இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பெரிய அளவில் மழை பெய்யாததால் நீர் மட்டம் 12 அடியாக குறைந்து விட்டது. ஏற்கனவே வாரம் ஒரு முறை குடிநீர் சப்ளை நடைபெறுவதுடன், தாமிர பரணி கூட்டு குடிநீர் திட்ட சப்ளையை வைத்து சமாளித்து வருகின்றனர்.இது குறித்து அதிகாரிகள் தரப்பில், தாமிரபரணி குடிநீர் சப்ளை இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தற்போது 12 அடி இருப்பு உள்ளது. மலையில் ஒருமுறை பெரியமழை பெய்தாலும் சப்ளைக்கான தண்ணீர் வரத்து தேவையான அளவு கிடைத்து விடும், மீதி தேவைக்கு கூட்டுக் குடிநீரை வைத்து சமாளிக்க முடியும். கோடை மழையை இராஜபாளையம் நகராட்சியும், மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
.அயன்கொல்லங்கொண்டான் பெரிய கண்மாய்,இராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலை அருகே 150 ஏக்கரில் அமைந்துள்ளது. அயன்கொல்லங்கொண்டான் பெரிய கண்மாய், அய்யனார்கோவில் ஆறு, சேத்தூர் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் ஆற்று நீரை பிரதானமாக கொண்டு மாவட்டத்தில் இரண்டாவது பெரிய கண்மாயாக இருந்து வருகிறது. நீர் நிரம்பியதும், ஐமீன் கொல்லங்கொண்டான், நக்கனேரி, சிரம்பராபுரம் வரை அடுத்தடுத்த கண்மாய்களுக்கும் நீர் தேங்குவதன் மூலம் 300 ஏக்கர் நேரடியாகவும் , ஆயிரகணக்கான ஏக்கர் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர பல்வேறு கிராமங்களுக்கும் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் கண்மாயின் பிரதான ஷட்டர்கள் சேதம் அடைந்துபல ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்காததால் தண்ணீர் வீணாகிறது. நிரந்தர தீர்வாக தண்ணீர் வற்றும் காலங்களில் இருந்தே ஷட்டர்களை தரமாக சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .
மதுரை, சென்னை செல்லும், அதிவேக விரைவு ரயில்களுக்கு நம் நகரிலிருந்து இணைப்பு ரயில் சேவை இருந்தால் முதியோர், குழந்தைகள், நோயாளிகள், தொழில், கல்வி உள்ளிட்ட பயணர்களுக்கு மிகவும் சௌகர்யமாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர். இந்த ரயில் சேவை தென்காசியில் இருந்து நம் நகர் வழியே செல்வதற்கு நீண்ட காலமாக கோரிக்கை இருந்துவருகிறது. இக்கோரிக்கை என்ற நிறைவேறும் இக்கோரிக்கை என்று நிறைவேறும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை தொடரை ஒட்டிய இராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா, பருவநிலை மாற்றம் காரணமாக ,விளைச்சல் அதிகரித்து பருவம் தவறிய மழையினால் மாங்காய்களில் வங்கு பிரச்சனை காரணமாக விலையின்றி மரங்களிலேயே காய்கள் பறிக்காமல் விடும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் மா, குத்தகை விவசாயிகள் இடையே கேள்வி இல்லாததால் ஒரு வருடத்திற்கு அடிக்க வேண்டிய தொடர் மருந்து பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மா மரங்களில் பூ பூப்பது குறைந்துள்ளது. இது குறித்து விவசாயி தினேஷ் சங்கர் பராமரிப்பு குறைவு தகுந்த விலை, தொடர்சந்தை தேவை காரணமாக மா விவசாயத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குத்தகை எடுத்த விவசாயிகள் கட்டுபாடியாகாத நிலையை கூறி தற்போது கேட்பாரற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் அறிவித்தபடி இப்பகுதியில் மாம்பழ கூழ் தயாரிப்பு தொழிற்சாலை ஏற்படுத்தியிருந்தால் நஷ்டத்தை தவிர்த்திருக்கலாம் என்றார்.
இராஜபாளையம் காமராஜ் நகர் 20-வது வார்டில் ,பழைய பஸ்டாண்ட் பின்புறம் காமராஜ் நகர் 6 தெருக்கள், சர்ச் தெரு ரயில்வே பீடர் ரோடு, வடக்கு பகுதி, செவல்பட்டி தெற்கு தெரு ஆகியவை இவ்வார்டில் உள்ளன. நகராட்சியிலேயே அதிக வரி வருவாய் வரும் ஏ பிரிவில் இருந்தும் போதிய மின்விளக்கு, குப்பை அகற்றும் பணி நடைபெறுவதில்லை. சமூக விரோதிகள் நடமாட்டம், திருட்டு அதிகளவில் உள்ளது. தினசரி தூய்மை பணி செய்தல், குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், சாலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், வேண்டும் என இந்த வார்டு மக்கள் எதிர்பாதிக்கின்றனர்.
இராஜபாளையம் மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சி பேங்கர்ஸ் காலனிகுடியிருப்போர் நாய்கள் தொல்லை, மழைநீர் கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி இல்லை, சமூக விரோதிகள் நடமாட்டம் உட்பட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகின்றனர், வாறுகால் இன்றி வெளியேற்றப்படும் கழிவுநீரோடு, மழைநீர் ஆங்காங்கு தேங்கி நிற்பதால் பகல் நேரங்களிலும் கொசு தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். திருவள்ளுவர் நகரிலிருந்து நுழையும் பகுதி மின்விளக்கு வசதியில்லை. இதனால் இருட்டில் நின்றபடி வேறு பகுதியில் இருந்து வரும் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.போலீசாரின் ரோந்தும் கண்காணிப்பு கேமராவும் அவசியமாகிறது என்று கூறுகின்றனர்.
பஸ் எப்படி காதை செவுடாக்கும் என்கிறீர்களா ? நம் நகரில் உள்ள தனியார் பஸ்கள் மக்களை கவர்கிறோம் என்ற பெயரில் காதுகளை செவிடாக்கும் வகையில் ஸ்பீக்கர்களை அலறவிட்டு ஒட்டுகின்றனர். பஸ்களில் பயணிக்கும் முதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.ஆரம்பத்தில் பயணிகளுக்கு இது பிடித்தாலும், தற்பொழுது செல்போனில் ஹெட்போன்வைத்துக் கேட்கும் காலமாகிவிட்டது. இது தேவையில்லை. கண்டக்டர்களிடம் சப்தத்தைக் குறைக்கச் சொன்னாலும் குறைப்பதில்லை இதை யார் தடுப்பது என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதி கண்மாய் ஒட்டிய இடங்களில் நெல், வாழை, கரும்பு பயிர்களும், மற்ற இடங்களில் தென்னை, மா உள்ளிட்ட தோப்புகளும் சீசனுக்கு ஏற்ற பயிர்கள் சாகுபடி அதிகம். .இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்துள்ள நிலையில் விவசாய தோப்புகளில் தண்ணீருக்கு பற்றாக்குறை இல்லை. இந்நிலையில் சீரான இடைவெளிகளில் உழவு பணிகள் மேற்கொண்டும் பெய்து வரும் மழையால், பார்தீனிய களைச் செடிகளை கட்டுப்படுத்த தெரியாமல் விவசாயிகள் தவிப்பில் உள்ளனர். பார்த்தீனிய களைச் செடிகளை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இராஜபாளையம் நகர் பகுதியில் இருந்து மலையடிவாரத்தில் அமைந்துள்ள நீர் காத்த அய்யனார் கோவில், ஆறு,மூலிகை சித்தர் மடம் ,அருகாமை பகுதியில் 6 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை துறையினர் மெயின்ரோட்டை அகலப்படுத்தி சீரமைத்தனர்.விவசாய தோப்பு பகுதிகளை நாடும் மக்கள் போக்கவரத்து அதிரித்தது முடங்கியார் பாலம் அடுத்து ரோடு வளைவில் மெட்ரிக் பள்ளி அருகே குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகி வருகிறது. மூன்று ரோடு சந்திப்பாக அமைந்த இந்த ரோட்டில் இருந்து விவசாய நிலங்களுக்கும், கணபதி சுந்தரநாச்சியார்புரம், புதூர் கிருஷ்ணாபுரம், சேத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் இணைப்பு ரோடாக இருந்து வரும் நிலையில் வாகனங்கள் சென்று மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய் உடைப்படை சரிசெய்து சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதலாம், இரண்டாம் பிளாட்பார்மில் இருந்து தான் பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளான திருட்டு, பொருட்கள் ஆட்களை தவற விடுதல். விபத்துக்கள் குறித்து ரயில்வே போலீசாரிடம் முறையிட வேண்டும். மூன்றாவது பிளாட்பார்மில் போலீஸ் ஸ்டேஷன் இருப்பதால், நடைமுறை சிக்கலால் புகார்கள் விடுபடுகின்றன. போலீசாரும் ஒவ்வொரு முறையும் நடைமேடை ஏறி இறங்கி ஸ்டேஷன்களுக்கு செல்வதில் சிரமம் உள்ளதால் மாற்ற, வழி காணவேண்டும்.தற்போது அம்ரித் பாரத் திட்டத்தில் ஸ்டேஷன் மேம்பாட்டிற்கான கட்டட பணிகள் துவங்க உள்ள நிலையில் பயணியர் சுலபமாக தொடர்பு கொள்ளும் வகையில் முதலாவது பிளாட்பார்மில் மாற்றி அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.