25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பழமொழி.

Feb 27, 2024

கோல் ஆட குரங்கு ஆடும்

கோல் ஆட குரங்கு ஆடும்சொல்லப்படும் பொருள்:குரங்காட்டி ஆடு என்று சொன்னால் குரங்கு ஆடாது. கோலை எடுத்து மிரட்டினால் தான் ஆடும்.உண்மையான விளக்கம்என்னதான் சிறு பிள்ளைகளுக்கு நல்லொழுக்கங்களை சொல்லி கொடுத்தாலும், கண்டித்து சொன்னாலொழிய மனதில் பதியாது.

Feb 20, 2024

பெண் புத்தி பின் புத்தி.

பெண் புத்தி பின் புத்தி.சொல்லப்படும் பொருள்:பெண்கள் எந்த ஒரு செயலையும் முன் யோசனை இல்லாமல் செய்து விடுவார்கள். அதற்கு பின் வருத்தப்படுவார்கள்.உண்மையான விளக்கம்:உங்கள் எந்த ஒரு முடிவாயினும், செயலாயினும் பின் விளைவுகளை யோசித்து அதற்கு ஏற்றார் போல முடிவு எடுப்பார்கள் என்பதே சரியான பொருள்.நாம் அதையே தலைகீழாக புரிந்து கொண்டு சொல்கிறோம்.

Feb 06, 2024

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்க கூடாது.

சொல்லப்படும் பொருள்:கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னத்தில் கை வைத்து கொண்டு உட்கார கூடாது.உண்மையான விளக்கம்:கப்பல் விடும் அளவிற்கு செல்வம் இருந்து, பின் கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னமிடுதல் - திருட்டு (கன்னத்தில் கை ) கூடாது.

Jan 30, 2024

தை பிறந்தால் வழி பிறக்கும்.

தை பிறந்தால் வழி பிறக்கும்.சொல்லப்படும் பொருள்: தை மாதம் பிறந்தால் நல்ல வழி அல்லது நல்ல விஷயம் நடக்கும் .உண்மையான விளக்கம்:தை மாதத்தில் அறுவடை காலத்தில், விவசாயிகளின் கையில் பணவரவு இருக்கும். அதை வைத்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்யலாம்.இன்னொரு பொருள், வயலில் முளைத்து இருக்கும் நெல் மணிகள் வரப்பை அடைத்து கொண்டு வழியில்லாமல் வளர்ந்து நிற்கும். தை மாதம் பிறந்தவுடன் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, வரப்பில் நடக்க வழி கிடைக்கும்.  

Jan 23, 2024

ஏரி உடைவதற்கு முன்னால் அணை போட வேண்டும்

ஏரி உடைவதற்கு முன்னால் அணை போட வேண்டும் விளக்கம்: ஆடம்பர செலவுகளை அதிகமாய் செய்து குடும்பம் நடுத்தெருவிற்கு வருவதற்கு முன்பே செலவுகளை குறைத்து சிக்கனத்தை பெருக்கி வளமாக வாழ வேண்டும் எனும் எச்சரிக்கையை இப்பழமொழி செய்கிறது .வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் வருமுன் காப்பது நல்லது ,பொருள்: அணை போட வேண்டும்- காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

Jan 16, 2024

ஏழை சொல் அம்பலம் ஏறாது

ஏழை சொல் அம்பலம் ஏறாதுவிளக்கம்: ஏழையின் பக்கம் நீதி இருந்தாலும் அவன் பொருளில்லாதவன் என்னும் காரணத்தால் அவன் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள் என்பதை இப்ப பழமொழி விளக்குகிறது.பொருள்: அம்பலம் ஏறாது - செல்லுபடியாகாது.

Jan 09, 2024

.ஊதாரிக்கு பொன்னும் துரும்பு

.ஊதாரிக்கு பொன்னும் துரும்பு பொருள்: சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு, எவ்வளவு பெரிய செல்வமும் ,சிறு துரும்பாகவே தெரியும்.

Jan 02, 2024

உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது

உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது பொருள்: உறவினர்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் உறவு நீடிக்காது. கொடுத்த கடனை கேட்காமல் விட்டுவிட்டால் அதை திரும்ப பெற முடியாது. 

Dec 26, 2023

கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான்

கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான் பொருள்: தனது திறமையின்மையை மறைக்க பிறவற்றை சிலர் குறை கூறுவர். இதை கூறுவதே இந்த பழமொழியின் பொருள். 

Dec 12, 2023

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே பொருள்: ஒரு விசயம் நடப்பதற்கு முன்பாகவே அதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே நமக்கு தெரியும். உதாரணமாக தேர்தல் வருகிறது என்றால் உடனே சாலை போடுவது போல.

1 2 ... 9 10 11 12 13 14 15 16 17 18

AD's



More News