் படுகிறது.
ஜிலுவோடு அணை(சீனா)-13,860 மெகாவாட்.ஜின்ஷா நதியில் அமைந்துள்ள ஜிலுவோடு அணை, இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய மற்றும் உயரமான வளைவு அணைகளில் ஒன்றாகும்.2005 இல் தொடங்கி2013 இல் நிறைவடைந்த இது,285.5 மீட்டரை எட்டுகிறது மற்றும் சீனாவின் முக்கிய மின் நிலையங்களில் ஒன்றாகும்.இந்த நீர்த்தேக்கம்12.67 பில்லியன் கன மீட்டர் தண்ணீரை சேமித்து, வலுவான வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் ஆதரவை வழங்குகிறது, இது பெரிய மூன்று கோர்ஜஸ் அணையின் கீழ்நோக்கி பாதிக்கும் வண்டல் படிவுகளைக் குறைக்க உதவுகிறது.ஜிலுவோடுவின் கட்டுமானம் யாங்சே அமைப்பு முழுவதும் மேம்பட்ட நதி மேலாண்மையைக் கொண்டு வந்தது, நிலையான மின் உற்பத்தியை அதிகரித்தது. இந்த திட்டத்திற்குCNY50.34 பில்லியன்($6.2 பில்லியன்) செலவாகும்.
(பிரேசில்பராகுவே)14,000MWஇடாய்பு அணை, பிரேசில் மற்றும் பராகுவே இடையேயான சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு அடையாளமாகும்.1984 ஆம் ஆண்டு பரானா நதியில் கட்டி முடிக்கப்பட்ட இது,20 உயர் திறன் கொண்ட விசையாழிகளைப் பயன்படுத்துகிறது மற்றும் பல ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையத்தின் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.1,350 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இடாய்பு நீர்த்தேக்கம், இரு நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளுக்கும் இன்றியமையாததாக உள்ளது. பராகுவே அதன் மின்சாரத்தில்87% வரை இடாய்புவிலிருந்து பெறுகிறது, இதனால் அணை அதன் தேசிய உள்கட்டமைப்பிற்கு அவசியமாகிறது.2016 ஆம் ஆண்டில், ஒரே ஆண்டில்103 மில்லியன் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து இடாய்பு உலகளாவிய சாதனை படைத்தது. அணையைச் சுற்றியுள்ள பகுதியில் புதிய சாலைகள், தொழில்கள் மற்றும் சுற்றுலா வளர்ச்சியும் காணப்பட்டது, இதனால் இப்பகுதி ஒரு சக்திவாய்ந்த பொருளாதார மையமாக மாறியது.
உளவியலாளர் ஹிடேகி வாடா "80 வயதுச் சுவர்" என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். புத்தகம் வெளியான உடனேயே, அதன் விற்பனை 500,000 பிரதிகளுக்கு மேல் சென்றது, இது அந்த நேரத்தில் அதிகம் விற்பனையான புத்தகமாக மாறியது. இந்த விற்பனைப் போக்கு தொடர்ந்தால், இந்தப் புத்தகம் 1 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி, அந்த ஆண்டின் ஜப்பானின் அதிகம் விற்பனையாகும் புத்தகமாக மாறும்.61 வயதான டாக்டர் வாடா, முதியோரின் மன நோய்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவர். 80 வயதுடையவர்களுக்கான ஒரு "அதிர்ஷ்டமான" வாழ்க்கையின் ரகசியங்களை அவர் 44 வாக்கியங்களில் சுருக்கமாகக் கூறியுள்ளார், அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:1. தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருங்கள்.2. கோபம் வரும்போது ஆழமாக மூச்சு விடுங்கள்.3. உங்கள் உடல் இறுகிப் போகாதபடி போதுமான உடற்பயிற்சி செய்யுங்கள்.4. கோடை காலத்தில் ஏர் கண்டிஷனர் பயன்படுத்தும்போது அதிக தண்ணீர் குடியுங்கள்.5. டயப்பர்கள் நடமாட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.6. நீங்கள் எவ்வளவு அதிகமாக மென்று சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் மூளையும் உடலும் சுறுசுறுப்பாக இருக்கும்.7. ஞாபக மறதிக்குக் காரணம் வயதல்ல, மூளையைப் பயன்படுத்தாததே ஆகும்.8. அதிகப்படியான மருந்துகளை உட்கொள்ளத் தேவையில்லை.9. இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை தேவையில்லாமல் குறைக்கத் தேவையில்லை.10. தனியாக இருப்பது தனிமையல்ல; அது அமைதியாக நேரத்தைச் செலவிடுவது.11. சோம்பல் ஒரு அவமானமல்ல.12. ஓட்டுநர் உரிமத்திற்காக பணம் செலவழிக்கத் தேவையில்லை (முதியோர்கள் தங்கள் உரிமங்களைத் திரும்ப ஒப்படைக்க ஜப்பானில் ஒரு பிரச்சாரம் நடந்து வருகிறது).13. உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்; பிடிக்காததைச் செய்யாதீர்கள்.14. இயற்கையான ஆசைகள் முதுமையிலும் நீடிக்கின்றன.15. எந்தச் சூழ்நிலையிலும், எல்லா நேரமும் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டாம்.16. உங்களுக்குப் பிடித்ததைச் சாப்பிடுங்கள்; லேசான உடல் பருமன் நல்லது.17. எல்லாவற்றையும் கவனமாகச் செய்யுங்கள்.18. உங்களுக்குப் பிடிக்காதவர்களுடன் பழக வேண்டாம்.19. எல்லா நேரமும் தொலைக்காட்சி பார்க்க வேண்டாம்.20. நோயுடன் போராடுவதற்குப் பதிலாக, அதனுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.21. "வண்டி மலைக்குச் சென்றதும், பாதை தெரியும்" - இது முதியோருக்கான மகிழ்ச்சியின் மந்திரச் சொல்.22. புதிய பழங்கள் மற்றும் சாலட்களைச் சாப்பிடுங்கள்.23. குளியல் நேரம் 10 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 24. உங்களுக்குத் தூக்கம் வரவில்லை என்றால், உங்களை நீங்களே கட்டாயப்படுத்திக் கொள்ளாதீர்கள்.25. மகிழ்ச்சியைத் தரும் செயல்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன.26. நீங்கள் உணர்ந்ததைச் சொல்லுங்கள்; அதிகமாக யோசிக்காதீர்கள்.27. கூடிய விரைவில் ஒரு "குடும்ப மருத்துவரைக்" கண்டறியுங்கள்.28. அதிக பொறுமையுடனும் இருக்க வேண்டாம், அதிக பிடிவாதமாகவும் இருக்க வேண்டாம்; ஒரு "துணிச்சலான மூத்தவராக" இருப்பதும் தவறில்லை.29. சில சமயங்களில் உங்கள் மனதை மாற்றிக்கொள்வது பரவாயில்லை.30. வாழ்க்கையின் இறுதி கட்டங்களில், மறதி நோய் என்பது கடவுளின் ஒரு வரம்.31. நீங்கள் கற்றுக்கொள்வதை நிறுத்தினால், நீங்கள் வயதாகிவிடுவீர்கள்.32. புகழுக்காக ஏங்காதீர்கள்; உங்களிடம் இருப்பது போதுமானது.33. அப்பாவித்தனம் முதியோருக்கானது.34. ஒரு விஷயம் எவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அது அவ்வளவு சுவாரஸ்யமாக மாறும்.35. சூரியக் குளியல் மகிழ்ச்சியைத் தருகிறது.36. மற்றவர்களுக்குப் பயனளிக்கும் காரியங்களைச் செய்யுங்கள்.37. இன்றைய நாளை வசதியாகச் செலவிடுங்கள்.38. ஆசைதான் நீண்ட ஆயுளுக்கான திறவுகோல்.39. மகிழ்ச்சியாக வாழுங்கள்.40. எளிதாக சுவாசியுங்கள்.41. வாழ்க்கையின் கோட்பாடுகள் உங்கள் கைகளிலேயே உள்ளன.42. எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.43. மகிழ்ச்சியானவர்களை அனைவரும் நேசிக்கிறார்கள்.44. ஒரு புன்னகை நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது.வயதாவதென்பது ஒரு வரம்பு அல்ல - அது ஒரு வரம். சரியான கண்ணோட்டத்துடனும் தினசரி பழக்கவழக்கங்களுடனும், 60 வயதுக்கு பிந்தைய ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையின் மிகவும் பயனுள்ள ஆண்டுகளில் சிலவாக இருக்கலாம். வயதாவதை பயத்துடன் அல்லாமல், கருணையுடனும், நன்றியுடனும், டாக்டர் வாடா தாராளமாகப் பகிர்ந்துகொண்ட ஞானத்துடனும் ஏற்றுக்கொள்வோம்.
அமெரிக்காவில் இருக்கும் என் நண்பரின் தாயார் மரணமடைந்துவிட, துக்கம் விசாரிப்பதற்காக போன் செய்தேன். தாயாரின் மறைவுக்கான காரணமாக அவர் சொன்ன தகவல் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அவரது வயதான பெற்றோர் மும்பையில் வசித்து வந்தார்கள். அவரது தந்தை கடும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரை உடனிருந்து கவனித்துக்கொள்ள அவரது தாயார் மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் மருத்துவமனைகளில் மட்டுமே பரவும் சூடோமோனாஸ் ஏருகினோசா (Pseudomonas aeruginosa) என்ற பாக்டிரியா அவரைத் தாக்கிவிட்டது, அதை அவர் உணரவில்லை.கணவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்த சில நாட்களில், அந்தத் தாய் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அமெரிக்காவில் இருந்த அவரது மகன், தற்செயலாகத் தனது செல்போனில் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, தனது தாய் தரையில் அசைவற்று கிடப்பதைக் கண்டு பதறிப்போனார். உடனடியாக மும்பையில் உள்ள தனது தந்தைக்கும் மருத்துவமனைக்கும் போன் செய்து சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால், அந்தத் தாயின் உடலில் அதற்குள் சூடோமோனாஸ் ஏருகினோசா எனும் கொடிய பாக்டீரியா தனது ஆதிக்கத்தைச் செலுத்திவிட்டது.இந்த பாக்டீரியா உடலில் நுழைந்தவுடன் பெரிய அறிகுறிகளைக் காட்டாது. அந்தத் தாய்க்குச் சாதாரண உடல் சோர்வு மட்டுமே இருந்தது. வயதான காலத்தில் ஏற்படும் பலவீனம் என்று அவர் அதைத் தவறாகக் கருதிவிட்டார். பாக்டீரியா இரத்தத்தில் கலந்தவுடன், அது நரம்பு மண்டலத்தை நிலைகுலையச் செய்தது. இதனால் அவர் திடீரென மயங்கி கோமா நிலைக்குச் சென்றார். இந்த பாக்டீரியா வெளியிடும் நச்சுக்கள் ரத்த அழுத்தத்தை மிகக் கடுமையாகக் குறைத்தன. அத்துடன் ரத்த சர்க்கரை அளவும் சரிந்ததால், சிறுநீரகங்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நின்று அவை முழுமையாகச் செயலிழந்தன. உடலில் நச்சுக்கள் தேங்கி, இனி அவரைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதன் பின் அவர் சில நாட்கள் கோமா நிலையிலேயே இருந்து வீட்டிலேயே உயிர் பிரிந்தது.நன்றாக இருந்தவரின் சிறுநீரகங்கள் செயலிழந்து டயாலசிஸ் மற்றும் கோமா நிலைக்கு சென்று உயிரிழந்ததை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. "இப்படி ஒரு பாக்டிரியாவும், வியாதியும் இருப்பதே அம்மா இறந்தபின்னர் தான் தெரிகிறது" என்கிறார்இந்தத் தொற்றுக்கு பெரும்பாலும் மருந்துகள் அல்லது முறையான சிகிச்சைகள் வேலை செய்வதில்லை. இது பலவிதமான ஆன்டிபயாட்டிக் மருந்துகளையும் எதிர்க்கும் திறன் கொண்ட ஒரு சூப்பர் பக் ஆகும். ஒருமுறை இது தாக்கினால், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதனுடன் போராடி வென்றால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும், இல்லையெனில் மரணம் உறுதி. குறிப்பாக முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு (Immune compromised people) இந்தத் தொற்று ஒரு மரண தண்டனை போன்றது.மும்பை போன்ற நெரிசலான நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் இத்தகைய தொற்றுகள் பரவுவது பெரும் சவாலாக உள்ளது. இந்த பாக்டீரியா ஈரப்பதமான ஏசி குழாய்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுத்தமற்ற இடங்களில் மறைந்திருக்கும். நோயாளிகளை விட, அவர்களைப் பராமரிக்கச் செல்லும் முதியவர்களுக்கே இதன் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்தத் தொற்று ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 10% முதல் 30% வரை இத்தகைய தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். இவை ஈரப்பதம் மிகுந்த இடங்களில் எளிதில் வளரும். முறையான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கிருமி நீக்கம் இல்லாதபோது, உதவியாளர்களையும் இது எளிதில் தாக்குகிறது. இது ஒரு சாதாரண காய்ச்சல் போலவே தெரிவதால், நோயாளிகள் கோமா நிலைக்குச் செல்லும் வரை இந்தத் தொற்று இருப்பதை மருத்துவர்களோ அல்லது குடும்பத்தினரோ கண்டறிய முடிவதில்லை.தற்போது பல மருத்துவர்கள் இந்தத் தொற்று பரவுவது குறித்துக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். நீங்கள் யாரையும் மருத்துவமனைக்குச் சென்றுதான் பார்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவர்கள் தப்பாக நினைப்பார்களோ என்று எண்ணி உங்கள் உயிரைப் பணையம் வைக்காதீர்கள். உங்கள் உயிர் மிகவும் மதிப்புமிக்கது. அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்றால், அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய பிறகு நிதானமாகச் சென்று பாருங்கள்.~ நியாண்டர் செல்வன்
குழந்தை திருமணம் மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், விருதுநகர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை (Cymaa Trust) சார்பாக, திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் சுப. மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கி. திலகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்கள். அவர்கள், குழந்தை திருமணமும் பாலியல் வன்முறையும் சமூகத்திற்கு பெரும் சவாலாக இருப்பதாகவும், அவற்றைத் தடுப்பதில் இளைய தலைமுறையின் பங்கு மிக முக்கியம் என்றும் வலியுறுத்தினர்.“இன்னல்களில் இருந்து குழந்தை பாதுகாப்பு – சமூக கடமையே” என்ற தலைப்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூகப் பணியாளர் திருமதி ஜானகி உரையாற்றி, குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் பங்கை விளக்கினார்.“குழந்தைகள் நலன், பாதுகாப்பு – திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள்” என்ற தலைப்பில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் திரு. செல்வ அழகு பேசினார்.“பாலியல் வன்முறை மற்றும் குழந்தை திருமண தடுப்பு யுக்திகள்” என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளையின் இயக்குனர், வழக்கறிஞர் பா. ராஜகோபால் அவர்கள் சிறப்புரையாற்றி, சட்டங்கள், புகார் அளிக்கும் நடைமுறைகள் மற்றும் சமூக பொறுப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, “குழந்தை திருமணத்தை எதிர்த்து நிற்போம்” என்ற தலைப்பில் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரி கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் பே. இரவி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லூரியில் செயல்பட்டு வரும் **“பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழுவின் தலைவரும், தமிழ்துறைத் தலைவருமான திருமதி கணேஸ்வரி அவர்கள் சிறப்பாக மேற்கொண்டிருந்தார்.P. Raja Gopal, Secretary General,Child Alert Alliance (CAA)Tamilnadu & Puducherry
நம்பமுடியாத பொறியியல் சாதனைகளை உலகின் மிகப்பெரிய 10 அணைகள் .NO-2 பைஹெட்டன் அணை (சீனா) - 16,000 மெகாவாட்2022 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பைஹெட்டன் அணை, நீர்மின்சார கண்டுபிடிப்புகளில் சீனாவின் அடுத்த மைல்கல் ஆகும். ஜின்ஷா நதியில் அமைந்துள்ள இது289 மீட்டர் உயரம் கொண்டது மற்றும்1,000 மெகாவாட் டர்பைன்களைப் பயன்படுத்துகிறது - இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த ஒற்றை-அலகு டர்பைன்கள்.அணையின் நீர்த்தேக்கம் 20 பில்லியன் கன மீட்டருக்கும் அதிகமான தண்ணீரைக் கொண்டுள்ளது, இது ஆண்டு முழுவதும் நிலையான, அதிக அளவு உற்பத்தியை செயல்படுத்துகிறது.ஆண்டுதோறும்62 டெராவாட்மணிநேரங்களுக்கு மேல் உற்பத்தி செய்யும் பைஹெட்டன், சீனாவின் நிலக்கரியைச் சார்ந்திருப்பதைக் கணிசமாகக் குறைக்கிறது. அணை13 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது.பைஹெட்டனின் நிறைவு, அதன் குறைந்த கார்பன் மாற்றத்தின் ஒரு முக்கியமான தருணத்தில் சீனாவின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தியது. இது நாட்டின் மேற்கு மாகாணங்களுக்கு மின்சாரத்தை வழங்குகிறது, தொழில்துறை வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது மற்றும் முன்னர் குறைவாக சேவை செய்யப்பட்ட பகுதிகளில் எரிசக்தி அணுகலை மேம்படுத்துகிறது.