25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அழகுக் குறிப்பு

Mar 04, 2024

கண்களில்கருவளையம் வராமல் தடுக்க…

கண் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே .கண்களை சுற்றிகருவளையம்  இருக்காதுகருவளையம் ஆனது மனக்கவலை, தூக்கமின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இதுபோன்ற காரணங்களினால் தான் வருகிறது. இத்தகைய காரணங்கள் அனைத்தும் ஒவ்வொருவரின் உடல்நிலையினை பொறுத்ததுகண்களில் நீர்சத்து அதிகம் இல்லை என்றால் கருவளையம் வரும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு நிகழாமல் கருவளையம் வருவதை தடுக்க ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, பப்பாளி முட்டைகோஸ் மற்றும் ஆரஞ்சு இதுபோன்ற உணவுகளை சாப்பிட்டாலே போதும் கருவளையம் என்பதே எட்டி பார்க்காது.ஒருநாளைக்கு நாம் அனைவரும் தூங்க வேண்டிய சராசரியான தூக்கத்தினை தூங்கவில்லை என்றால் கண்களில் கருவளையம் வரும். ஆகையால் ஒரு நாளைக்கு கண்டிப்பாக 8 மணிநேரம் தூங்க வேண்டும்நீங்கள் கண்களுக்கு கிரீம் பயன்படுத்தும் போதும் அல்லது கண்களில் இருக்கும் கிரீமினை அகற்றும் போதும் கண்களுக்கு கீழே இருக்கும் பகுதியினை பொறுமையாக கையாள வேண்டும் கண்களுக்கும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மசாஜ் செய்வது என்பது நாம் செய்யும் வழக்கமான ஒன்று. கண்களுக்கு கீழே மசாஜ் செய்வது என்பது நம்முடைய கண்களில் கருவளையம் வருவதை தடுக்க செய்கிறது. எப்படி என்றால் கண்களில் நீர்சத்து அதிகமாக ஆகிவிட்டது என்றால் கண்களில் வீக்கம் மற்றும் கருவளையம் போன்றவை ஏற்படும். ஆனால் நாம் மசாஜ் செய்வதன் மூலம் அதிகப்படியான நீர்சத்து ஏற்படுவதை தடுக்கலாம்.முகத்தில் இருக்கும் கண்களுக்கு கீழே வறட்சி ஏற்பட்டால் அதனை சரிசெய்ய Moisturizer பயன்படுத்துவோம். ஆனால் இதற்கு பதிலாக,அவர் அவருடைய கண்களுக்கு கீழே உள்ள தோலிற்கு ஏற்றவாறு, கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் கண்களில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, கருவளையம் வருவதையும் தடுக்கிறது

Mar 03, 2024

கைகள் பளிச்சென்று இருக்க....

வெயிலில் அலைந்து வேலை பார்ப்பவர்களுக்கு முகத்தை விட கைகள் கருமையாக இருக்கும். இந்த கருமையை போக்க1 கிண்ணத்தில்2 தேக்கரண்டி காபித்தூள்,2 தேக்கரண்டி சர்க்கரை,3 தேக்கரண்டி தயிர் எடுத்து நன்றாக கலந்து, கைகளில் தடவி15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் கைகளை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வர கைகளில் உள்ள கருமை நீங்கி, கைகள் பளிச்சென்று இருக்கும்.

Feb 29, 2024

அடர்த்தியாக  தலைமுடி வளர அழுகிய தேங்காய்

அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமுடி நல்ல அடர்த்தியாகவும், மிகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்பது தான். இருந்தாலும் தலைமுடி வளர வேண்டும் என்றால், முடியை நன்றாக பராமரிக்க வேண்டும்.ஷாம்பை அதிகமாக பயன்படுத்தக்கூடாது. ஏன் என்றால் அவற்றில் இருக்கும் ரசாயனப்பொருட்கள் உங்களுக்கு இருக்கும் முடியையும் அதிகமாக உதிர வழிவகுக்கும்.இயற்கை முறையை தினமும் பயன்படுத்தினால் தலைமுடிக்கு மட்டுமின்றி உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது.இயற்கை முறையில் தலைமுடியை அடர்த்தியாகவும், மிகவும் கருமையாகவும் தலைமுடி வளர, அழுகிய தேங்காயில் கொஞ்சம் சுடு தண்ணீர் ஊற்றி அரைத்து அவற்றை தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக மசாஜ் செய்து சிறிது நேரம் வரை காத்திருந்து பின்பு தலை தேய்த்து குளிக்கவும்.இந்த முறையை வாரத்தில் இரு முறை செய்து வர தலைமுடி வேர்களுக்கு நல்ல வலிமை கிடைக்கும்.

Feb 28, 2024

முகப்பருவை தடுக்கும் பேஸ்ட்கள்

புதினா பேஸ்ட் பயன்படுத்தினால் முகப்பரு மாயமாகி விடும். பாக்டீரியாவை அழித்திடும்.வேப்பிலை மஞ்சள் பேஸ்ட் போட்டால் வீக்கம் குறைந்துவிடும்ஆரஞ்சு தோலை அரைத்து பருவில் போட்டால் பரு வேகமாக ஆறிவிடும்மஞ்சள், தேன் பேஸ்ட் விளக்கெண்ணெய் மஞ்சள் பேஸ்ட்இதை பயன்படுத்தினால் முகப்பருவை குணப்படுத்துவதுடன், தோலை பாதுகாக்கவும்' செய்யும்.

Feb 25, 2024

அடர்த்தியாக புருவம் வளர

1. விளக்கெண்ணெய், 2. தேங்காய் எண்ணெய், 3. ஆலிவ் எண்ணெய் 4. சின்ன வெங்காய சாறு 5. கற்றாழை சாறுஇந்த5 பொருட்களையும் கால் ஸ்பூன் அளவுக்கு எடுத்து ஒன்றாக கலந்து இரவில் பருவங்களில் தடவி மறுநாள் கழுவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.'

Feb 22, 2024

கோல்டன் பிளாண்ட் பொன்னாங்கண்ணி கீரை

பச்சை பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து,20 முதல்30 நிமிடங்கள் உறை வைத்து குளிக்க, கண் எரிச்சல், உடல் சூடு நீங்கும், தலைமுடியும் கொட்டுவது நின்று, கறுத்து வளரும். பொன்னாங்கண்ணி சாறு,கரிசலாங்கண்ணி கீரை சாறு, நெல்லிக்காய் சாறு, பசும்பால் எண்ணெய், அதனுடன் சிறிது அதிமதுரம் இவற்றை சமமான அளவில் எடுத்து, பால் விட்டு அரைக்கவும், இக்கலவையை கலந்து காய்ச்சி, வடிகட்டி எடுத்த எண்ணெயை வாரம் இருமுறை தலையில் தேய்த்து தலை மூழ்கி வர கண் வியாதிகளும், பித்த நோய்களம் குணமாகும் என கூறியுள்ளனர். சித்தர்கள், பொன்னாங்கண்ணி கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வர, எலும்புகள் நல்ல வலுப்பெறும், நோயால் குறைந்த உடல் எடை, மீண்டும் இயல்பு நிலைக்கும் வரும்.வாரம் இரண்டு முறையாவது இக்கீரையை சாப்பிட்டு வர மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சியும், நன்றாக செயல்படவும் உதவி செய்யும். சிறுநீர் எரிச்சல் நீங்கவும், சிறுநீரகம் நன்கு செயல்படவும் பொன்னாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். கால்சியம் இரும்பு மற்றம் தங்கச் சத்துக்கள் பொன்னாங்கண்ணியில் இருப்பதால் இது ஏழைகளின் தங்க பஸ்பம் என அழைக்கப்படுகிறது.

Feb 21, 2024

மென்மையான சருமத்திற்கு சந்தனம்மற்றும்தயிர்கலந்தஃபேஸ்பேக்

தயிரை நாம் முகத்தில் தடவுவதால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும், மிக சிறந்த பொலிவையும் தயிர் நமக்கு தருகிறது.தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்துக்கொள்கிறது.தயிர் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி என்றும் பளப்பளப்பான மற்றும் மென்மையான சருமத்தைஅளிக்கிறது.சந்தனம்(sandalwooduses) ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன், தேன் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளுக்கு அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை முகத்தில் வைத்து.பின்பு சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும. இந்த முறையை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.சந்தனப்(sandalwooduses) பொடியை மஞ்சள் தூள், ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.இதனால் முகமானது பொலிவோடு காணப்படும்.சந்தனப் பொடியை (sandalwood uses) முல்தானி மெட்டி பவுடருடனும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம்.அதற்கு 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.பொதுவாக சந்தன ஃபேஸ் பேக்கில், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.சந்தன எண்ணெயை முல்தானி மெட்டி பவுடரில் சேர்த்து கலந்து, முகத்திற்கு பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.சந்தனப் பொடியில்(sandalwooduses) தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.

Feb 18, 2024

பொடுகு தொல்லை நீங்கிதலை முடி போஷாக்குடன் இருக்க....

 பாதாம் எண்ணெய், தேங்காய்எண்ணெய் அல்லது ஆலிவ்எண்ணெயை பயன்படுத்தி, தலைச்சருமத்திற்கு மசாஜ் செய்யுங்கள்.இரவு முழுவதும் நன்குஊற விட்டு, காலையில்எழுந்ததும், தலையை ஷாம்புகொண்டு அலச வேண்டும்.குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்கற்றாழை ஜெல்லை, தலைச்சருமத்தில்தேய்த்துக்கொள்ளுங்கள்.20 நிமிடங்கள்கழித்துஒருஷாம்புவைகொண்டு தலையைஅலசிக் கொள்ளவும். இவ்வாறுசெய்வதினால் பொடுகு தொல்லைநீங்கும்.சில வேப்பஇலைகளை எடுத்து, அதைநன்கு பேஸ்ட் செய்து,அதனை அப்படியே தலையில்தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில்தலையை அலச வேண்டும்.இவ்வாறு செய்தால்பொடுகு தொல்லை நீங்கிதலை முடி போஷாக்குடன் இருக்கும்.சமமான அளவைக்கொண்ட, ஆப்பிள் மற்றும்ஆரஞ்சு பழங்களை கொண்டுஒரு பசையை தயாரித்துக் கொள்ளுங்கள். அதனை தலைமுடி ஸ்கால்ப்பில் நன்றாகதடவிக் கொள்ளுங்கள். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து ஷாம்புவால் தலையைஅலச வேண்டும். இவ்வாறுசெய்வதினால் பொடுகு பிரச்சனைமிக விரைவில் சரியாகும்.

Feb 16, 2024

1000 ஆண்டு பழமையான மாய்ஸ்ச்சரைஸர் நெய்( ஷதா தௌத க்ரிதா )

1000 ஆண்டு பழமையான மாய்ஸ்ச்சரைஸர் நெய்( ஷதா தௌத க்ரிதா )naiநெய் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, சரும ஆரோக்கியத்துக்கும் நல்லது. நாம் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் நெய்யை முகத்திற்கு மாய்ஸ்ச்சரைஸராகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக நெய்யை 100 முறை கழுவி எடுத்து, இறுதியில் கிடைக்கும் க்ரீமை முகத்தில் அப்ளை செய்திருக்கிறார்கள். இதற்கு சதா தௌத க்ரிதா என்று பெயர். இது மார்க்கெட்டுகளில் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது....விதவிதமான மாய்ஸ்ச்சரைஸர்கள். நிரந்தரமான பயன்களைத் தருவதில்லை.. அப்ளை செய்யும்போது மட்டும் சருமம் ஹைட்ரேட்டிங்காக இருக்கிறது. சிறிது நேரத்திலேயே வறட்சி அடைந்து விடுகிறது. ஆனால் நெய் அப்படியல்ல. சருமத்தை நாள் முழுமைக்கும் மாய்ஸ்ச்சராக வைத்திருக்கும்.ஷதா தௌத க்ரிதா (Shata Dhauta Ghrita) செய்வது எப்படி?தேவையான பொருள்கள்நெய் - 100 கிராம்,தண்ணீர் - 1 கப்,மஞ்சிஸ்டா பொடி - 1 ஸ்பூன்,அதிமதுரம் - 1 ஸ்பூன்,துளசி பொடி - கால் பூன்,செம்பு தாம்பலம் - 1செம்பு டம்ளர் - 1​செய்முறைசெம்பு தாம்பலத்தைக் கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சிஸ்டா பொடி, அதிமதுரப் பொடி, துளசி பொடி மூன்றையும் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.செம்பு தாம்பலத்தில் நெய்யை ஊற்றிக் கொண்டு, கலந்து வைத்திருக்கும் நீரில் இருந்து ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து நெய்யில் விட்டு, செம்பு டம்ளரைக் கொண்டு வட்ட வடிவில் நன்குதேய்க்க வேண்டும்.ஊற்றிய தண்ணீரை நெய் முழுவதும் உறிஞ்சிக் கொண்ட பிறது அடுத்த ஸ்பூன் தண்ணணீரை ஊற்றித் தேய்க்க வேண்டும்.இப்படி தொடர்ந்து 100 முறை நெய்யை அந்த தண்ணீரில் கழுவி எடுக்க வேண்டும். 100 முறை கழுவி எடுத்த பின், ஸ்மூத்தான மாயஸ்சரைஸர் க்ரீம் கிடைக்கும். நெய் முழுசாக க்ரீமாக மாறியிருக்கும்.இதுதான் நெய்யை 100 முறை கழுவினால் கிடைக்கும் Shata Dhauta Ghrita என்னும் ஆயிரங்காலத்து பழமையான மாயஸ்ச்சரைஸர்.​பயன்படுத்தும் முறைமுகத்தை சுத்தம் செய்து விட்டு, நேரடியாக மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துவது போல இந்த க்ரீமை பயன்படுத்தலாம்.நாள் முழுக்க சருமத்தை மாய்ஸ்ச்சராக வைத்திருக்கும்.குழந்தைகளுக்குக் கூட இந்த க்ரீமை பயன்படுத்தலாம்.அதிலும் இரவு நேரத்தில் இந்த க்ரீமை அப்ளை செய்து மசாஜ் செய்து வர, இந்த எல்லா சருமப் பிரச்சினைகளும் தீரும்.இந்த க்ரீமை சருமத்தில் அப்ளை செய்யும் சருமத்தில் இருக்கிற7 வகை லேயர்களுக்கு உள்ளேயும் ஊடுருவிச் செல்லும்.சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும். குறிப்பாக இதிலுள்ள ஒமேகா3, ஒமேகா9 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, டி, ஈ, கே ஆகியவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், நுண்ணிய கோடுகள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தை இளமையாக வைத்திருக்கும். வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கும்.சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.அதிலும் இரவு நேரத்தில் இந்த க்ரீமை அப்ளை செய்து மசாஜ் செய்து வர, இந்த எல்லா சருமப் பிரச்சினைகளும் தீரும்.இயற்கையான சன் ஸ்க்ரீன்,கருவளையங்களை போக்கும்.பரு, தழும்புகளை போக்கும்.வயதாவதை தடுக்கும்.சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.

Feb 15, 2024

தேங்காய் பால் ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்தது.

 தேங்காய் எண்ணெய்  ,தேங்காய் பாலும் கூந்தலுக்கு சிறந்தது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.இரண்டிலுமே லாரிக் அமிலம் காணப்படுகிறது. இது முடியின் வேர்க்கால்களுக்குள் ஊடுருவி ஈரப்பதத்தை கொடுக்கிறது. வறட்சியை தடுக்கிறது.தேங்காய் பாலில் கரோட்டீன் புரதம் காணப்படுகிறது. இது முடியிழைகளை வலுவாக்கி முடி உடைவதை தடுக்கவும் உதவுகிறது. தேங்காய் பாலை ஹேர் மாஸ்க், கண்டிஷனராகக் கூட பயன்படுத்தலாம். ஷாம்பு போட்ட பிறகு தேங்காய் பால் கலந்த தண்ணீர் கொண்டு கூந்தலை அலசலாம். பொடுகுத் தொல்லையை போக்குகிறது, பாதிக்கப்பட்ட கூந்தலை ரிப்பேர் செய்யும். அதிக வெப்பத்தால் முடி வறண்ட உடைவதை தடுக்கிறது. தினமும் கூட அப்ளை செய்யலாம் அல்லது தலைக்கு குளிப்பதற்கு முன்பு அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம். கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது,. உச்சந்தலை எரிச்சல் மற்றும் அரிப்பை போக்கி கூந்தலை பொலிவாக மாற்றுகிறது. 

1 2 ... 16 17 18 19 20 21 22 ... 26 27

AD's



More News